Friday, March 8, 2013

அடையாளம் காண்பீர் இவர்தான் சங்கராச்சாரியார்!


ஜெகத் குரு - லோகக் குரு என்றெல்லாம் விளம்பரக் காற்றை அடைத்து வானத்தில் பட்டமாகப் பறக்க விடுகின்றார்களே பார்ப்பனர்கள் - அவர் களின் யோக்கியதை, குணநலன்கள், சுபாவங்கள் எந்தத் தகுதியில் இருக்கின்றன என்பதை ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
1992 டிசம்பர் 6இல் உலக நாடுகளின் மத்தியில் பாரத புண்ணிய பூமி என்கிறார்களே - இந்த இந்தியா தலை கவிழ்ந்து நின்றது.
450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான முசுலிம் மக்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை அயோத்தியில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள், பி.ஜே.பி. தலைவர்கள் உட்பட சங்பரிவார்க் கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு பட்டப் பகலில் அடித்து நொறுக்கினார்கள்.
அதற்காக அன்று முதல் இன்று வரை அவர்கள் வெட்கப்பட்டவர்களும் அல்லர் - மன்னிப்புக் கோரிய வர்களும் அல்லர்.
ஒரு கட்டத்தில் அந்தக் குற்றத்தில் சம்பந்தப் பட்டவர்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கலாமா என்ற கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் ஏற்பட்டது.
அப்பொழுது காஞ்சி சங்கராச்சாரியாரும் (சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி) என்ன சொன்னார் தெரியுமா?
அயோத்தியில் கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கை என்று கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை (தினமணி 27.11.2000) என்று கூறியவர்தான்.
அப்படிப்பட்டவர் இப்பொழுது இன்னொன்றையும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் அயோத்தி யில் ராமன் கோயில் கட்டலாம் என்று சொல்லி யுள்ளார். பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் 21 ஆண்டுகள் ஓடிய நிலையிலும் இதுவரை தண்டிக் கப்படாத காரணத்தால் ஜெயேந்திரர் போன்றவர் களால் இப்படி எல்லாம் துணிவாக பேச முடிகிறது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்பொழுது, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயில் கட்டுவது குறித்து சங்கராச்சாரியார் என்று சொல்லப்படுபவர் பேசுகிறார் என்றால், இது நீதிமன்ற அவமதிப்பு என்பது ஒருபுறம் இருக்கட்டும்; எவ்வளவு இந்து மத வெறி பிடித்த ஆசாமியாக சங்கராச் சாரியார் என்று சொல்லப்படுபவர்களே இருக்கின் றனர் என்பது விளங்கவில்லையா!?
ஒரு கட்டத்திலே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்மார்த்தர் - ராமன் கோயில் என்பது வைணவர்களுக்குச் சம்பந்தப்பட்டது; இதில் இவர் தலையிடக் கூடாது என்று சங்பரிவார் வட்டாரத் திலிருந்து குரல் கிளம்பியுள்ளது. அதை எல்லாம் பொருட்படுத்தக் கூடியவர்களா ஜெயேந்திரர் போன்ற பூணூல்வாதிகள்?
இந்தக் கூத்தில் இவர்கள் உலகில் அமைதி நிலவ அடிக்கடி யாகங்களை நடத்துகிறவர்கள். இன்னொரு மதக்காரரின் வழிபாட்டுத் தலத்தை இடிப்பது - அதன் காரணமாக நாடு தழுவிய அளவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் படுகொலைக்கு ஆளாவது என்பதெல்லாம் இன்னொருபுறத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.
உலகில் அமைதியும், சாந்தமும் தவழ்ந்திட யாகம் செய்பவர்களின் யோக்கியதை இதுதானா?
கடவுளுக்குமேலே பிராமணன் என்று சொன் னவர் தான் இந்த ஜெயேந்திரர்; இதன் மூலம் எப்படிப் பட்ட பார்ப்பன வெறியர் என்பது விளங்கவில்லையா? (9.10.2002).
நூறு விவேகானந்தர்களுக்கு மேலே நான் போய்விட்டேன்! என்று சொன்ன தலைக்கனம் படைத்தவரும் இவரே!
என்னதான் விவேகானந்தரின் 150ஆம் ஜெயந்தி என்று கூறி இந்துத்துவாவைப் பரப்பும் வேலையில் பார்ப்பனர் ஈடுபட்டாலும், விவேகானந்தர் சூத்திரர் தானே! அதனை மனதில் வைத்துக் கொண்டு தான் ஜெயேந்திர சரஸ்வதி நூறு விவேகானந்தர்களுக்கு மேல் தான் சென்று விட்டதாகக் கூறுகிறார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
சங்கரமடம் என்றாலும் சரி, பார்ப்பனர் சங்கம் என்றாலும் சரி, ஆர்.எஸ்.எஸ்., என்றாலும் சரி, பிஜேபி என்று கூறிக் கொண்டாலும் சரி எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அந்தக் குட்டை என்பது பார்ப்பனர்கள் என்பதையும் மறக்க வேண்டாம் - மறக்கவேண்டாம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...