Tuesday, January 22, 2013

சரிதான்!


லக்னோவில் நடந்த காங்கிரஸ் கருத்தரங்கில் கட்சியின் மூத்தத் தலை வரான மத்திய நிலக்கரித் துறை மூத்த அமைச்சர் சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
குஜராத் முதல் அமைச்சர் நரேந்  திர மோடியைப் பாராட்டிப் பேசுவது காந்தியைக் கொன்ற கோட்சேயைப் பாராட்டுவது போன்றது என்று பேசியுள்ளார்.
உண்மைதானே! காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவான பிஜேபியை சேர்ந் தவர் தானே மோடி! இவுர் பிரதமராக வரவேண்டும் என்று துடிப்பதும் ஆர். எஸ்.எஸ். வட்டாரம்தானே!
அடிப்படைவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸின் முக்கிய கொள்கை சிறு பான்மையினரை ஒழிப்பது தானே!
கோத்ரா ரயில் பெட்டி எரிப்பில் கரசேவகர்கள் எரிந்தனர் என்பதை மய்யப் படுத்தி, பழியை முஸ்லீம்கள்மீது போட்டு ஆயிரக் கணக்கான சிறுபான்மை முசுலீம் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு அரசு அதிகாரத்தை பயன்படுத்தி யவர் தானே இந்த மோடி!
பொடா சட்டத்தின்கீழ் 287 பேர்கள் குஜராத்தில் சிறையில் தள்ளப்பட்டனர். என்றால் அதில்  அதில் 286 பேர் முசுலிம், ஒருவர் சீக் கியர். பாதிக்கப்பட்ட மக் களுக்குச் சிறை; பாதிப் புக்குக் காரணமானவர் களோ வெளியிலே உல்லாசம்!
காந்தியாரைக் கொன்ற கோட்சேகூட அந்தப் பழியை முசுலிம் சமூகத்தின்மீது போடுவதற்குத் தனது கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொள்ளவில்லையா? சுன்னத்தும் செய்து கொள்ளவில்லையா?
மை நாதுராம் கோட்சே போதல்தா என்ற நாடகத்தை நடத்திய கூட் டம் தானே ஆர்.எஸ்.எஸ்? கோட்சேயைக் கடவுளாக  வும் காந்தியாரை அரக்க னென்றும் சித்திரிக்கும் நாடகம்தானே அது.
குஜராத் மாநில அரசு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அரசு ஊழியர்களாக இருக் கலாம் என்று சொல்ல வில்லையா?
குஜராத்தின் கோத்ரா நிகழ்வைத் தொடர்ந்து அரசு அதிகாரத் துணை யோடு,  சங்பரிவார்களால்  முசுலிம்கள் படுகொலை வேட்டையாடப்பட்ட போது இந்த மோடி என்ன சொன்னார்?
எந்த ஒரு செயலுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டு என்ற நியூட்டன்  கொள் கையை முதல் அமைச்சர் என்ற மிகப் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்த நரேந்திரபாய் தாமோ தரதாஸ் மோடி சொன்னார் என்றால் அதன் பொருள் என்ன?
குஜராத்தில் சிறுபான் மையினர் படுகொலை செய்யப்பட்ட அதே பாணியை இந்தியா முழுவதும் அரங் கேற்ற வேண்டும் என்பது தான் சோ போன்ற பார்ப் பனர்களின் அடக்க முடி யாத ஆரிய வெறியாகும்.
அந்த வகையில் காங் கிரசின் மூத்த தலைவர் களுள் ஒருவரான மத்திய சுரங்கத் துறை அமைச்சர் மோடியைப் பற்றி சொன் னது சாதாரண வாசகமல்ல - திருவாசகமே!
-   மயிலாடன்


ஜனவரி 16-31 - 2013

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...