Monday, December 31, 2012

நெத்தியடி யாருக்கு?


அடேயப்பா அண்ணா திமுக ஏடான நமது எம்.ஜி. ஆர். ஏட்டுக்குக் கோபத்தைப் பாரு! மீசை துடிப்பதைப் பாரு!
தமிழகத்தில் பெண் களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கருத்துக் கூறி விட்டாராம்.
அதற்குப் பதில் என்ன தெரியுமா? கலைஞர் ஆட்சி யில் சரிகாஷா, பால்மலர் என்பவர்களுக்கெல்லாம் அநியாயம் நடக்கவில் லையா என்ற கேள்வியைக் கேட்கிறது.
பெண்களுக்குக் கொடுமை நடந்த போதெல் லாம் தன் கண்டனத்தைத் தெரிவிக்கத் தவறியதில்லை திராவிடர் கழகமும் - அதன் போர்வாளான விடுதலையும்.
எந்த ஆட்சிக் காலத் திலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக அவலங் கள் நடப்பது இயல்புதான்.
(கலைஞர் ஆட்சியில் கூட இரண்டு நிகழ்ச்சி களைத் தானே சுட்டிக் காட்ட முடிந்திருக்கிறது நமது எம்.ஜி.ஆர். ஏட்டால்?)
ஆனால் பெண் முதலமைச்சராக இருக்கக் கூடிய தமிழ்நாட்டில் பெண் களுக்கான வன்கொடு மைகள் தொடர் கதையாக இருக்கிறதே - அதைச் சுட்டிக் காட்டினால் ஆத்தி ரப்படுவது ஏன்? அலறுவது ஏன்?
திருவைகுண்டம், விருத்தாசலம், நாகை (புத்தகரம்) சிதம்பரம் மஞ்சக்குப்பம், திருப்பத்தூர் என்று அடுத்தடுத்து ஒரு வார காலத்திற்குள் பெண்ணொருவர் முதல் அமைச்சராக இருக்கும் மாநிலத்தில் பெண்கள் சூறையாடப்படுகிறார்களே என்று கேட்டால் பொறுப் போடு சிந்திக்காமல், இந்த அவலம் இனியும் தொடரக் கூடாது என்று எண்ணிப் பார்க்காமல், பூனை கண் மூடினால் பூலோகமே இருண்டு விடும் என்று நினைக்குமாம்; அதுபோல அலமருகிறதே அண்ணா திமுக ஏடு!
அந்த ஏடு கூறுவதை விவாதத்துக்காகவே ஏற்றுக் கொள்வதாக எடுத்துக் கொண்டாலும் அது எப்படி நியாயமாக இருக்க முடியும்?
இன்னொரு ஆட்சியில் நடந்தது; எனவே எங்கள் ஆட்சியிலும் நடக்கும் தான் என்று சொல்லுவது ஆட் சிக்கு அழகா?
டில்லியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன் என்று சொல்லும் தமிழக முதல் அமைச்சர், தன் மாநிலத்தில் அதைவிட அதிக எண்ணிக்கையில் பாலியல் வன்கொடுமை நடக்கும் பொழுது அதை விடப் பல மடங்கு அல்லவா அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும்?
பொழுது விடிந்து பொழுதுபோனால், கொலை, கொள்ளை, பூட்டு உடைப்பு, பாலியல் வன் முறை இதுதானே அதிமுக ஆட்சியின் அன்றாட சாதனை! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்ள ஆசைப்பட  வேண்டாம் நமது எம்.ஜி.ஆர். ஏடு. -   மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...