Tuesday, January 27, 2015

சங்கராச்சாரியாரும் - மதமாற்றமும்




இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய மதம் பவுத்த மதமாகும். எனவே புத்த மதத்தை இந்தியர்களின் தாய் மதம் என்று கருத வாய்ப்புள்ளது. புத்த மதத்தை ஒட்டி தோன்றிய மதம் சமண மதம். இந்த இரு மதங்களும் தற்போது நடக்கும் கலியுகத்தில் மனிதர்களால் தொடங்கப்பட்டவை யாகும். இந்த மதங்கள் தோன்றிய போது இந்துமதம் தோன்றவில்லை.

ஆனால்  அப்போது  ஆரியர்கள் சிந்து சமவெளியில் இருந்து கங்கைச் சமவெளிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் செய்த யாகங்களில் ஆயிரக் கணக்கான கால்நடைகள் பலியிடப்பட் டன. இதனால் பாதிக்கபட்ட கங்கைச் சமவெளி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது ஆரியர் களின் யாகங்களை எதிர்த்தும் உயிர் களைக் கொல்வதை எதிர்த்தும் பவுத்த மதமும் சமண மதமும் தோன்றின. இந்த சூழ்நிலையில் இந்து மதத்தின் தோற்றம் பற்றியும்  மதமாற்றம் பற்றியும் மறைந்த  காஞ்சி மடாதிபதி அவர்கள் தனது நூலில் (தெய்வத்தின் குரல்) கூறியுள் ளதை தொகுத்து கீழே தரப்படுகின்றது

இந்து மதத் தோற்றம்

பவுத்த மதம் மற்றும் சமண மதம் போல அல்லாமல் இந்து மதம் எந்த ஒரு தனி மனிதனாலும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு இடத்தில் நிறுவப்பட வில்லை. இந்தக் கலியுகத்தில் இந்தி யாவில் வேத காலந்தொட்டு புத்தர் காலம் வரை பல மகான்கள் ரிஷிகள் தோன்றினார்கள்.

இவர்கள் மனித வாழ்க்கை பற்றியும் உலகத்தைப் பற்றியும் பல  தத்துவங்களை மக்களிடம் பரப்பினார்கள். ஆனால் இவர்கள் யாரும் எந்த ஒரு மதத்தையும் தோற்று விக்கவில்லை. ஆனால் ஆரியர்கள் வேதகாலத்தில் எந்த தர்மத்தைக் கடைப் பிடித்தார்கள்.

என்பது பற்றி  மறைந்த பெரிய சங்கராச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் என்ற நூலில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

1)   ---ஆனால் ஹிந்து என்பது  நமது பூர்வீகப் பெயர் அல்ல.வைதிக மதம் சனாதன தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது இந்து மதத்திற்கு எந்த பெயரும் குறிப்பிடவில்லை. ( பக் 126)

2)-----பல்வேறு மதங்கள் இருக்கிற போதுதான் ஒன்றிலிருந்து இன்னொன் றுக்கு வித்தியாசம் தெரிவதற்காகப் பெயர் கொடுக்க வேண்டும். ஒரே மதந்தான் இருந்தது  என்றால் அதற்குப் பெயர் எதற்கு?  (பக். 127)

3) ---புத்தமதம் என்றால் அது கவுதம புத்தரால் ஸ்தாபிக்கப்பட்டது. எனவே அவருக்கு  (புத்தருக்கு) முன் அந்த மதம் இல்லை என்றாகிறது. --- (பக். 127)

4)- --(பெயரில்லாமல் இருந்த தற்போதைய இந்து மதத்திற்கு) அப்படி ஒரு ஸ்தாபகரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

பிரம்ம சூத்திரம் செய்த வியாசரை சொல்லலாமா கீதை சொன்ன கிருஷ்ண பரமாத்மாவை சொல்லாமா என்றால் அவர்களும் தங்களுக்கு முன்னே இருக்கிற வேதங் களை சொல்லுகிறார்கள்.. ( கிருஷ்ண பரமாத்மா  மற்றும்  கவுதம புத்தர் துவாபரயுகத்தில் அவதரித்தவர்கள். (விக்கிபீடியா தகவல்) ஆனால் ரிக் வேதம் இந்த கலியுகத்தில் இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள் சிந்து சமவெளியில் தங்கிய போது சுமார் கிமு 1500-ல் இயற்றப்பட்டது. இது ஒரு பெரிய முரண்பாடு ஆகும் ) (பக் 128)

