Friday, January 11, 2013

தினமலர்களா ஜால்ராவைப் பற்றிப் பேசு வது!


தி.மு.க.வின் அடுத்த தலைமைக்கு அடை யாளப்படுத்தப்பட்ட தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை கொடுத்து விட்டாராம்.
இது தினமலர் கும் பலுக்குக் குமட்டிக் கொண்டு  வருகிறது. ஜால்ரா சத்தமாம் அது.
கார்ட்டூன் போட்டு வேறு கிண்டல்!
யாருக்கும் ஜால்ரா அடிப்பது திராவிடர் கழகத் தின் வேலையல்ல. அடிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. தலைப்புக் கொடுப்பதிலிருந்து செய்தி வெளியிடும் முறைவரை ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் தினமலர்களா ஜால்ராவைப் பற்றிப் பேசு வது!
ஒரு கருத்தை வர வேற்பது ஜால்ரா என்று பொருளானால் எந்த ஊடக மும் எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது - கூடவும் கூடாது.
திராவிடர் கழகம் தாய்க் கழகம் என்கிற முறையில் தி.மு.க. பற்றிக் கருத்துக் கூற உரிமையுள்ளது.
இதற்கு முன்பும்கூட திராவிடர் கழகம்  அந்தக் கடமையைச் செய்துள்ளது. திமுகவிலிருந்து எம்.ஜி. ஆர். பிரிந்தபோதுகூட தந்தை பெரியார் எம்.ஜி. ஆரை அழைத்துப் பேச வில்லையா!
கலைஞருக்கும் நாவல ருக்கும், கருத்து மாறுபாடு ஏற்பட்டபோது அன்னை மணியம்மையார் அந்தக் கடமையினைச் செய்துள் ளார்களே.
ஏன்? தி.மு.க., அ.தி. மு.க. இணைப்புக்குக்கூட திராவிடர் கழகத்  தலைவர் தன்னாலான முயற்சியை மேற்கொள்ளவில்லையா?
இந்திய யூனியன் முசுலிம் லீக்கில் அப்துல் சமது, அப்துல் லத்தீப் ஆகியோருக்கிடையே கருத்து வேற்றுமை வந்த போதுகூட சிறுபான்மை மக்கள் மத்தியிலே பிளவு வரக்கூடாது; அது பாது காப்பானதல்ல என்ற அடிப்படையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதுண்டே!
மீண்டும் இரு அமைப் புகளும் ஒன்று சேர்ந்த போது நாவலர் அப்துல் சமது அவர்கள் முதலாவ தாகத் தொடர்பு கொண்டு நன்றி சொன்னது திரா விடர் கழகத் தலைவர் அவர்களுக்குத்தான் என்பதெல்லாம் புரியாமல் பூணூல்கள் பேனா பிடிக்கக் கூடாது.
தி.மு.க.வில் பிளவு ஏற்படாதா! அதன் மூலம் பார்ப்பனீயம் என்ற பார்த் தீனியம் தமிழ் மண்ணில் மண்டக் கூடாதா என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த கூட்டத் துக்கு தி.மு.க.வில் அது நடக்கவில்லை என்கிற போது அய்யோ அப்பா அம்மா என்று அம்மிக் குழ வியை எடுத்துக் கொண்டு வயிற்றில் குத்திக் கொள் கிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.
தினமலர், நமது எம்.ஜி.ஆர்.கள் புலம்புவது திராவிடர் கழகத் தலைவர் சரியான கடமையை சரி யான தருணத்தில் மிகச் சரியாகச் செய்துள்ளார் என்பதற்கான நற்சான்றிதழே!
-   மயிலாடன்

1 comment:

DiaryAtoZ.com said...

தினமலர் ஒரு ADMK ஜால்ரா அப்படித்தானே செய்தி போடுவார்கள்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...