Thursday, December 19, 2013

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லையானால் தொடர்போராட்டத்தில்ஈடுபடுவோம்!

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லையானால் தொடர்போராட்டத்தில்ஈடுபடுவோம்! செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் அறிவிப்பு


தஞ்சாவூர், டிச.15- தமிழக மீனவர்கள் தாக்கப் படுவது தொடர் கதையாக உள்ளது. இதற்கொரு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லையானால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தஞ்சாவூர் - வல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது (14.12.2013).

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். இது ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. கண்ணீரும் கம்பலை யுமாக அம்மக்கள் பேட்டி கொடுப்பதை  பார்க்கும் பொழுது ரத்தக் கண்ணீர் வடிக்கிறோம்.

மாநில அரசு பிரதமருக்கு எழுதுவது - மத்திய அரசு ஏதோ சமாதானம் கூறுவது - கவலையளிக் கிறது என்று கூறுவது எல்லாம் கேட்டுக் கேட்டுப் புளித்து விட்டது. இதற்கு நிரந்தரமான தீர்வை மத்திய அரசு எடுக்காவிட்டால் தொடர் போராட் டத்தை நடத்துவோம் டெசோ தலைவரின் கருத்தினையும் அறிந்து அத்தகைப் போராட்டத்தை மேற்கொள்வோம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. என்பதை மத்திய அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதக் கலவரத் தடுப்பு சட்டம்

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மதக் கல வரத் தடுப்புச் சட்டம் வரவேற்கத்தக்கது.

தேவைப்படும் தருணத்தில் மாநில அரசுகளைக் கலந்து கொண்டு, அவற்றின் ஒப்புதலோடு மத்திய அரசு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மதக் கலவரங்களைத் தடுக்க முனைவது அவசியமே!

இதனைக் கூடாது என்று கூறுபவர்கள் கூக்குரல் போடுபவர்கள் யார்? நாடெங்கும் மதக் கலவ ரத்தைத் தூண்டுபவர்கள்; மோடியைத் தூக்கி நிறுத்துபவர்கள்தான்; அவர்கள் மடியில் கனம் இருப்பதால், இதனை எதிர்க்கிறார்கள்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்

இந்திய அரசமைப்புச் சடடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். சீர்திருத்த எண்ணம் உருவாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.(51A (h).

இதன் அடிப்படையில் மகாராட்டிர மாநிலத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருநாடகா வில் கொண்டு வரவிருப்பதாக மாநில முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

தந்தை பெரியார் பிறந்த  தமிழ்நாட்டிலும் இத்தகு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.  மத்திய அரசே கூட இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இந்த நேரத்தில் வலியுறுத் துகிறோம்.

நீதிபதி கங்குலி விவகாரம்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி மீது பாலியல் குற்றத் தொடர்பான புகாரின் அடிப் படையில் உச்சநீதிமன்றம் அமைத்த குழு  குற்றச் சாற்றுக்குப் பூர்வாங்கமான தடயங்கள் இருக் கின்றன என்று கூறியுள்ளது. கங்குலி ஓய்வு பெற்ற தால் அவர்மீது நடவடிக்கை எடுக்க இயலாது என் கிற முறையில் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரி வித்துள்ளது.

உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மாநில அரசு சட்டப்படியான நடவடிக்கையைத் தொடர வேண்டும்.

மற்றவர்களைவிட நீதிபதியாக இருக்கக் கூடியவர்கள் நேர்மையான முறையில் ஒழுக்கமான முறையில் நடந்து காட்ட வேண்டும். வேலியே பயிரை மேயும் நிலையை அனுமதிக்கக் கூடாது.

