Friday, January 4, 2013

பச்சை நாத்திகம்


கோபிசெட்டிப்பாளை யத்தை அடுத்த பாரி யூரில் ஒரு காளியம்மன் கோயில்! இந்தக் காளி யம்மன் மிகவும் பிரசித்திப் பெற்றவளாம். எட்டு கை களுடன் மகிஷாசுரனை வதம் செய்தவாறும், கோபம் தணிந்த சாந்த சொரூபியாகவும் அருள் பாலிக்கிறாளாம். (வதம் செய்பவள்தான் சாந்த சொரூபியோ!)
ஆண்டுதோறும் தேர்த் திருவிழா, தீக் குண்டம் இறங்கும் விழா போன்றவை வெகு தடபுடலாக நடக்குமாம்.
இவ்வாண்டு 10ஆம் தேதி தீக்குண்டம் இறங்கி 11ஆம் தேதி தேர் ஓட்டம்! இந்த ஆண்டு என்ன விசேஷமோ!
விசேஷம் இல்லா மலா?
தீக்குண்டம் இறங்கும் போது ஏதேனும் அசம் பாவிதம் ஏற்பட்டால் அவர்களுக்கு நிதி உதவி செய்யும் வகையில் காளி யம்மன் கோயில் நிருவா கம் என்ன செய்தது தெரியுமா? 5 லட்சம் ரூபாய் இன்ஷ்யூரன்ஸ் செய்துள்ளதாம். இங்குதான் தமிழ் நாட்டிலே முதன் முதலாக இன்ஷ்யூரன்ஸ் செய்யப்படுவதாம் (இதில் பெருமை வேறா?)
இதில் பெருமைப்பட என்னவிருக்கிறது? என்னதான் விரதம் இருந்து பயபக்தியாக தீக்குண்டத்தில் இறங்கி னாலும் விபத்து நடக்க வாய்ப்புள்ளது என்பது இதன் மூலம் விளங்க வில்லையா? மொடச்சூர் தான் தோன்றியம்மன் கோவிலில் நடந்த தீக் குண்டம் இறங்கும் நிகழ்ச் சியில் தவறி விழுந்ததில் 20 பக்தர்களுக்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதாம்.
ஒன்றில் விவரமாக இருக்கிறார்கள். கடவுள் சக்தி - பக்தி என்பதெல் லாம் சுத்தப் பொய் புரட்டு என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். காளியம் மனின் சக்தியில் நம் பிக்கை இருந்தால் பக்தர் களுக்கு எந்த விபத்தும் நடக்காது என்பதிலும் உறுதியாக, தெளிவாக நம்பிக்கை கொண்டு இருப்பார்கள்.
ஒவ்வொரு கோயிலுக் கும் தலப் புராணங்கள் எழுதி அவற்றின் மகி மையை, சக்தியை எப்படி எப்படி எல்லாம் பில்டப் செய்கிறார்கள். நடை முறையில் வரும்பொழுது கடவுள் நம்பிக்கை எல் லாம் காற்றாய்ப் பறந்து விடுகிறதே - ஏன்?
கடவுளை மற - மனிதனை நினை என்று சொன்னார் தந்தை பெரி யார். அதனைப் பக்தர் களே - கோயில் நிரு வாகமே பின்பற்றத் தொடங்கி விட்டதே!
காளியம்மனின் சக்தி யில் நம்பிக்கை இல்லா மல் தானே காளியம் மனை மறந்து விட்டு இன்ஷ்யூரன்ஸ்காரரான மனிதர்களை நம்பு  என்று சொல்லாமல் சொல்லி விட்டனரே!
இது பச்சை நாத்திகம் அல்லவா? எங்குச் சுற்றி னாலும் கடைசியில் ஈரோட்டுச் சந்திப்புக்குத் தான் வந்து சேர வேண் டும்.  -   மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...