Tuesday, December 11, 2012

தருமபுரி மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் சங்கநாதம்


அம்பேத்கர் சிலை திறக்கும் இடங்களில் எல்லாம்
தந்தை பெரியார் சிலையையும் திறப்போம்!
தருமபுரி மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் சங்கநாதம்
விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணி வித்தார். (தருமபுரி - 9.12.2012)
தருமபுரி, டிச. 11- அம்பேத்கர் சிலை திறக் கப்படும் இடங்களில் தந்தை பெரியார் சிலை யையும் திறப்போம் என்றார் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்.
தருமபுரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் 9.12.2012 அன்று நடைபெற்ற ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
தமிழர் தலைவருக்கு நன்றி!
தந்தை பெரியார் உயிரோடு இருந்திருந்தால் எந்தப் பணியை, எந்தக் கடமையைச் செய்திருப் பார்களோ அதே கடமையை அதே பணியை நமது தமிழர் தலைவர் இன்று செய்திருக்கிறார். அதற்காகக் கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பெரியார் திடலில் வளர்ந்த பிள்ளை, அங்குதான் நான் சமுதாய இயலை அரசியலில் கற்றுக் கொண்டவன்.
இந்த நிலையில் இந்தத் திருமாவளவன் தடம் மாற மாட்டான் - தவறான வழியையும் காட்ட மாட்டான்.
அன்று பெரியார் போட்ட தீர்மானம்!
இதே நாளில் 1973இல் தந்தை பெரியார் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டை நடத்தியதாக இங்கே குறிப்பிட்டார்கள். தீண்டாமை ஒழிக்கப் படுகிறது என்தற்குப் பதிலாக ஜாதியையே சட்ட ரீதியாக ஒழிக்க வேண்டும் என்று அந்த மாநாட் டில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்கள் என்று அறியும்போது, எந்தளவு தொலைநோக்கோடு தந்தை பெரியார் சிந்தித்து இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
எங்கெங்கெல்லாம் அம்பேத்கர் சிலையைத் திறக்கிறோமோ அங்கெல்லாம் தந்தை பெரியார் சிலையையும் திறப்போம். இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை. இவற்றை முழு மனதோடு விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.
உணர்ச்சி வயப்படக் கூடாது!
இந்த நேரம் மிக முக்கியமான நேரம் அமைதி காக்க வேண்டிய நேரம். உணர்ச்சி வயப்பட்டு எந்த செயலிலும் இறங்கி விடக் கூடாது அதனைத்தான் சிலர் இங்கு எதிர் பார்க்கிறார்கள். அதற்கு நாம் பலியாகி விடக் கூடாது.
என்னை யாரோ தூண்டுவதாக பா.ம.க. தலைவர் கூறி இருக்கிறார். இதில் யாரும் தூண்ட வும் இல்லை; அப்படி யார் தூண்டினாலும் அதற்குப் பலியாகி விடும் பலகீனமானவனும் இந்தத் திருமா வளவன் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன். தலித் மக்கள் அரசியல் ரீதியாக பலம் பெறுவது சிலருக்குப் பிடிக்கவில்லை.
பெரியார் இயக்கம் போலவே...
திருமாவளவன் எந்த சமூகத்திற்கும், எந்த ஜாதிக்கும் எதிரியானவன் அல்ல. திராவிடர் கழகம் போல பெரியார் இயக்கம் போல ஒழுங்கு முறை யுடன் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு இயங்க வேண்டும் என்று கருதி செயல்பட்டு வருகிறோம். பெரியார் இறுதி மூச்சுக்குப் பிறகு நமது தமிழர் தலைவர் அவர்கள் செயல்படும் பாங்கினை உள் வாங்கிக் கொண்டு செயல்பட விரும்புகிறேன்.
தமிழர் தலைவர் சொன்னதுபோல இரட்டைக் குழல் துப்பாக்கியோடு மூன்றாவது குழலாக நாங் கள் செயல்படுவோம். காதல் கூடாது என்கிறார்கள். பெண்களே இல்லாத ஆண்கள் சங்கம் அமைத்தாலும் அமைப் பார்கள் பெண்களுக் குச் சொத்துரிமை கூடாது என்று கூற ஆரம்பித்து சொத்துரிமையும் கூடாது என்று தீர்மானம் போட்டாலும் போடுவார்களா என்று தெரியவில்லை.
நன்றி! நன்றி!!
இந்த மேடையில் உள்ளவர்கள் தலித் அல்லா தார்தான். ஆனாலும் தலித் மக்களுக்காகக் குரல் கொடுக்க முன் வந்துள்ளனர். அதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...