Sunday, February 3, 2013

காந்தியார் படுகொலைபற்றி கடல் அளவு தகவல்கள்!


தமிழர் தலைவரின் சங்கநாதம்! காந்தியார் படுகொலைபற்றி கடல் அளவு தகவல்கள்!




காந்தியார் அவர்களின் நினைவு நாளையொட்டி (30.1.1948) சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மதவெறிக் கண்டனப் பொதுக்கூட்டம் - சிறப்புக் கூட்டம் நேற்று (1.2.2013) வெள்ளி இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

கலி. பூங்குன்றன் தொடக்கவுரை

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று தொடக்கவுரை ஆற்றினார்.

அவர் தமதுரையில் காந்தியார் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமான இந்துத்துவா என்னும் மதவெறி இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் நடமாடிக் கொண்டுதானிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், பிராமண சங்கம், பாரதீய ஜனதா என்று பல்வேறு பெயர்களில் இருந்து கொண்டுதானி ருக்கின்றது.

பாபர் மசூதியை இடித்தது அந்தச் சக்திதான். குஜ ராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களான முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம் அதே இந்துத்துவா மதவெறிதான்.
அந்த மதவெறி சக்தி அரசியலிலும் குடிகொண் டுள்ளது; நடக்க இருக்கும் 15 ஆவது மக்களவைத் தேர் தலிலும் அந்த மதவாத சக்திகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

அதை எதிர்கொள்ளும் ஒரு தத்துவத்திற்குப் பெயர் தான் தந்தை பெரியார். இந்தியா முழுமையும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளும், தத்துவங்களும் தான் எதிரொலிக்கப் போகின்றன. நமது கழகத்தின் அருமையை உணரத்தான் போகிறார்கள் - இந்தியா முழுமையிலிருந்தும் நமது தலைவருக்கு அழைப்புகள் வந்த வண்ணம்தான் இருக்கும் என்று குறிப்பிட்டார்.
வாரி வழங்கினார் தமிழர் தலைவர்
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 90 மணித் துளிகள் வகுப்பறையில் பாடம் நடத்துவது போல புதுப்புதுத் தகவல்களை முனை மழுங்காமல் அடுக்கடுக்காகக் கூறிக்கொண்டே போனார்.


காந்தியார் படுகொலை செய்யப்பட்ட நிலையில், முசுலிம்தான் காந்தியாரைச் சுட்டுக் கொன்றான் என்ற தகவலைப் பார்ப்பனர்கள் பரப்புரை செய்தனர். அதன் காரணமாகத் தமிழ்நாட்டில் வாணியம்பாடி, திரு வண்ணாமலை, ஈரோடு போன்ற ஊர்களில் முசுலிம் கள் தாக்கப்பட்டனர்.

ஆனால், உண்மையில் காந்தியாரைப் படுகொலை செய்தவன் ஒரு இந்து என்று அகில இந்திய வானொலி மாலை 6 மணிக்கு அறிவித்தது (பார்ப்பனர் என்றுகூடச் சொல்லவில்லை).

மகாராட்டிரத்தில் புனே பகுதியில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். வீடுகள் கொளுத்தப்பட்டன. பார்ப் பனர்களின் கல்விக் கூடங் கள் எரிக்கப்பட்டன. அவற்றை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களையும் உள்ளே நுழையவிடவில்லை.

