Monday, December 31, 2012

அரசுக்குப் பொறுப்பில்லையா?


மாயன் காலண்டர் என்ற புழுதி அடித்து ஓய்ந்து விட்டது. நம் நாட்டு ஊடகங்கள் இப்பிரச்சினையில் நடந்துகொண்டமுறை வெட்கித் தலைகுனியத் தக்கது.
ஒரு பிரச்சினை ஓய்ந்து இன்னொரு பிரச்சினை அவர்களுக்குக் கண்டிப்பாக முதலீடு தேவைப்படு கிறது. அந்த வியாபார தந்திரத்துக்காகவே மக்களைக் குழப்புவதுபற்றிக் கவலைப்படாமல், முட்டாள்தனமான ஒன்றைக் காற்று ஊதி உயரே பறக்கச் செய்கிறார்கள்.
அறிவியலுக்கு விரோதமானது என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தும், வேண்டுமென்றே மக் களிடத்தில் கண், காது, மூக்கு வைத்துப் பரப்புவது மோசடியில்லாமல் வேறு என்னவாம்?
இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) என்ற பகுதி ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்ன என்று கூறுகிறது!
விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனிதாபி மானம் மற்றும் ஆராய்ச்சி, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதும், காப்பதும் அவசியம் என்று ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலி யுறுத்தியுள்ள நிலையில், அந்த விஞ்ஞானத்துக்கு விரோதமாக மாயன் காலண்டர் என்பது போன்ற மூடத்தனங்களைப் பரப்பும் வேலையில் ஊடகங்கள் ஈடுபடலாமா? நாய் விற்ற காசு குரைக்காது என்ற மனப்பான்மைதான் அதற்குக் காரணம் என்றால், இதைவிட நாணயமற்ற, நேர்மையற்ற ஒன்று இருக்க முடியுமா?
எதை மன்னித்தாலும் மனிதனின் அறிவை நாசப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மன்னிக்கவே கூடாது என்று தந்தை பெரியார் கூறும் கருத்தில் ஒளிரும் சமூகப் பொறுப்புணர்ச்சியை சற்று நினைத்துப் பார்க்கட்டும்.
மக்களுடைய அறிவு, காலம், பொருள் இவற்றைப் பாழ்படுத்துவதற்கு, சீர்குலைப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
நியாயமாக மக்கள் நல அரசு (Welfare State) என்றால், இதுபோன்ற மூடத்தனமான - மோசடியான வற்றைப் பரப்பும் அல்லது அதற்கு ஊக்கம் கொடுக் கும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே!
லண்டன் தொலைக்காட்சியில் ருத்திராட்சம் பற்றி ஒரு விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது. கெட்ட ஆவிகளை ருத்திராட்சம் விரட்டும் என்று கூறப்பட்டது. எதிர்ப்பு வெடித்துக் கிளம்பவே அந்த விளம்பரம் உடனே தடுத்து நிறுத்தப்பட்டது.
இங்கு என்னடா என்றால், பொழுது விடிந்தது முதல் ஊசிப் போன சரக்கு விநியோகம்தானே நடந்துகொண்டு இருக்கிறது.
திருவண்ணாமலை தீபம் என்று கூறி டன் டன்னாக நெய்யைக் கொட்டி, ஆயிரக்கணக்கான மீட்டர் துணிகளை எரிய விடும் ஒரு நிகழ்ச்சியை நேரிடையாக இங்குள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன என்பது எத்தகைய வெட்கக்கேடு!
ஒவ்வொரு வாரமும் ஆன்மீகச் சிறப்பிதழை நாளேடுகள் வெளியிடுகின்றன. புராணக் குப்பை களை அபத்தமானவற்றை அவற்றில் அள்ளிக் கொட்டுகின்றன.
எல்லா அக்கப்போர்களையும் எழுதிவிட்டு கடைசியில் எப்படி முடிப்பார்கள் தெரியுமா? .....என்பது அய்தீகம்..... என்பது நம்பிக்கை என்று முடிப்பார்கள்.
வெளியிடுகிறவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் மக்களை மடையர்களாக்குவது கொலை குற்றத்தைவிட மோசமானது அல்லவா!
இராசி பலன்களை வெளியிடுவது யோக்கியமான செயலா? இப்பொழுது 2013 ஆம் ஆண்டுக்கான ஆன்மிகத் தகவல்கள் என்று சிறப்பிதழை வெளியிடு கிறார்கள்.
எத்தனை ஆயிரம் ஆண்டுகாலமாக ஆன்மிகம் இருந்து வருகிறது? காதொடிந்த ஊசி அளவுக் காவது பலன் உண்டா?
ஆன்மிகம் மக்களின் வளர்ச்சிக்குக் கண்டு பிடித்துக் கொடுத்தது என்ன? விரலை மடக்க முடியுமா?
நம்மை முட்டாளாக்கியது - சோம்பேறிகளாக் கியது - நமது பொருளையும் - பொழுதையும் பாழாக் கியது அல்லாமல் ஆன்மிகத்தால் ஏற்பட்ட நிகரப் பலன் என்ன?
மதங்களுக்கு உரிமை உண்டு, அதன் விடயங் களில் அரசு தலையிடாது என்பது பொறுப்பான நிலைப்பாடா?
இன்னும் பள்ளிப் பாடங்களில் புராணக் குப்பைகள் இடம்பெறுவது ஏன்? எதிர்காலம் நிகழ்கால இருபால் மாணவர்களின் கைகளில்தானே இருக்கிறது - அவர்களுக்கு அறிவைக் கொடுக்க வேண்டாமா?
அரசும், பொதுநல விரும்பிகளும், அறிவியல்வாதி களும் இந்த வகையில் சிந்திக்கட்டும்! செயல் படட்டும்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...