Tuesday, December 4, 2012

டிசம்பர் 2 சுயமரியாதை நாள்


டிசம்பர் 2 சுயமரியாதை நாள் - தமிழர் தலைவர் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா


தந்தை பெரியார் நினைவிடத்தில் மரக்கன்று நட்டார்
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்துறை அறிஞர்கள்
கழகப் பெரு மக்கள் அலை அலையாய் வந்து நேரில் வாழ்த்து!
பெரியார் (தொண்டர்கள்) நலப் பாதுகாப்பு அறக்கட்டளை நிதியும் குவிந்தது
இன்று 80ஆவது பிறந்த நாள் காணும் தமிழர் தலைவருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
சென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவான இன்று பல்துறைப் பெரு மக்களும் நேரில் வந்து வாழ்த்துகளை கூறினர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2012) சுயமரியாதை நாளாக திராவிடர் கழகத் தோழர்களால் தமிழகமெங் கும் சிறப்பாக கொண் டாடப்பட்டு வருகிறது.
பெரியார் திடலில் சிறப்பான வரவேற்பு
இன்று (2.12.2012) காலை 9 மணியளவில் பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் கி.வீரமணி - மோகனா ஆகியோரை தமிழகமெங்கும் இருந்து வந்த திரண்டிருந்த கழகத் தோழர் - தோழியர்களின் வாழ்த்து ஒலி முழக்கமிட்ட வாறு இரு பக்கங்களிலும் வரிசையாக நின்று வரவேற் றனர்.
தமிழர் தலைவருக்கு சிறப்பு
கழகத் தோழர் புடை சூழ திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து கூறி வரவேற்றார்.
பெரியார் நினைவிடத்தில் மரக்கன்று நட்டார்
இதையடுத்து தமிழர் தலைவர் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரி யார் - அன்னை மணியம்மை யார் நினைவிடங்கள் அருகே தமது 80ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சந்தன மரக் கன்றை நட்டார் அவரது துணைவியர் மோகனா வீரமணி அவர்களும் மற் றொரு மரக் கன்றையும் நட்டார். தமிழர் தலைவருக்கு கனிமொழி வாழ்த்து
மாநிலங்களவை உறுப் பினர் கவிஞர் கனிமொழி அவர்கள் இன்று காலை சென்னை பெரியார் திட லுக்கு வருகை தந்து தமிழர் தலைவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்தும், மலர் மாலை அணிவித்தும் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தார். இதையடுத்து கலைஞர் தொலைக்காட் சியின் தலைவர் கல்வியாளர் ரமேஷ்பிரபா தமிழர் தலை வருக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தார். வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் தமிழர் தலைவருக்கு பொன் னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்தை கூறினார்.
குருதிக் கொடை முகாம் தொடக்கம்
முன்னதாக இன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மருத்துவமனையில் தமிழர் தலைவர் பிறந்த நாளை யொட்டி ஏற்பாடு செய்யப் பட்டிருந்த குருதிக் கொடை முகாமை மலேசியா திராவிடர் கழக பொதுச் செயலாளர் கே.ஆர்.ஆர். அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தமிழர் தலைவருக்கு நேரில் வாழ்த்து
முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட் சகன், முன்னாள் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுப. சீதாராமன், தஞ்சை ராசகோபால், ஒப் பந்தக்காரர் ராதாகிருஷ்ணன், மருத்துவர் வி.பி.நாராயணன், மறைமலை இலக்குவனார், பொறியாளர் உஸ்மான், மருத்துவர் நரேந்திரன்,
பேராசிரியர் மா.நன்னன், கலைஞர் டி.வி. நிர்வாகி சரத், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் சேகர்பாபு, நடிகர் குமரிமுத்து, திரைப் பட இயக்குநர் செய்யார் ரவி, திருப்பத்தூர் கணேஷ்மல், மதுரை தொழிலதிபர் கனகாம் பரம், பட்டுக்கோட்டை குமாரவேல், சச்சி தானந்தம், இயக்குநர் அமிர்தம், வழக் குரைஞர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பராதி, பேராயர் எஸ்றா சற்குணம், செங்கை சிவம், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திருச்சி ஞானராஜ், பெரம்பலூர் முகுந்தன்.