தடுத்தாட்கொண்டார் தந்தை பெரியார்

தமிழ்நாட்டிலும் அந்த நிலை ஏற்பட்டு இருக்கும். அன்றைய முதலமைச்சர் ஒழுக்க சீலர் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் வானொலிமூலம் மக்களுக்கு அமைதியை ஏற்படுத்தித் தருமாறு தந்தை பெரியார் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
31.1.1948 அன்று மாலை 4 மணிக்கு வானொலியில் தந்தை பெரியார் அரியதோர் உரையை நிகழ்த்தினார்.
இந்த இழித்தரமான காரியத்திற்கு சுட்டவன் ஒருவனே பொறுப்பாளி என்று என்னால் கருத முடியவில்லை. இப்படிப்பட்ட பரிதாபகரமான முடிவானது - நமக்கு ஒரு படிப்பினையாகி, இப்படிப் பினை மூலமாவது இந்த நாட்டில் அரசியலின் பெயராலும், மத இயலின் பேராலும், இன இயலின் பேராலும், கருத்து வேற்றுமைக்காக கலவரங் களும், கேடுகளும், நாசங்களும், மூட நம்பிக்கைப் பிடிவாதங்களும் ஏற்படுவதற்குச் சிறிதும் வாய்ப் பில்லாமல், அறிவுடைமையோடும் வாழுபவர் களாக மக்கள் நடந்துகொள்வார்களேயானால், அதுவே பரிதாபகரமானதும், வெறுக்கத்தக்கது மான முடிவை எய்திய அப்பெரியாருக்கு நாம் காட்டும் மரியாதையும், நன்றியறிதலுமாகும்.

திராவிட மக்கள் இதையறிந்து எப்படிப்பட்ட நிலையிலும், அமைதியுடனும், சகிப்புத் தன்மை யுடனும் நடந்துகொள்ளவேண்டும் என்பது எனது விண்ணப்பம் என்று வானொலிமூலம் தந்தை பெரியார் கேட்டுக் கொண்டதன் காரணமாகத் தமிழ்நாட்டில் கலவரப் புயலுக்கு இடமில்லாமல் அமைதி தவழும் ஒரு நிலை ஏற்பட்டது என்பதை கழகத் தலைவர் விளக்கினார்.

(தந்தை பெரியார் நினைத்திருந்தால், கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால் தமிழ்நாட்டில் எத்தனை அக் கிரகாரங்கள் எரிந்திருக்கும்? எத்தனைப் பார்ப்பனர்கள்  படுகொலை செய்யப்பட்டு இருப்பார்கள் என்பதை இந்த இடத்தில் எண்ணிப் பார்ப்பார்களாக! வாழ்க தந்தை பெரியார்!)

அய்யா அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும்...

காந்தியார் மறைவையொட்டி தந்தை பெரியார் விடுதலையில் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு ஆழமானது என்பதையும் விளக்கிப் பேசினார்.

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற சேதியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது! இது உண்மைதான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறி இருக்கும். மதமும், வைதிகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் பலமான சதி முயற்சி இருந்தே இருக்கவேண்டும். அதுவும் காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ - உயிர் வாழ்ந்தாரோ அவர்களாலேயேதான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்கவேண்டும்.

இது மிகமிக வெறுக்கத்தக்கக் காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும். இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாக வாவது நாட்டில் இனி அரசியல், மத இயல் கருத்து வேற்றுமையும், கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி மக்கள் நடந்துகொள்ளுவதே அவரை நாம் மரியாதை செய்வதாகும். (குடிஅரசு அறிக்கை, 31.1.1948)

தந்தை பெரியார் பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு சொல்லுமே ஆழமான அர்த்தம் பொதிந்ததாகும்.

புதிய நூல்கள் அறிமுகம்

இந்த உரையில் சில புதிய நூல்களைத் தமிழர் தலைவர் அறிமுகப்படுத்தினார். அதில் ஒன்று - சர்வோதய சங்கத்தைச் சேர்ந்த காந்தியவாதியான சு. வைத்யா (வயது 80) என்பவரால் எழுதப்பட்ட ஆங்கில நூல்.

காந்தியார் கொல்லப்பட்டதற்கு இந்துத்துவா சக்திகள் சொன்ன காரணங்கள் இரண்டு.

(1) பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று நாடு பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்தது,

(2) இந்திய அரசு பாகிஸ்தானுக்கு முறைப்படி ரூ.55 கோடி கொடுக்க வேண்டும் என்று காந்தியார் கூறியது.

