Friday, January 25, 2013

நண்பர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சினை:


இரு சாராருக்கும் நமது அன்பு வேண்டுகோள்!
போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம்  வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!
அனைவராலும் உலக நாயகன் என்றழைக்கப் படும் பெருமைமிகு நடிப்புத்  துறை கலைஞர் திரு. கமலஹாசன் அவர்கள், தமிழ்நாட்டின் அரிய கலைச்செல்வம் ஆவார்.
சிறுவயதிலிருந்து இன்று வரை வளர்ந்துள்ள ஒப்பற்ற கலைத்துறை மாற்றுச் சிந்தனையாளர், மனிதநேயர், பகுத்தறிவாளர்.
அவர் பல வகையில் புதுமையைப் புகுத்த எண் ணுபவர்; எனவே, எதிர்ப்புக் காட்டுவது பழைமை யையே கெட்டியாய்ப் பிடித்துள்ள நம்  நாட்டவருக்கு இயல்பேயாகும்.
அவரது விஸ்வரூபம் என்ற திரைப்படத்திற்கு, இஸ்லாமிய சகோதரர்களையும், அவர்களது உணர்வுகளை சங்கடப்படுத்துவதுமான காட்சிகள் இருப்பதாகக் கூறி, ஆங்காங்கு இஸ்லாமிய சகோ தரர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக நமது அன்பான வேண்டுகோள்:
இரு சாராரும் சந்தித்து தங்களது உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி, புரிந்துகொண்டு, நட்புறவும், பல்வேறு சமூகத்தவர்கள், கலைஞர்களுக் கிடையே நல்லிணக்கமும் ஏற்படும்படிச் செய்வது தான் சரியானதாக இருக்க முடியும்.
அடிப்படையில் நண்பர் கமலஹாசன் அவர்கள் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர்; யார்மீதும் வெறுப்பு கொள்பவர் அல்லர்.
எனவே, அவரது திரைப்படத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ இடம்பெற் றுள்ளதாக குற்றச்சாற்று கூறப்படும் நிலையில், இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமல்ல, அவர் ஈடு  பட்டுள்ள கலைத்துறை, திரையரங்க உரிமை யாளர்கள் அனைவரது நல்லெண்ணத்தையும், பேராதரவினையும் பெறவேண்டியவர். இன்று அவர் விடுத்துள்ள உருக்க மான அறிக்கைபற்றியும் இஸ்லாமிய சகோதரர்கள் சிந்திக்கவேண்டும்.
பேசித் தீர்வு காண முடியாத பிரச்சினையாக இது ஆகக்கூடாது.
பல கோடி ரூபாய் முதலீடு என்பதைவிட முக்கியம், பல தரப்பு மக்களின் ஆதரவு என்ற முதலீடும் முக்கியம்.
எனவே, இஸ்லாமிய சகோதரர்கள் உடனே உணர்ச்சிவயப்பட்டு, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல், பிரச்சினையை ஒருவருக்கொருவர் பேசித் தீர்ப்ப தோடு, சமூகத்திலும், சட்டம் ஒழுங்குப் பிரச் சினைக்கு இடமின்றி நடந்துகொள்வதே அவசர அவசியம்!
இரு தரப்பினருக்கும் நமது அன்பு வேண்டு கோள் இது.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை 24.1.2012


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

2 comments:

DiaryAtoZ.com said...

Really Good Article.

suvanappiriyan said...

நடுநிலையான கட்டுரை. வாழ்த்துக்கள்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...