மேற்கு வங்க மாநிலத்தில் மனித உரிமைக் குழு தலைவராக கங்குலி இருந்து வருகிறார். நேர்மை அவரிடம் இருக்குமானால் அந்தப் பதவியிலிருந்து அவர் விலகி இருக்க வேண்டும்; அவர் விலகாத நிலையில்  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கேரளாவில் தமிழர்கள் பிரச்சினை

கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் அட்டப்பாடி, சோலையூர், புதூர் போன்ற கிராமங் களில் 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் கேரள அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

40 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள் அவர்கள்.

அந்தப் பகுதிகளை தமிழர்கள் ஒன்றும் ஆக்கிர மிக்கவில்லை; பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்; பத்திரவுப் பதிவுகள் எல்லாம் முறைப்படி இருக் கிறது. 12 ஆண்டுகள் குடியிருந்தாலே அவர்களுக்கு உரிமை கிடைத்து விடுகிறது.(Prescription Right)
இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு அவசரம் காட்ட வேண்டும்  கேரள முதல் அமைச்சருடன் உடனே பேச வேண்டும், மத்திய அரசும் உடனடி யாகத் தலையிட வேண்டும்.

இந்தியாவில் எந்த ஒரு இடத்திலிருந்தும் இன் னொரு இடத்திற்கும் செல்லலாம். குடியேறலாம் என்று தான் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு கிறது - இந்திய ஒருமைப்பாடுபற்றிப் பேசுபவர்கள் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும்.

மதவாத சக்திகளை அனுமதிக்கக் கூடாது

மோடி அலை மோடி அலை என்று ஓர் அலையைக் கிளப்பி விடுகிறார்கள்.

மோடி அலை வீசுவது உண்மையென்றால், டில்லியில் அல்லவா அது செல்லுபடியாகி இருக்க வேண்டும். டில்லியில் தான் மோடி அதிகமாக அக்கறை செலுத்தினார் - பிரச்சாரம் செய்தார்; முடிவு வேறு விதமாகி விட்டதே!

மத்தியப் பிரதேசத்தில்கூட வெற்றி பெற்றதற்குக் காரணம் மோடி அல்ல. அம்மாநில முதல் அமைச் சர்தான் காரணம்; மோடி பேசிய பொதுக் கூட்டத் தில்கூட அம்மாநில முதல்அமைச்சர் சவுகான் படத்தைத்தான் பொது மக்கள் தூக்கிக் காட்டி னார்கள்.

புதிய புதிய யுக்திகளையெல்லாம் பயன்படுத்தி செயற்கையான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். பன்னாட்டுப் பண முதலைகள் மோடியின் பின்னணியில் இருக்கின்றன. அவர்கள் பணத்தை வாரி இறைத்து நரேந்திர மோடியை பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்க முயற்சிக் கிறார்கள் என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள் வார்கள்.

உண்மை வெளிவரும் - ஒப்பனைகளும் அப்பொ ழுது கலையும்.

பெரியார் உலகம்

திருச்சியையடுத்த சிறுகனூரில் 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவ  வெண்கலச் சிலையை நிறுவும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

பெரியார் வாழ்க்கைவரலாறு ஒலி, ஒளிக் காட்சிகள் நூலகம் என்று தந்தை பெரியார்பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வகையில் பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது.

இதற்காக 1005 சவரன் தங்கத்தை கொடுத்துள் ளார்கள். கட்சி, ஜாதி, மதங்களைக் கடந்து மக்கள் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சிக் குரியது என்று குறிப்பிட்டார்.

மகளிர் மசோதா

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண் களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா 1996 முதல் நிலுவையில் உள்ளது. உடனடியாக இந்த சட்டம் உள் ஒதுக்கீடுடன் கூடியதாக நிறைவேற்றப்பட வேண்டும்.

பெண்களுடைய வாக்குகள் கிட்டதட்ட சரி பங்கு இருக்கின்றன என்பதை அரசியல் கட்சிகள் மறந்திட வேண்டாம்!

- செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் 14.12.2013

Read more: http://www.viduthalai.in/headline/72098-2013-12-15-10-21-34.html#ixzz2nzD2xaku

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...