Wednesday, December 26, 2012

பெரியாருக்கு நிகர் உலகில் எந்தத் தலைவரும் இல்லை தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்


சிலையை நன்கொடையாக வழங்கிய மாவட்ட தி.க. தலைவர் அ.கோ.கோபால் சாமி - கவுசல்யா இணையர்களைப் பாராட்டி தளபதி மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார்.
செங்கற்பட்டு, டிச. 25- உலகளவிலும் கூட தந்தை பெரியார் அவர்களுக்கு நிகரான தலைவர் வேறுயாருமில்லை என்றார் தி.மு.க. பொரு ளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்.
செங்கற்பட்டில் நேற்று மாலை தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைத்து உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
என் வாழ்நாளில் எனக்கு மகிழ்ச்சி அளிக் கக்கூடிய - எனக்குப் பெருமை சேர்க்கக் கூடிய நிகழ்ச்சி - தந்தை பெரியாரால் சுயமரி யாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்ட இந்த செங்கற்பட்டில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை யைத் திறக்கக் கூடிய பேறு எனக்குக் கிட்டிய தாகும்.
எனக்குக் கிடைத்த பேறு!
இதற்கு முன்பு தாரா புரத்தில் இந்தப் பெரு மையை ஆசிரியர் அவர் கள் எனக்குத் தந்தார்கள். பிற்காலத்தில் எனக் கென்று ஒரு வாழ்க்கை வரலாறு எழுதப்படுமானால், இந்த நிகழ்ச்சி தான் மிக முக்கியமான தாக, பெருமைக்குரிய தாக இடம் பெறும் (கைதட்டல்).

திராவிடர் கழக கொடியைப் போல அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடை (செங்கற்பட்டு, 24.12.2012)
வேறு எத்தனையோ எத்தனையோ நிகழ்ச்சி களில் நான் கலந்து கொண்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு ஈடா காது.
34 தீர்மானங்கள்
1929இல் இங்கு நடைபெற்ற மாநாட் டில் 34 தீர்மானங்கள் முத்து முத்தானவை. தி.மு.க. ஆட்சிக் காலத் தில் தலைவர் கலைஞர் ஆட்சியில் ... சட்டங்களாக ஆக்கப் பட்டுள்ளன.
அண்ணா அவர்கள் குறுகிய காலமே ஆட் சியில் இருக்க முடிந்தது. அந்தக் குறுகிய காலத் தில்கூட அய்யாவின் மூன்று முக்கிய கொள் கைகளை சட்டமாக வடித்துத் தந்தார்கள்.
அண்ணாவின் மூன்று முத்தான சாதனைகள்
1. தந்தை பெரியார் உருவாக்கிய மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்யப்பட்ட சுயமரி யாதைத் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம்.
2. சென்னை மாநி லத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் சட்டம்.
3. தமிழ்நாட்டில் என் றைக்கும் இந்திக்கு இடம் இல்லை - இரு மொழித் திட்டம் மட் டுமே என்ற சட்டமா கும்.
பெரியார் நினைவு சமத்துவபுரம்
அதுபோலவே பெரியார் அவர்களின் ஜாதி ஒழிப்புக் கொள் கையை உள்வாங்கி, தலைவர் கலைஞர் அவர் களால் உருவாக்கப் பட்ட பெரியார் நினைவு சமத்தவபுரமாகும்.
அய்ரோப்பில் பெரியார், மேல்நாட்டுச் சிந்தனையாளர்களும் பெரியாரும் - ஓர் ஒப்பியல் ஆய்வு, மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் ஆகிய நூல்களை தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட, தி.இரா.இரத்தினசாமி, பு.எல்லப்பன், டி.ஏ.ஜி.அசோகன், அ.இராமச்சந்திரன், மதிவாணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் (செங்கற்பட்டு, 24.12.2012)
ஜாதி, மதங்களைக் கடந்து மனித சமத்து வம், மேலோங்கச் செய்ய ஏற்பாடு செய்யப் பட்ட தாகும். பிறகு ஒவ்வொரு பெரியார் நினைவு சமத் துவபுரத்திலும் தந்தை பெரியார் சிலை நிறுவிட ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சி களிலெல்லாம் நான் கலந்து கொண்டது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு ஆகும்.
ஆட்சி மாற்றம் ஏற் பட்டவுடன் அந்தத் திட் டத்தைக் கைவிட்டுவிட் டார்கள் என்ற வேதனை யையும் தளபதி மு.க. ஸ்டாலின் வெளிப்படுத் தினார்.
தளபதி மு.க.ஸ்டா லின் அவர்கள் தம் உரை யில் மிக முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவூட்டினார்.
ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம்
ஆச்சாரியர் (ராஜாஜி) அவர்கள் முதல் அமைச் சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டம். அப்பன் தொழிலை பிள்ளை செய்யவேண் டும் என்ற பாரம்பரியமான குலத்தொழிலைப் புதுப்பிக்கும் திட்டமா கும்.
அந்தக்கால கட்டத் தில் தந்தை பெரியார் பொங்கி எழுந்து அந்தத் திட்டத்தை முறியடித் தார்கள். அந்தத் திட்டம் மட்டும் செயல்பட்டு இருக்குமானால் நம் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு களைப் பெற்றிருக்க முடியுமா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அறிஞர் அண்ணா முதல் அமைச்சர் ஆனார். அவருக்கு உடனடியாகத் தோன்றியது என்ன தெரியுமா?
திருச்சிக்கு சென்று தந்தை பெரியார் அவர் களைச் சந்திக்க வேண் டும் என்று நினைத்தார்.
சக அமைச்சர்களுக் குக் கூட அதனைத் தெரிவிக்கவில்லை. காரில் போகும்போது தான் அதனைக் குறிப் பிட்டார்.
தேர்தலில் திமுகவை பெரியார் எதிர்த்தாரே என்று அண்ணா நினைக்க வில்லை. அய்யா மீது அண்ணாவுக்கு இருந்த மதிப்பும், நன்றி உணர் ச்சியும் தான் முக்கியமா னவை. அதனால்தான் இந்த ஆட்சியே பெரி யாருக்குக் காணிக்கை என்று சட்டப்பேரவை யிலேயே முதல் அமைச் சர் அண்ணா அறிவித் தார்.
தந்தை பெரியார் 94 ஆண்டு 3 மாதம் 7 நாட்கள் உயிர் வாழ்ந் தார். அவர் ஆற்றிய உரையை டேப்ரிக்கார் டில் பதிவு செய்து ஒலி பரப்புச் செய்யப்பட் டால் அது 21 லட்சத்து 400 மணி நேரம் ஓடிக் கொண்டே இருக்கும்.
பெரியாருக்கு நிகர் பெரியாரே!
உலக அளவில் ஒப் பிட்டாலும் தந்தை பெரியாருக்கு இணை வேறு யாரும் இருக்க முடியாது.
தந்தை பெரியார் மறைந்தார். அவர் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று முதல் அமைச்சராக இருந்த தலைவர் கலை ஞர் விரும்பினார். அதி காரிகளை அழைத்து உத்தரவிட்டார். அதி காரிகள் தயங்கினார்கள்.
எந்த அரசு பொறுப் பிலும் பெரியார் இல் லையே - அப்படி இருந் தால்தான் அரசு மரி யாதை கொடுக்க முடி யும் - சட்டம் அப்படி தான் கூறுகிறது என்றனர்.
அப்பொழுது தலைவர் கலைஞர் ஒரு கேள்வியைக் கேட்டார். காந்தியார் எந்த அரசுப் பதவியில் இருந்தார் - அவருக்கு அரசு மரி யாதை கொடுக்கப்பட வில்லையா?
எங்களையெல்லாம் ஆளாக்கிய தந்தை பெரி யார் அவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்தால் என் ஆட்சி பறிபோகும் என்றால் அது எனக்கு மகிழ்ச்சியே என்று சொன்னவர் தலைவர் கலைஞர் என்று வர லாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்தார்.
மற்றும் இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கம் அளித் தார் (முழு உரை பின்னர்).
வெற்றிகரமாக விழா முடிந்தது
செங்கற்பட்டு நகர கழகத் தலைவர் பூ.சுந் தரம் நன்றி கூறிட இரவு 9.30 மணிக்கு விழா வெற் றிகரமாக முடிந்தது.

