Sunday, February 1, 2015

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உச்சநீதிமன்றம் கண்டனம்

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க  மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, பிப்.1 பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான வன்முறை சமீப காலமாக அதிகரித்து வருவது குறித்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.தேவ் தலைமையிலான அமர்வு மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளது.  குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது, குழந்தைகள் கடத்தலையும், அவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதையும் தடுப்பது தொடர்பாக மேற்கொள் ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கடந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி பிறப்பிக்கபட்ட உத் தரவை, மாநில அரசுகளுக்கு டிசம்பர் 12-ஆம் தேதிதான் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த மெத்தனப்போக்கு கவலையளிப்பதாக உள்ளது.

மேலும் இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலை யிடாமல் இருக்கிறது. பாலியல் வன்முறைகள் மற்றும் குழந்தைகடத்தல் போன்ற குற்றங்கள் மீது மத்திய அரசு மாநில அரசுகளின் மீது பழியைப் போட்டு தனது கட மையில் இருந்து ஒதுங்கி விடுகிறது; இது நாட்டை வழி நடத்திவரும் அரசுக்கு அழகான செயலல்ல. பெண் களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு இதைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரி வித்துள்ளனர்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...