5)----- இந்த வேதங்களை) ரிஷிகள் தபோ மகிமையால் இந்த சிருஷ்டியிலிருந்து ஜீவர்களை கடைத்தேற்றுகிற சப்தங் களை (வேதங்களை) மந்திரங்களாகக் கண்டார்கள். ( பக் 129 )

இவ்வாறு பல ஆயிரம் ஆண்டு களாக தற்போதைய இந்து மதம் பெயர் இல்லாமலும் ஸ்தாபகர். (நிறுவியவர்) இல்லாமலும் இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்து என்ற பெயர் எப்படி வந்தது என்பதை சங்கராச்சாரியார் தனது நூலில் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:-

1)-----இப்போது ஹிந்து மதம் என்று சொல்கிறோமே இதற்கு உண்மையில் இந்த பெயர் கிடையாது.---நம்முடைய பழைய (வேதம் முதலான) சாஸ்திரம் எதிலும்  ஹிந்து மதம் என்ற வார்த் தையே கிடையாது. (பக் 125)

2) -----ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர் தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியைக் கடந்தே பாரத நாட்டுக்கு வரவேண்டி யிருந்தது அல்லவா? ஆனபடியால் ஸிந்துவை ஹிந்து   என்றும் அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும் அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். (பக் 125)

3) ---- நமக்குள் சைவர்கள் வைஷ்ணவர் கள்  என்று வேறாக சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தாம். அவன் வைத்த பெயர் நம்மை காப்பாற்றியது.-------------------- இப்போது ஹிந்து சமூகம் என்று பொதுப் பெயரில் சொல்லப் படும் சமுதாயத்தை  இப்படி ஏழெட்டு மதங்களாகப் (சைவம் வைணவம்  சாக்தர் முருக பக்தர் ஐயப்பன் பக்தர்) என்று பிரித்து விட்டால் அதற்கு அப்புறம் ஒவ்வொரு ஊரிலும் முஸ்லீம் கிறிஸ்தவர்கள் போன்ற மதஸ்தர்கள் தான்  அதிகம் இருப்பார்கள். (பக். 267)

4) ----ஹிந்து என்று சொல்லப்படும்  நமது மதம் ஒன்றே ஆதியில் லோகம் முழுவதும் பரவியிருந்தது. அந்த ஒரே மதம் இருந்ததால்தான் அதற்குத் தனியே பெயர் வைக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனால் தான் நம் ஆதார நூல்களில் ஹிந்து மதத்திற்குப் பெயரே இல்லை.

மதமாற்றம்

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உலக நியதி. கடவுள் படைத்ததாக சொல்லப்படும் மனிதர்களில்  ஆண்கள் சிலர் அறுவை சிகிச்சை மூலம் பெண் ணாக மாறிய செய்திகள் உண்டு. இதே போல் அறுவை சிகிச்சைகள் மூலம் முகத் தோற்றத்தையே மாற்றுகிறார்கள்.

மேலும் .இதயம சிறுநீரகம கண்கள் போன்றவை மாற்றம் செய்யபடுகின்ற இந்த காலத்தில்  மதமாற்றம் நிகழ்வதில்  ஆச்சரியம் ஒனறும் இல்லை. எல்லா மதங்களும் பொதுவாக சொல்வது நல்ல செயல்களை செய்வதன் மூலம் ஒருவர் சொர்க்கத்தை அல்லது கடவுளை அடைய முடியும் என்பது ஆகும்.

இத்தகைய மதங்களுக்கு    (இந்து மதம் உள்பட)  முன் வாழ்ந்த மனிதர்கள் யாரும் சொர்க்கத்தை அடையவில் லையா? இந்த கேள்வியை கேட்பவர் சங்கராச்சாரியார்.

மதமாற்றம் பற்றி சங்கராச்சாரியார்

1)----- ஹிந்து மதத்தில் கடைப்பிடிக்கப் படும் மதச்சடங்குகள் ரிக் முதலான நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. வேதங்கள் உருவான காலத்தில் இந்து மதம் என்று ஒன்றும் இல்லை. அப்போது இருந்த மதத்தின் பெயர் வைதிக மதம் அல்லது சனாதன தர்மம் என்று அழைக்கப்பட் டது.