நூல்கள் வெளியீடு
விழாவின் சிறப்பு அம்சங்களுள் ஒன்று இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட மூன்று நூல்களின் வெளியீடாகும்.
1. அய்ரோப்பாவில் பெரியார் (தொகுப்பாசிரியர் கி. வீரமணி) பக்கங்கள் 384, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு.
2. உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் - தந்தை பெரியாரும் - ஓர் ஒப்பியல் ஆய்வு (பேராசிரி யர் ஆர். பெருமாள் - தமிழில் மொழிபெயர்ப்பு முனைவர் ப. காளிமுத்து, வெளியீடு: பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், பக்கம் 152.
3. மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் (பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்) பக்கங்கள் 192 - வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
நூல்களை - சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா. இரத்தினசாமி, காஞ்சி மண்டல திராவிடர் கழகத் தலைவர் பு. எல்லப்பன், காஞ்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டி.ஏ.ஜி. அசோகன், செங்கற்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. இராமச்சந்திரன் மற்றும் மதிவாணன் ஆகியோர் பணம் கொடுத்து நூல்களை தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்!

திருச்சி (திருவெறும்பூர்) பெரியார் மருத்துவ முகாமில் அதிர்ச்சி!
தந்தை பெரியார் நினைவு நாளில் திருவெறும்பூரில் பெரியார் பெருந்தொண்டர் சேகர், மற்றவர்கள் முயற்சியில் புற்று நோய் அறிதல் குறித்து மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
பெரியார் மருந்தியல் கல்லூரி, வளாகக் கல்வி நிறுவனங்கள் திருச்சியில் உள்ள ஹர்சமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில்  மருத்துவர்கள் கோவிந்தராஜன், மருத்துவர்கள் சீத்தாலட்சுமி, சோம.இளங்கோவன், சரோஜா இளங்கோவன் பங்கேற்றனர்.
இதில் 82 பெண்கள் சோதனைக்கு வந்தனர்!  அதிலே 20 பேருக்கு மார்பகப் புற்று நோய் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டு மேல் சோதனைகள் செய்யப்பட உள்ளனர்.
10 பேருக்குக் கருப்பை வாயில் புற்று நோய் கண்டறியப்பட்டது! இதில் 5 பேருக்கு இது முற்றிய நிலையில் உள்ளது என்று அதிர்ச்சி அறியப்பட்டது.
திருமதி.கோவிந்தராஜன் வேண்டிய உதவிகள் செய்வதாக உறுதியளித்தார். மிகவும் வெளிப்படை யாக, அனைவர்க்கும் புரியும் படியாக புற்று நோய் அறிகுறிகள், ரகசியமாக் வைத்துக் கொள்ளாமல் ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டிய அவசியம், தடுப்பதற்கான வழிகள், புதிதாக வந்துள்ள தடுப்பு ஊசி இவை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
புற்றுநோய் பற்றிய புரிந்துரைத்தல் இன்றி மிகவும் அவசியம். பெண்கள் ரகசியம் காக்காமல் நோய்த் தடுப்பதற்கும் ஆரம்ப அறிகுறிக்கும் அவசியம் மருத்துவம் வேண்டும்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...