Tuesday, June 11, 2013

பிஜேபியின் பிற்போக்குத்தனம்:

திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் கூடாதாம்
இந்தூர், ஜூன் 11-  பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் பெண்கள் திருமணத் திற்கு முன் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் அணுமதிக் கக் கூடாது என மத்திய பிரதேச பா.ஜ., துணைத் தலைவரும் மக்களவை எம்.பி.,யுமான ரகுநந்தன் சர்மா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய போது ரகுநந்தன் தனது கருத் தைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசு கையில், மாணவர்கள் குறிப்பாக இளம்பெண் கள் செல்போன் பயன் படுத்துவதாலேயே பெரும் பாலான அச்சுறுத்தல் களும், குற்றங்களும் நடைபெறுவதாக தெரி வித்தார். இளம்பெண் கள் ஜீன்ஸ் அணிவது அமெரிக்க கவ்பாய் தோற்றத்தை ஏற்படுத் துகிறது, இது இந்திய கலாச்சாரத்திற்கு எதி ரானது, ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித் துள்ளார். தனது இந்தக் கருத்தை தனி மனித நோக்கில் இருந்தே தெரி விப்பதாகவும், பா.ஜ.,வின் கொள்கை யின் அடிப்படையில் தெரிவிக்கவில்லை எனவும் ரகுநந்தன் தெரி வித்துள்ளார்.
காங்கிரஸ் எதிர்ப்பு பா.ஜ., எம்.பி., ரகுநந் தனின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் மற்றம் தேசிய மகளிர் ஆணையம் ஆகி யன எதிர்ப்பு தெரிவித் துள்ளன. இது குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவி மம்தா சர்மா கூறுகையில், பெண்கள் இன்னும் பழங்கா லத்தை போன்றே இருக்க வேண்டும் என இந்த அரசியல்வாதி விரும்புவதாகவும், இவரது இந்தக் கருத்து அனைத்து பெண்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது என வும் தெரிவித்துள்ளார். ரகுநந்தனின் இந்த கருத்திற்காக அவரும், பா.ஜ.,வும் பொது மன் னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலி யுறுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் தெரி வித்ததாவது: ரகுநந் தனின் இந்த கருத்து மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ., கட்சி யிடையே இரட்டை நிலைப்பாடு உள்ளது சந்தேகத்திற்கு இடமில் லாமல் நிரூபணம் ஆகி உள்ளது; மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்ச வான் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்; ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களான விஜய்ஷா, பாபுலால் கவுர், கைலாஷ் விஜய் வர்கியா, ரகுநந்தன் சர்மா உள்ளிட்டோர் பெண் களுக்கு எதிரான கருத் துக்களை வெளியிட்டு வருகின்றனர்; ரகுநந் தனின் பெண்களுக்கு எதிரான இந்த கருத் திற்கு அவர் மட்டுமல்ல பா.ஜ.,வும் பொது மன் னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சிங் சலுஜா தெரிவித்துள்ளார்.



இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...