Thursday, December 6, 2012

பெரியாரைப் பேணித் தமரா கொளல்


பெரியாரைப் போற்றித் தமக்கு சுற்றத் தினராகக் கொள்ளுதல், வாய்ப்புகளில் எல்லாம் தலையானதாகும். திராவிடத் தால் வீழ்ந்தோம் எனக் கூறி, கொள்கைக் குழப்பம் ஏற்படுத்தும் வீணர்களை வீழ்த்துவோம்.
திராவிடர் இயக்கம் என்னென்ன சாதனைகளை சாதித்தது எனப் பட்டியலிடுவதைவிட, சுருக்கமாகக் கூறின், மனிதனை மனிதனாக்கியது. இன்றைக்கு, பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகளை, திராவிடக் கொள்கையால் பயனடைந்த சில சூத்திரர்கள், தமிழ்த் தேசீயம் என்ற பெயரால் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் துரோகிகளின் செயலை முறியடித்து, இவர்களின் முகமூடியை கிழித்தெறிவோம் என்று தந்தை பெரியார்   பிறந்த நாளில் உறுதி ஏற்போம்.
மருத்துவக் கல்வி படிப்பதற்காக சமஸ்கிருதம் தேவை என்றிருந்த நிலையை மாற்றியது யார் உழைப்பு? - எந்த இயக்கத்தின் உழைப்பு என்பதை, இந்த அறிவுக் கொழுந்துகள் அறிந்து கொள்ள வேண்டும். தந்தை பெரியாரின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இல்லை யெனில், அவதூறு பேசுவோர் அறிவு பெற்றிருப்பார்களா?
தந்தை பெரியார் கொள்கை உலகமயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலேயே சில மேதாவிகள் பெரியாரைக் குறை கூறு வதை இனியும் பொறுத்துக் கொள்ளக் கூடாது; சரியான பதிலடி கொடுக்க அறைகூவல் விடுப்போம். தந்தை பெரியாரின் கொள்கையை விளங்கிக் கொண்டதன் விளைவுதான், ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை. அத் தகைய சீர்மிக்க விழாவில், கலந்து கொண்ட ஆந்திர அமைச்சர்கள் சூட்டிய புகழாரமாகும். தந்தை பெரியாரின் கருத்துக்கள் தெலுங்கு மொழியில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன.
எச். நரசிம்மையா
கருநாடக மாநிலத்தில், முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியாரின் தொண்டர்களால், அய்யா வின் கருத்துக்கள் கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட் டன. 1982ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தோழர்கள் பெங்களூரிலிருந்து மைசூர் சென்று, அந்நூல்களை வெளியிட்டனர்.
மைசூரில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்க, அன்றைய பெங்களூர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் எச். நரசிம்மையா சிறப்புரையாற்றினார். அந்த விழாவில் பேசிய துணைவேந்தர், பெரியாரை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்க வில்லையே என்று வருத்தப்பட்டார். ஆனால், தமிழகத்தில் சில துரோகிகள் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற வாதத்தை தூள் தூளாக்குவோம்.
உத்தரப்பிரதேசத்தில்...
சில ஆண்டுகளுக்குமுன்பு, உத்தரப் பிரதேசத்தில், முதல்வராகயிருந்த பொழுது செல்வி மாயாவதி அவர்கள் தந்தைபெரியாருக்கு பெரியார் மேளா என்ற பெயரில், விழா எடுத்து தன் நன்றி உணர்வை வெளிப்படுத்தினர். ஏனெனில், செல்வி மாயாவதியின் அரசியல் ஆசானான கன்ஷிராம் அவர்கள், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கொள் கைகளால் ஈர்க்கப்பட்டுதான், பகுஜன் சமாஜ் கட்சி என்ற அமைப்பை உருவாக் கினார். இன்றைய உத்திரப்பிரதேச அரசியல் மாற்றத்திற்கே காரணம் பெரியார் என்கிற விதைதான்.
உலகமயமாகும் பெரியார்
கடந்த மே மாதம் கருநாடக மாநிலத்தில் சரவண பெலுகோலா என்ற ஊரில் நடைபெற்ற கருநாடக ராஜ்ய விச்சாரவதிகளு ஒக்கூட்டு (கருநாடக மாநில பகுத்தறிவாதிகளின் கூட்டமைப்பு) மாநாட்டு நிகழ்வில், பேசிய கன்னடத் தைத் தாய்மொழியாகக் கொண்ட தோழர்கள் அனைவரும் பெரியாரைப்பற்றி பேசிய கருத்துக்கள், என்னை மெய் சிலிர்க்க வைத்தன. அத்துணைத் தெளிவாகப் பேசினர்.
இச்செயல்கள் எல்லாம் பெரியார் உலகமயமாக்கப் பட்டதன் விளைவாகும். தமிழகத்தில் திராவிடத்திற்கு எதிராகப் பேசும் வீணர்கள்  அங்கு சென்று, இந்தியில், கன்னடத்தில், தெலுங்கில் பேசி பெரியா ரையும், திராவிடத்தையும் வீழ்த்த முடியாது.
பேராசிரியர் பூ.சி. இளங்கோவன்
அமைப்புச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...