பத்துத் தடவை படுகொலை முயற்சிகள்

இந்த இரண்டும்தான் காந்தியார் படுகொலைக்குக் காரணமாகக் கூறப்பட்டா லும், அதற்குமுன் பத்துத் தடவை காந்தியாரைக் கொலை செய்வதற்கு அவர் கள் திட்டமிட்டார்கள்.  (அப்படி இருக்கும்போது இந்த இரு காரணங் கள்தான் காந்தியாரைக் கொலை செய்ததற்குக் கார ணமாக இருக்க முடியாது என்று அழுத்தமாகக் கூறி னார் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்) ஆறு முறை காந்தியாரைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஆவணங் கள்மூலம் நிரூபிக்க முடியும்.

1934 இல் பூனா நகராட்சியில் காந்தியாருக்கு வர வேற்பு கொடுத்தபோது முதல் முயற்சி.

இதே கோட்சே 1944 இல்!


1944 ஆம் ஆண்டிலேயே இரண்டு முயற்சிகள். இதே நாதுராம் கோட்சே கத்தியுடன் காந்தியாரைக் கொலை செய்ய முயன்று தோற்றான்.
1944 ஜூன் 4 ஆம் தேதியன்று ரயில்மூலம் காந்தியார் பூனாவுக்குச் சென்றபோது ரயிலைக் கவிழ்க்க தண்ட வாளத்தில் மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்திருந்தனர். ஓட்டுநரின் விழிப்பால் அந்த விபத்துத் தவிர்க்கப்பட்டது.

1948 ஜனவரி 20 இல் கூட டில்லியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்து மதவெறி பிடித்த மதன்லால் பாவா என்பவன் காந்தியார்மீது வெடி குண்டு வீசினான். மயிரிழையில் காந்தியார் உயிர் தப்பினார்.

வணக்கம் கூறி வயிற்றை நோக்கிக் குண்டு!

அடுத்த பத்து நாள்களில்தான் ஜனவரி 30 அன்று பிரார்த்தனை மண்டபத்துக்கு வந்த காந்தியாரைப் பார்த்து வணக்கம் கூறி, இன்று பிரார்த்தனைக்கு நேரம் ஆகிவிட்டது அல்லவா? என்று கேட்டான். காந்தியார் புன்னகைத்து ஆமாம்! என்று கூறியவுடன் துப்பாக்கியை எடுத்து மூன்று முறை சுட்டான்.

பார்ப்பன கோட்சே!

முடிந்தது காந்தியாரின் வாழ்வு!

காங்கிரசானாலும், காந்தியார் ஆனாலும், கடவுளா னாலும் பார்ப்பனர்களுக்குத் தங்களுக்குப் பயன்பட்ட வரைதான் Use and Throw தான்.

வெள்ளைக்காரன் காப்பாற்றினான்- கொள்ளைக்காரன் தீர்த்துக் கட்டினான்
அந்நியன் வெள்ளைக்காரன் - அவர்களை எதிர்த் துப் போராட்டம் நடத்தினார் காந்தியார். ஆனால், அந்த வெள்ளைக்காரன் காந்தியாரைப் பாதுகாத்துக் கொடுத்தான். சுதந்திர இந்தியாவில் பார்ப்பானோ, காந்தியாரின் உயிரைக் குடித்துவிட்டானே என்று கழகத் தலைவர் சொன்னபோது, பார்வையாளர்கள்
மத்தியில் சுடுகாட்டு அமைதி!

காந்தியாரின் கொள்ளுப் பேரன்
கொட்டும் தகவல்கள்!
மற்றொரு முக்கிய நூலை தமிழர் தலைவர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.

அந்த நூலின் பெயர்:

‘Let’s Kill Gandhi!
A Chronicle of His Last Days, The Conspiracy, Murder, Investigation and Trial’
எழுதியவர் டுஷார் ஏ. காந்தி - இவர் யார் தெரியுமா? காந்தியாரின் மகன் மணிலால் காந்தியின் மகன் என்பதுதான் சிறப்புச் செய்தி.
அந்த நூல் 2007 இல் சுரயீய  ஊடி வால் வெளி யிடப்பட்டது.

விலை ரூ.1000/-

இதுவரை தெரிந்திராத அதிரடியான தகவல்கள் அலை அலையாக இந்நூலில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிட்டார் கழகத் தலைவர்.

(நாளை பார்ப்போம்)

- மின்சாரம் -

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...