Tuesday, June 11, 2013

பாரதீய ஜனதாவில் உள்கட்சிப் பூகம்பம் வெடித்தது!

மோடிக்கு பிரச்சாரக் குழுத் தலைவர் பதவியா? அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அத்வானி விலகல்
சுயநலக் கூடாரமாகிவிட்டது கட்சி என்றும் குற்றச்சாற்று
சென்னை, ஜூன் 11- வரும் நாடாளுமன்றத் தில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இக்கட்சிக்குள்ளே ஏற் பட்டுள்ள உச்சக் கட்ட மோதலின் விளைவாக சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இக்கட்சி யின் செயற்குழுவில் மோடிக்கு பிரச்சாரக் குழுத் தலைவர் பதவி வழங்கியதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரி வித்து அத்வானி திடீர் ராஜினாமா செய்து பூகம் பத்தைக் கிளப்பியுள் ளார்.
மத சார்பற்ற நாடான இந்தியாவில்  இந்து மத வெறியைத் தூண்டும் வகையிலும்,  சிறுபான்மையினரை  பல்வேறு வகையில்  கொச்சைப்படுத்தியும் தாக்குதல் தொடுத்து வருவது பாரதீய ஜனதா கட்சியாகும்.
அத்வானி பற்றி..
இக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி இந்தியா முழுவதும் மதவெறியைத் தூண்டும் வகையில் ரத யாத்திரை நடத்தி அயோத்தியில் உள்ள இஸ்லாமியரின் வழிப்பாட்டுதலமான பாபர் மசூதியை இடித்து, தன்னை முன்னணி தலை வராக பிரகடனப்படுத் திக் கொண்டவர். இச் சம்பவம் உலகம் முழு வதும் இந்தியாவிற்கு தலை குனிவை ஏற்படுத் தியது.
கட்சியில் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பார தீய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஜராத் முதல் வர் நரேந்திரமோடி குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தனக்கு சாதகமாக்கி இஸ்லா மியர்மீது பழி போட்டு, தனது அரசு இயந்தி ரத்தை பயன்படுத்தி சிறு பான்மை மக்கள்மீது மேற்கொண்ட கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல்கள் மூலம் தனது இந்துமத வெறித் தனத்தின் கோரத்தை தனக்குத்தானே வெளிப் படுத்திக் கொண்டவர்.
இந்த இருவருக்கும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என பனிப் போர் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் கோவாவில் கூடிய பிஜேபியின் செயற்குழு வில் குஜராத் முதல மைச்சர் நரேந்திரமோடி கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக நிய மிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்வானி நேற்று (10..6.2013) கட்சி யின் தேசிய செயற்குழு, ஆட்சிமன்ற குழு, தேர் தல் குழு ஆகியவற்றில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மோடியை தவிர்த்தார்:
தனது உதவியாளர் மூலம் நேற்று காலை 11 மணிக்கு ராஜ்நாத் சிங்குக்கு ராஜினாமா கடிதத்தை அத்வானி அனுப்பினார். பின்னர், 12.30 மணியளவில் அத் வானியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். ராஜினாமாவை திரும் பப் பெற அத்வானியை அவர் கோரியதாக தெரி கிறது. ஆனால், மோடிக்கு பதவி அளிக்கப்பட்ட தற்கு அத்வானி தனது எதிர்ப்பை ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்ன தாக, மோடியும் ராஜ் நாத் சிங்கும் அத் வானியை சந்தித்து மோடியின் நியமனத் துக்கு ஆசி பெற முடிவு செய்ததாகவும், கடைசி நேரத்தில் ராஜ்நாத் சிங் மட்டுமே சந்தித்துள் ளார். கட்சியின் மூத்த தலை வர்கள் சுஷ்மா சுவராஜ், எஸ்.எஸ்.அலுவாலியா, அனந்த் குமார், வெங் கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் டில்லியில் உள்ள அத்வானி வீட் டுக்கு சென்றனர். அத் வானியை சந்தித்து ராஜி னாமாவை திரும்பப் பெற வேண்டுகோள் விடுத்தனர். அத்வானி யின் ராஜினாமாவை ஏற்க மறுத்த ராஜ்நாத் சிங் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள் ளார். ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என்ற பாஜ தலைவர்களின் வேண்டு கோளை அத்வானி நிராகரித்தார்.
ஏமாற்ற மாட்டார்
அத்வானியை நரேந்திர மோடி நேற்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி ராஜினாமாவை திரும்பப் பெறும்படி கோரினார். இத்தகவலை டுவிட்டர் இணையதளத் தில் மோடி தெரிவித் துள்ளார். லட்சக்கணக் கான தொண்டர் களை அத்வானி ஏமாற்ற மாட்டார் என்று மோடி கூறியுள்ளார்.
ராஜ்நாத்துக்கு உருக்கமான கடிதம்
ராஜ்நாத் சிங்குக்கு அத்வானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
ஜனசங்கத்துக்காகவும் பா.ஜ.வுக்காகவும் எனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன். இது எனக்கு எல்லை யற்ற திருப்தியை அளிக் கிறது. ஆனால், சமீப காலங்களில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் போக்கு ஏற் றுக் கொள்ள முடியாத தாக இருக்கிறது. நாட் டையும் மக்களையும் பற்றி கவலை கொண்ட ஷியாம் பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா, நானாஜி தேஷ்முக், வாஜ்பாய் போன்ற தலை வர்களின் கொள்கை யோடு உருவாக்கப்பட்ட கட்சியில் அந்தக் கொள் கைகள் இப்போது இல்லை. நமது கட்சியின் பெரும்பாலான தலை வர்கள் தங்கள் சொந்த நலன் குறித்தே கவலைப் படுகின்றனர்.
எனவே, கட்சியின் தேசிய செயற்குழு, ஆட்சி மன்ற குழு, தேர் தல் குழு ஆகியவற்றில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இதையே எனது ராஜி னாமா கடிதமாக ஏற் றுக் கொள்ளவும்.
- இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.




மூன்று முறை ராஜினாமா
பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, கடந்த எட்டு ஆண்டுகளில், மூன்று முறை, பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த, 2005இல் பாகிஸ்தான் சென்ற அத்வானி, அந்நாட்டின் உயரிய தலைவர், முகமது அலி ஜின்னாவை, மதச்சார்பற்ற தலைவர் என, பாராட்டினார். இதையடுத்து, அவருக்கு, கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு, பல நாட்களுக்கு பிறகு, திரும்பப் பெற்றார். அதே ஆண்டு, டிசம்பரில், மும்பையில் நடந்த கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், இப்பிரச்சினை மீண்டும் எழவே, அத்வானி தன் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவராக, ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றார்.இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலையொட்டி, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பா.ஜ.,வின், பிரச்சாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக, அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...