Wednesday, January 9, 2013

இதுதான் இந்துத்துவா சித்தாந்தம்!


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு கிரக அமைப்புகளே காரணம் என்று சட்டீஸ்கர் அமைச்சர் தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் நன்கேர் என்ற இடத்தில் அரசு நடத்தும் உறைவிடப்பள்ளியில் தங்கியுள்ள சிறுமிகள் 9 பேர்களால் பாலியல் வன்முறை செய்யப்பட்டது சமீபத்தில் தெரியவந்தது. இது தொடர்பாக, பள்ளியின் காவலாளி மற்றும் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உயர்நிலை விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பல மாநிலங்களிலும் இதுபோன்ற பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங் களுக்கான காரணம் குறித்து சட்டீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் நன்கிராம் கன்வர் தெரி வித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூரில் அவர் அளித்த பேட்டியில், ஜாதகத்தில் கிரகங்களும், நட்சத்திரங்களும் மோசமான நிலையில் இருந்தால் ஒருவருக்கு தீங்கு ஏற்படும்.
பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களுக்கு கிரக அமைப்பே காரணம்; இதற்கு நம்மிடம் பதில் இல்லை.
ஜோதிடர்தான் கணிக்க முடியும் என்றார். அமைச்சர் கன்வரின் இந்தக் கேவலமான கருத்துக்கு பெண்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்வருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் படேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். படேல் தலைமையில் காங்கிரஸ் நிருவாகிகள் ஆளுநர் சேகர் தத்தை நேற்று முன்தினம் சந்தித்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தோல்வி யடைந்துவிட்ட மாநில அரசை நீக்கக் கோரி மனு அளித்தனர்.
நாடு எந்தத் திசையில் சென்று கொண்டிருக் கிறது? கேவலங்களையும், அநாகரிகங்களையும், காட்டுவிலங்காண்டித்தனங்களையும், வன்முறை களையும், சுரண்டல்களையும், பிற்போக்குத்தனங் களையும் காப்பாற்றவும், நியாயப்படுத்தவும்தான் நம் நாட்டு மதமும், சாஸ்திரங்களும், பஞ்சாங்கங்களும், ஜோதிடமும் இருந்து வருகின்றன என்பதற்கு அமைச்சரின் கூற்றே போதுமான சாட்சியமும், ஆதாரமும் ஆகும்.
ஒவ்வொரு கேட்டுக்கும், குற்றத்திற்கும் கிரகப் பலன்களே காரணம் என்றால், மனிதர்களைக் குற்றப்படுத்த என்ன இருக்கிறது? மனிதனைத் தண்டிப்பதில்தான் அர்த்தம் உண்டா?
கீதையில் கூட சண்டை போடுவதற்கும், உறவினர் களைக் கொல்லுவதற்கும் தூபம் போடுபவனாகத் தானே கிருஷ்ண பகவான் கற்பிக்கப்பட்டுள்ளான்.
உயிர்கள் அழிந்தாலும் ஆத்மா அழிவதில்லை என்று சொல்லுவது எவ்வளவுப் பெரிய தர்ம அநீதியான ஆபத்தான உபதேசம்?
கொலைக்குற்றம் சாற்றப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் குற்றவாளி ஒருவன் தனது வாக்குமூலத்தில் நான் என் எதிரியைக் கொன்றது உண்மை; அவன் உயிரை அழித்தேனேயொழிய, அவனது ஆத்மாவை அழிக்கவில்லை என்று கீதை யில் கிருஷ்ணன் சொல்லியிருப்பதை எடுத்துக்காட்டி, நான் குற்றமற்றவன் என்று சொன்னால், நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா?
நாட்டில் நல்லொழுக்கம், நற்பண்பு, நீதிமுறை, நியாயமுறை, ஒழுங்கு முறை நிலை நிறுத்தப்பட வேண்டுமானால், மதத் தொடர்பான பிரச்சாரங்கள், வெளியீடுகள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டாக வேண்டும்.
திருப்பித் திருப்பி வெகுமக்கள் இந்தத் தீய வட்டத்தின் சுழற்சிக்குள் சிக்குண்டு கிடந்தால், அவர்களின் சிந்தனைகளில் மறுமலர்ச்சி மலர வாய்ப்புண்டா? கெட்டதைக் கெட்டது என்று அறியும் திறன் ஏற்படுமா? உண்மைக்கும், பொய்க்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்திட முடியுமா?
பெண்கள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படுவ தெல்லாம் கிரகப் பலன் என்று சொல்லக் கூடிய ஒருவர், ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சர் (பி.ஜே.பி.) என்றால், இந்த வெட்கக்கேட்டை என்னென்று சொல்லுவது!
ஒரு பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பெண்கள் வீட்டு வேலைக்குத்தான் லாயக்கு என்கிறார்; இன்னொரு பக்கத்தில் மாநில அமைச்சர் ஒருவர் பெண்கள் மீதான வன்புணர்ச் சிக்குக் காரணம் கிரகப் பலன் என்கிறார். இந்த இந்துத்துவா தத்துவத்தை ஒழிக்கவேண்டாமா? சிந்திப்பீர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...