Monday, September 16, 2013

திமிர் மஹாவிஷ்ணுவுக்கா? மகாபலிக்கா?


 மகாபலி எனும் சக்கரவர்த்தி வீரமும் கொடைக்குணமும் மற்றும் செருக்கும் உடையவனாக திகழ்ந் தான். மகாபலியின் செருக்கை அடக்க, மஹாவிஷ்னு "வாமனன்" அவதாரம் எடுத்து அவனது அரண்மனைக்குச்சென்று தானம் கேட்டார்.

வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என அறிந்தும் என்ன வேண்டும் என்று கேட்டான் மகாபலி. மூன்று அடி மண் வேண்டும் என்றார் மஹாவிஷ்னு. மகாபலி தானம் செய்து கொடுக்கத் தயாரானான். மஹாவிஷ்ணு ஓங்கி உலகளந்த உத்தம ரானார். அதைக் கண்ட மகாபலியின் மகன் நீங்கள் வந்த குள்ள உருவத்தில்தான் மண்ணை அளக்கவேண்டும் என் றான். மஹாவிஷ்ணுவுக்கு கோபம் மண்டைக்கு ஏறியது. உலகளந்த உத்த மனாய் ஒரு அடியில் மண்ணுலகமும் இரண்டாவது அடியில் விண்ணுலகமும் அளந்து மூன்றாவது அடிக்கு மண் எங்கே என்று கேட்டார் விஷ்ணு. இப்படி மகாபலி யின் செருக்கை அடக்கிய நாள்தான் திருவோணம்.  - தினமலர் பக்திமலர்

மண்ணுலகத்தை மஹாவிஷ்ணு எங்கே நின்றுகொண்டு தாண்டினார்?
விண்ணுலகத்தை இரண்டாவது அடியில் தாண்டிய மஹாவிஷ்ணு அடுத்த காலை எங்கே வைத்தார்?.

மண்ணுலகமும் விண்ணுலகமும் அளக்கப்பட்டபோது மகாபலி எங்கே நின்றுகொண்டிருந்தான்?

தினமலருக்கே குழப்பம் ஏற்பட்டதால் தான் மகாபலி தலையில் காலை வைப்பது போல் படம் வரையப்பட்டதா?

அல்லது சத்திரிய, சூத்திர மக்களை இழிவுபடுத்துவதற்காக பூணுல் சகிதமாக மஹாவிஷ்ணு தன் காலை மகாபலி தலையில் வைப்பதுபோல் படம் வரைந்து தினமலர் புளகாங்கிதம் அடைந்திருக் கிறதா?

வாமனன் உருவத்தில் தானம் கேட் டவன் அதே உருவத்தில் மண்ணை அளப்பதுதானே சரி?

இதைத்தட்டிக் கேட்டால் மகாபலி மகன் மீது மஹாவிஷ்ணுவுக்கு கோபம் வருவது சரியா?

- கி. தளபதிராஜ்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...