Thursday, January 29, 2015

மனிதநேயம்

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த பாதிரி யார் ஜி.யு. போப் தன் கல் லறையில் நான் ஒரு தமிழ் மாணவன் என்று எழுதச் சொன்னார் தமிழ்ப் பற்றின் காரணமாக. அதேபோல் வேளாங்கண்ணி மாதா கோயிலின் பாதிரியார் ஒருவர், தமது கடைசி ஆசையாக எழுதி வைத்தி ருக்கும் வாசகம், மதநல்லி ணக்கத்தின் அடையாளம். அந்த வாசகம் என்ன தெரியுமா?

எனது வாழ்நாளில் பைபிளை முழுமையாகப் படித்து, அதன்படி வாழக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால், குர்ஆனையும் பகவத்கீதையையும் முழு மையாகப் படிக்க முடிய வில்லை. எனவே, நான் இறந்த பிறகு எனது இரண்டு கண்களில் ஒன்றினை ஓர் இஸ்லாமியச் சகோதரருக் கும், இன்னொன்றை ஓர் இந்து சகோதரருக்கும், பொருத்தினால் அவர்கள் மூலமாகவாவது நான் குர் ஆனையும் பகவத் கீதை யையும் படித்தவன் ஆவேன்.
 
அ. யாழினி, பர்வதம், சென்னை-78
கல்கி 11.11.2015 பக்.48

கிறித்தவர்களா? அவர் கள் கீழ்த்தரமானவர்கள்; முஸ்லிம்களா அவர்கள் மிக மிக  மோசம் என்று ஆர். எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்களும் பிஜேபி என்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் குமட்டுகிறார்களே - அவர் களுக்கு இது ஒரு சிறிய காணிக்கை.

எடுத்துச் சொல்லுவது நாமல்ல - அவாளின் கல்கி இதழ்தான்.

வெள்ளைக்காரர்கள் இந்தியாவுக்கு வந்தது கிறித்துவத்தைப் பரப்பத்தான் என்று சொல்லுவதுண்டு. அதே நேரத்தில் அவர்கள் இந்நாட்டு மக்களுக்குக் கல்வியைக் கொடுத்தார்கள்; மருத்துவ உதவியை நல்கி னார்கள் என்பதை மறுக்க முடியுமா?

படிக்காதே - நீ கல்வி கற்பதற்கு உரிமையில்லை! என்று இந்நாட்டு ஒடுக்கப் பட்ட மக்களைப் பார்த்து கூறியது இந்து மதம்; - நீ படி என்று கூறி கல்வியைக் கொடுத்தது கிறித்துவம்.

உடல் முழுவதும் மூளை உள்ளவர் என்று அக்கிரகார வாசிகளால் ஆகாயத்தில் தூக்கி வைத்துப் பாராட்டப் படும் அந்த ராஜாஜி இரண்டு முறை சென்னை மாநிலத் திற்கு முதலமைச்சராக வந்திருந்த போதிலும் (1937இல் ஒரு முறை 1952இல் இன்னொரு முறையும்) அவர் செய்தது என்ன? பள்ளி களை இழுத்து மூடியது தானே? 1937இல் 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார் என்றால் 1952இல் 6000 பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவில்லையா?

அந்தக் கெட்ட புத்தியே அவருக்கு எதிராக அமைய வில்லையா? தந்தை பெரி யார் உருவில் எழுந்த அந்த எதிர்ப்பு - ஆச்சாரியாரின் பொதுவாழ்வையே அஸ்த மிக்கச் செய்யவில்லையா?

கிருத்தவர் ஒருவர் தமது இரு கண்களில் ஒன்றை இஸ்லாமியருக்கும் மற்றொன்றை ஒரு இந்து வுக்கும் பொருத்தச் சொன் னாரே - அந்த மனிதநேயர் எங்கே! நாத்திகனுக்கு வைத் தியம் பார்க்காதே என்று சொன்ன இந்து மதத் தலை வர் ஜெகத் குரு சங்கராச் சாரியார் எங்கே? (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியின் - தெய்வத்தின் குரல் 3ஆம் பாகம் - பக்கம் 148). அடையாளம் காண்பீர்!

- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...