Monday, December 31, 2012

தமிழ்நாட்டில் கிளர்ச்சி வெடிக்கும்!

15 நாட்களுக்குள்  நடுவர்மன்றத் தீர்ப்பை வெளியிடாவிட்டால் தமிழ்நாட்டில் கிளர்ச்சி வெடிக்கும்!தஞ்சையில் தமிழர் தலைவர் எச்சரிக்கை!


தஞ்சாவூர், டிச.30- காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை 15 நாட்களுக்குள் அரசிதழில் (கெசட்) வெளியிடா விட்டால் தமிழ்நாட்டில் மாபெரும் கிளர்ச்சி வெடிக்கும் என தஞ்சையில் தமிழர் தலைவர் அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சையில் இன்று (30.12.2012) காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
காவிரி நதிநீர் பிரச்சனையை பொறுத்த வரையில் நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டுமென முதன் முதலாக வலியுறுத்திய இயக்கம் திராவிடர் கழகம். வி.பி.சிங் பிரதமராகவும், கலைஞர் முதல்வராகவும் இருந்த காலத்தில் 250 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பை கர்நாடக அரசு பின்பற்றவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டே வந்துள்ளது.
1991-இல் கர்நாடகத்தில் 10 இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கராக இருந்த கர்நாடக விவசாய பரப்பு தற்போது 19 லட்சமாக உயர்ந்துள்ளது. அதை மேலும் 6.7 ஆயிரம் ஏக்கர் பரப்பை விரிவுபடுத்த 5,500 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மேட்டூர் அணை உருவாக்கப்பட்ட போது 28 லட்சம் ஏக்கர் இருந்த விவசாயப் பரப்பு தற் போது 16 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கராக குறைந்துள்ளது. இந்நிலையில் குறுவை சாகுபடி அழிந்த நிலையில் சம்பா பயிரையாவது காப்பாற்ற வேண்டும்.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு 419 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்ற ஆணையை கர்நாடகம் மதிக்கவில்லை. இந்நிலையில் 2007ஆம் ஆண்டு வழங்கிய இறுதித் தீர்ப்பை இதுவரை கெசட் செய்யவில்லை. காவிரி நதி நீர் ஆணைய தீர்ப்பை கெசட் செய்ய வேண்டும் என தொடர்ந்து எழுதி  வருகிற ஏடு; விடுதலை வலியுறுத்தி வருகிற இயக்கம் திராவிடர் கழகம்.
கிளர்ச்சி வெடிக்கும்!
நதிநீர் ஆணையத் தீர்ப்பை இன்னும் 10,15 நாட்களுக்குள் கெசட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் நாடு ஸ்தம்பிக் கக் கூடிய கிளர்ச்சி வெடிக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு தமிழக அரசு கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
உயிரிழந்த விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும் பேசினார்.
அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் தமிழர் தலைவர்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...