Friday, January 11, 2013

மனுதர்மவாதிகள் இன்னும் சாகவில்லை



மனுதர்மவாதிகள் இன்னும் சாகவில்லை

பெண்களைப்பற்றி ஆண்கள்தான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆள் ஆளுக்கு அறிவுரைகளை அள்ளி விடுகிறார்கள்.
பெண்கள் ஜீன்ஸ் போடக் கூடாது; குட்டைப் பாவாடை அணியக் கூடாது என்கிறார்கள். புதுச்சேரியிலோ பெண் கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என்று அருள் வாக்குத் தருகிறார்கள். பெண்கள் பற்றி ஆண்கள் பேசும் மட்டும் பெண்கள் பெண்ணுரிமை எங்கிருந்து குதிக்கப் போகிறது?
அதைத்தான் தந்தை பெரியார் திருப்பித் திருப்பி வலியுறுத்திக் கொண்டுள்ளார்.
இந்து சமூக அமைப்பில், சூத்திரர் கள், பஞ்சமர்கள், பெண்கள் எல்லாம் பேசக் கூடாதவர்கள். தங்கள் உரிமை களைப்பற்றி வாய்த் திறக்கக் கூடாதவர்கள்.
பெண்களையும், சூத்திரர்களையும் கொல்லுவது பாவமல்ல என்கிறது மனுதர்மம். பாவ யோனியில் பிறந்த வர்கள் என்கிறது கீதை.
பெண்கள்  தங்கள் உரிமைகள் பற்றிப் பேச வேண்டிய முக்கியமான இடம் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த இடம்!
ஆம், சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும்,  பெண்களின் உரத்த குரல் உக்கிரமாக  வெடித்தாக வேண்டும். மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்களுக்கு,  50 விழுக்காடு இடங்கள் கிடைப்பது தான் நியாயம்.
ஆனால் நிலைமை என்ன 33 விழுக்காட்டுக்கே தாளம் போட வேண்டி இருக்கிறதே.
1996ஆம் ஆண்டு முதல் இந்த மசோதா தத்தளித்துக் கொண்டு இருக்கிறதே!
1952 முதல் தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 10 விழுக் காட்டு எண்ணிக்கையை பெண்கள் தாண்டவில்லையே! அதிகபட்சம் 2009 நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் சதவிகிதம் இந்தியாவில் 10.7 ஆகும்.
முசுலிம் நாடுகளில் பெண்களுக்கு உரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவார்கள். உண்மை என்ன வென்றால் முசுலிம் நாடுகளைவிட இந்தியா பின் தங்கியே உள்ளது. உலக வரிசையில் இதில் இந்தியா வுக்குள்ள இடம் 104; பாகிஸ் தானுக்கோ 42 ஆம் இடம் போதுமா!
இந்தியாவில் அனைத்து மாநிலங் களிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர் கள் 4030 என்றால், பெண்கள் வெறும் 311 பேர் மட்டுமே!
இந்த நிலை நீடிக்கு மட்டும் பெண் கள் குரல் பிரதிநிதித்துவ சபைகளில் ஒலிப்பதெங்கே?
பெண்கள் எந்த ஆடையை அணிவது என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் ஆண்கள் என்பது எவ்வளவு கேவலம்?
மருமகளை மாமியார் எட்டி உதைத்தால் அது ஒன்றும் குற்றமல்ல; என் மகன் உன்னை விவாகரத்து செய்து விடுவான் என்று மாமியார் மிரட்டுவதும் குற்றமல்ல.  இந்தியக் குற்றவியல் பிரிவு 498 அவை தண்டனைக்குரியதல்ல என்று சொல் லுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. சின்கா, சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கறாராகத் தீர்ப்புக் கூறி விட்டதே! சென்ற நூற்றாண்டில் அல்ல - இந்த நூற்றாண்டில்தான் 27.7.2009இல் வந்த தீர்ப்புதான்.
முதல் இந்தியன் நீதிபதி என்று பெருமை சாற்றும் ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர் கணவன் மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்புச் சொல்லவில்லையா?
காலம் மாறினாலும் மனுதர்ம வாதிகள் வாழையடி வாழையாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இன்னும் அவர்கள் சாகவில்லை! அதன் அடிப்படையில்தான் சர்சங் சலாக் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) மோகன் பகவத்  எனும் சித்பவன் பார்ப்பனர் பகருகிறார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...