Sunday, December 16, 2012

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளதா?


ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா (13.12.12) அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். பட்டதாரி ஆசிரியர்கள் 10,621 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 8,722 பேர் உட்பட 19,343 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்க்கப்பட்டதில் சிலர் தகுதி இழந்ததாக கூறி 18,382 பேர் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு .பணி நியமன ஆணை வழங்கியுள்ளது.    இந்த பணிநியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப் பட்டுள்ளதா? தாழ்த்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள், தங்கள் இட ஒதுக்கீட்டிற்கு உரிய விகிதாச்சாரப்படி இடம்பெற்றிருக் கிறார்களா?
கணவரை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், மொழிப்போர் தியாகிகள், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டோர் போன்ற முன்னுரிமை  வரிசையில் எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்?    தேர்வு மதிப்பீட்டில் பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கு தகுதி மதிப்பெண் 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்தில் "சமுக நீதிஅடிப்படையில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கு தகுதி மதிப்பெண் குறைக்கப்படவில்லை"என்கிற வழக்கு சிலதினங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டதில் நீதிபதி சந்துரு தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி தாக்கீது அனுப்பியுள்ள நிலையில் அவசர அவசரமாக இந்த பணிநியமன விழா நடைபெற்றுள்ளது.     தமிழகஅரசின் தகுதித்தேர்வு மோசடியில் சமூகநீதி அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடுமா?
- கி. தளபதிராஜ், மயிலாடுதுறை

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...