அந்த காலத்தில் மற்ற மதங்கள் --- புத்த சமண மதங்கள் சீக்கிய மதம் கிருத்துவ மதம் இஸ்லாமிய மதம் போன்றவை தோன்றவில்லை. எனவே மதம் மாற்றம் எதுவும் நடக்கவில்லை என சங்கராச்சாரியார் கூறுகிறார். மேலும் அவர் கூறுவது கீழே தரப்பட்டுள்ளது.-

2)  ஒரு தேசத்து மக்களே ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு. மாறவும் செய்கிறார்கள். புத்தர் காலத்தில் வேத மதத்திலிருந்து வேத மதஸ்தர்கள் பவுத்த மதத்திற்கு மாறினாரகள். பிற்காலத்தில் எத் தனையோ ஹிந்துக்கள் முகம்மதிய மதத்திலும் கிறித்துவமத்திலும் சேர்ந் திருக்கிறாரகள்.

ஜைனர்கள் வைஷ்ண வர்களாக மாறி புஷ்டி மார்க்கிகள் என்று பெயர் பெற்றிருக்கிறார்கள். (இதிலிருந்து வைணவ மதம் என்பது இந்து மதத்திலிருந்து வேறு பட்டது என்பதை அறியலாம். மேலும் ஜைன மதம் தோன்றியபின்புதான் வைணவ மதம் தோன்றியுள்ளது என்பதையும் அறியலாம்.) (பக் 117 )

3) ---யார் யார் எந்த மதத்திற்குப் போனாலும் கடைசியில் (அத்தனை மதத்தினரும்) ஒரே பரமாத்மாவிடத்தில் வந்து சேருவார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகிற விசால மனப்பான்மை நம் சாஸ்திரங்களிலேயே காணப்படுகிறது. இதனால்தான் பிறரை ஹிந்துவாக மதமாற்ற நம் சாத்திரங்கள் இடம் கொடுக்கவில்லை. (பக் 148)

4) ----- -ஒருத்தனை புது மதத்திற்கு மாற்றுவது என்றால்  அதற்கென ஒரு சடங்கு இருக்க வேண்டும். இப்போது கன்வரட்செய்கிற மதங்களில் எல்லாம் அப்படி ஒன்று ஞானஸ்நானம் என்கிற மாதிரி---- ஏதாவது ஒன்று இருக்கிறது.

மற்ற எந்த மதங்களை விட மிக அதிகமாக சொல்கிற சடங்குகளை சொல்கிற இந்து மத சாஸ்திரங்களைப் பார்த்தால் இப்படி நம் மதத்திற்கு மற்ற மதஸ்தனை  மதமாற்ற ஒரு சடங்கும் இல்லை. இதுவே நாம் மத மாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி.  ( பக் 114)

5).----தங்களிடையே கோட்பாடுகளிலும் அநுஷ்டானங்களிலும் சில வித்தி யாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களும் ஒன்று போல் இருக்க வேண்டிய அவசியம் இல்-லை. ஒரே மாதிரி ஆக்காமலே எல்லா மதங்களும் (மதத்தினரும்) மனத்தில் ஒற்றுமையோடு இருப்பது தான் அவசியம். யுனிபார்மிட்டி அவசியம் இல்லை. யுனிட்டிதான் அவசியம்.  (பக் 115) எனவே இந்து மதத்தில் மத மாற்றம் அனுமதிக்கப் படவில்லை என கூறலாம்.

முடிவுரை:- இயற்கையில் நாள் தோறும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பல முன்னேற் றங்கள்   மற்றும் மாற்றங்கள் நிகழ்கின் றன. அதே போல் மனித குலம் இந்த பூமியில் நீடித்து வாழ மனிதனுக்கு தேவையான வளங்கள் மற்றும் வசதிகள் ஆகியவற்றில் எல்லாம் மாற்றங்கள் நிகழ்கின்றன.

இந்த மாற்றங்கள் எல்லாம் மனிதனின் நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மாற்றி அமைக் கின்றன. முற்றிலும் நம்பிக்கையின் அடிப் படையில் ஏற்பட்ட மத நம்பிக்கைகளை யும் மற்றும் சடங்குகளை மாற்றுவது தவிர்க்க முடியாது. இதனால் மதமாற் றங்கள் நிகழ்கின்றன என அறியலாம்.

- பொறியாளர் கோவிந்தராசன் BE, MBA, MA

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...