Thursday, April 3, 2014

பெல் ஒப்பந்தத் தொழிலாளர்: வரவேற்கவேண்டிய தீர்ப்பு

திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணி யாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்த்த ஒரு தீர்ப்பை மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வழங்கியுள்ளார். 1978 ஆம் ஆண்டு முதல் பெல் நிறுவனத்தில் ஒப் பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றத் தொடங்கினர்.

அவர்களிலே பட்டதாரிகள் உண்டு, பட்டயப் படிப்புப் படித்தவர்கள் உண்டு. எத்தனை ஆண்டுகாலம் பணியாற்றி னாலும் அவர்கள் தினக் கூலிகள் போலத்தான் - பணி நிரந்தரப்படுத்தப்படுவதில்லை; 58 வயது  முடிந்தவுடன், எந்தவிதமான பலன்களுமின்றி வெறும் கையோடு வெளியே போகவேண்டியதுதான்.

துப்புரவுப் பணியிலிருந்து அந்த நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யாத வேலையில்லை; தொழில் நுட்பம் தொடர்பான பணிகளாக இருந்தாலும் அவை அவர்களுக்கு அத்துப்படியே!

வேலையை வாங்கிக்கொள்வார்கள் - ஆனால், வேலைக்குரிய அங்கீகாரம் மட்டும் அளிப்பதில்லை. காரணம், அவர்களில் எவரும் உயர்ஜாதிக்காரர்கள் கிடையாதே!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்தான் நூற் றுக்கு நூறு சதவிகிதமாகும். அதனால் பெல் நிறுவனத்தின் உயர்ஜாதி ஆளுமை அவர்களை அலட்சியப்படுத்தி வந்தது.

திராவிடர் கழகம் - அதன் பெல் தொழிலாளர் கழகம் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து இந்த ஒடுக்கப் பட்ட நாதியற்ற மக்களின் அடிப்படை உரிமை களுக்காகக் குரல் கொடுத்தே வந்திருக்கிறது; தேவைப்படும்பொழு தெல்லாம் போராட்டங்களையும் நடத்தியிருக் கிறது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையிலும்கூட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுண்டு.

இதில் என்ன கொடுமையென்றால், அரித்துவாரில் இயங்கிவரும் இதே பெல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 557 பேர் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெல் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங் களிலும் இயங்கி வருகிறது. ஒரே அமைப்பின்கீழ் இயங்கும் நிறுவனம், இடத்திற்கு ஏற்ப விதிகளை மாற்றிக் கொள்ள முடியுமா? அப்படி மாற்றிக் கொண்டு செயல்பட்டு இருக் கிறது என்றால், அது ஒரு வகையான ஒழுங்குக் குறைவான நிர்வாகச் சீர்கேடு என்றே கருதப்படவேண்டும்.

ரயில்வேயில் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலா ளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டும் உள்ளனர். நீண்ட போராட் டத்திற்கும், வேலை நிறுத்தத்திற்கும் பிறகு நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றி வந்த 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் நடந்தாலும் திருவெறும்பூர் பெல் நிறுவனம் மட்டும் சற்றும் அசைந்து கொடுக்காமல் இடித்த புளிபோலவே இருக்கும்.

இதற்கு முடிவுகட்டும் வகையில் சட்ட ரீதியாகச் செயல் படுவது என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் தீர்மானிக்கப்பட்டு, திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் இயங்கிவரும் பெல் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், அதன் பொதுச்செயலாளர் தோழர் மு.சேகர் மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடர்ந் தார். திராவிடர் கழக சட்டத் துறைத் தலைவர் வழக்குரை ஞர் த.வீரசேகரன் சங்கத்தின் சார்பில் வாதாடினார்.

நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் அவர்கள் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திலும், அரித்துவார் பெல் நிறுவனத் திலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டுள் ளதைச் சுட்டிக்காட்டி, திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்தவேண்டும் என்று சிறப்பான தீர்ப்பினை அளித்தார் (28.2.2014). தீர்ப்புக் கிடைத்த எட்டு வாரங்களுக்குள் ஆணை நிறைவேற்றப்படவேண்டும் என்றும் நீதிபதி, தம் தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளார்.

பெல் நிறுவனம் இந்தத் தீர்ப்பை செயல்படுத்தியே தீர வேண்டும். பொதுவாக தொழிலாளர்கள் - பணியாளர் களுக்குச் சாதகமாக தீர்ப்பு வரும்பொழுதெல்லாம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்து, காலம் கடத்துவதை வழமையாகக் கொண்டது திருவெறும்பூர் பெல் நிறுவனம். அவர்கள் செலவு செய்வது சொந்தப் பணம் அல்லவே - நிறுனத்தின் பணம்தானே! தொழிலாளர்கள், பணியாளர்கள் நீதிமன்றம் செல்லவேண்டுமானால், அவர்கள் சொந்தப் பணத்தையல்லவா செலவழித்துத் தீரவேண்டும்.

இந்த நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கி செயல் பட்டுக் கொண்டிருக்கிறது பெல் நிர்வாகம். இந்தப் பிரச் சினையிலும் அவ்வாறு நடந்துகொள்ளாது என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் உள்ள நவரத்தினங்களுள் ஒன்று பெல் நிறுவனம். இலாபத்தைத் திரட்டிக் கொடுக்கிறது; அந்த இலாபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பின் பங்கு இருக்கிறது என்பதை மனிதாபிமானத் துடன் ஒப்புக்கொண்டு, நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை யைச் செயல்படுத்தி, சுமூகமான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் திராவிடர் தொழி லாளர் கழகமும், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமும் வெறும் கூலி தொடர்பான சமாச்சாரங்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் அமைப்புகளாக இல்லாமல், தொழிலாளர்கள் மத்தியில் சமூகப் பொறுப்பையும், பகுத்தறிவு உணர்வையும் வளர்த்தெடுக்க அயராது பாடுபட்டுக் கொண்டுவரும் அமைப்புகளாகும்.

மதவாத சக்திகள் வாய் பிளந்து, அதற்குத் தொழிலா ளர்கள் பலியாகி விடக் கூடாது என்பதற்காக எப்பொழு துமே விழிப்போடு பணியாற்றும் அமைப்பாகும்.

அந்த வகையில் கழகத்தின் இந்த அமைப்புகளையும், அவற்றை வழிநடத்தும் நிர்வாகிகளையும் பாராட்டுகி றோம். சங்கத்தை மேலும் வளர்த்து, செழுமைப்படுத்தி, தொழிலாளர்கள் ஒற்றுமையைக் கட்டிக் காத்து, அவர்கள் மேலும் பெறவேண்டிய உரிமைகளுக்காகத் தொடர்ந்து பாடுபடும் என்பதை இந்த அமைப்பில் இல்லாத தொழி லாளர்த் தோழர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...