திராவிடர் கழகப் பொருளாளர் வழக் கறிஞர் கோ.சாமிதுரை, கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர் ராஜகிரி கோ.தங்கராசு, கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை சந்திரசேகரன், டாக்டர் பிறைநுதல் செல்வி, வீ.அன்புராஜ் குடும்பத்தினர், தஞ்சை இரா. ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி, சட்டத்துறை செயலாளர் ச.இன்பலாதன், திராவிடர் தொழிலாளரணி மாநில செயலாளர் ஆ.நாகலிங்கம், திராவிட மகளிரணி மாநில செயலாளர் குடவாசல், கணபதி, மகளிரணி, மாநிலச் செயலாளர் தஞ்சை கலைச்செல்வி, மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை, மாநில இளைஞரணி செய லாளர் இல.திருப்பதி, மாநில மாணவரணி செயலாளர் இளந்திரையன், கழக தென் மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் மதுரை தே.எடிசன் ராசா, கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, திருமகள், பழநி, புள்ளையண்ணன், சாமி, திராவிடமணி, நாகர்கோவில் ப.சங்கரநாரா யணன், திருப்பத்தூர் கே.சி.எழிலரசன்.
கல்பாக்கம் வேம்பையன், வடசென்னை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.குப்புசாமி, எழும்பூர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, எழும்பூர் தேவநிதி, காங்கிரஸ் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன்,  கவிக்கோ வா.மு.சேதுராமன், வா.மு.சே. ஆண்டவன், ஈப்போ மாணிக்கம், மருத்துவர் ஞானசுந்தரம், ஆடிட்டர் ராமச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர்.
வரியியலில் நிபுணர் ராசரெத்தினம், பேராசிரியர் மங்கள முருகேசன், புதுவை மாநில கழகத் தோழர்கள், நீதியரசர் ஏ.கே. ராசன், வழக்கறிஞர் சுப்பாராவ், வழக்கறிஞர் தியாகராஜன், சட்டக்கதிர் சம்பத், தி.மு.க. அமைப்பு செயலாளர் பெ.வ.வீ கல்யாண சுந்தரம், தி.மு.க  துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி.
பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் ரெத்தினம், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி, முன்னாள் சட்டமன்ற செய லாளர் மா.செல்வராஜ், எழுத்தாளர் விஜயன் பாலா, ஒளிப்பட நிபுணர் முத்துக்குமார், செய்தியாளர்கள் ஆரோக்கியசாமி, பழ. அன்பரசு, தினமணி முருகேசன், ஆடிட்டர் கந்தசாமி, முன்னாள் துணை வேந்தர் பெ.ஜெகதீசன், பேராசிரியர் மீனா கந்தசாமி, மருத்துவர் சொக்கலிங்கம், முனைவர் நாகநாதன், முன்னாள் மேயர் சா.கணேசன்,  எழுத்தாளர் கயல் தினகரன்,  அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, மருத்துவர் சொக்கலிங்கம்,  முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன், மாம்பலம் சந்திரசேகரன், காரைக்குடி என்.ஆர்.சாமி குடும்பத்தினர், 100 ரூபாய் நோட்டு மாலை அணிவித்தனர்.
கடல் சார்பல்கலைக்கழக துணை வேந்தர் நாசே ராமச்சந்திரன், தஞ்சை திருச்சிற்றம் பலம், கவிஞர் காசி , முத்துமாணிக்கம், முனைவர் எஸ்.டி.ரத்தினசபாபதி, கவிவேந்தர் கா.வேழவேந்தன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜின்னா, கடலார் வேலாயுதம், மற்றும் திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள் செயலாளர்கள் பொதுக்குழு, தலைமை செயற்குழு உறுப் பினர், கழக தோழர் - தோழியர், பெரியார் கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள், விடு தலை பணிமனை பணியாளர்கள் அனை வரும் தமிழர்தலைவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் நல்.இராமச்சந்திரன், வழக் கறிஞர்கள் வீரசேகரன், ஆம்பூர் துரைசாமி, பெரியார் திடல் மேலாளர் பி.சீத்தாராமன், விடுதலை அச்சுப்பிரிவு மேலாளர் சரவணன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராஜன், விடுதலை ராதா, பெரியார் கல்வி குழும ஒருங்கிணைப்பாளர் பி.சுப்பிர மணியன், பேராசிரியர் பர்வீன், மருத்துவர் மீனாம்பாள், மருத்துவர் சாரதா, பெரியார் மருத்துவமனை மேலாளர் குணசேகரன், பெரியார் பகுத்தறிவு ஆய்வக நூலகர் கோவிந்தன், திராவிடன் நல நிதி பொது மேலாளர் அருள்செல்வன், மயிலை காளத்தி, சேதுராமன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் திருவள்ளுவன், செயலாளர் கி.இராமலிங்கம், புலவர் சங்கரலிங்கம்.
அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர்கள் டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் இலக்குவன் தமிழ், மலேசியா திராவிடர் கழக பொதுச் செயலாளர் கே.ஆர்.ஆர்.அன்பழகன், இராம. அன்பழகன், முனைவர் அதிரடி அன்பழகன், இரா.பெரியார் செல்வன், பூவை புலிகேசி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செ.தமிழ்சாக்ரடீஸ், மாணவரணி துணை செயலாளர் மு.சென்னியப்பன்.
மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, பொதுச் செயலாளர்கள் வீ.கும ரேசன், வடச்சேரி இளங்கோவன், பிரின்ஸ் என்னாரெசு பெரியார், சென்னை மண்டலத் தலைவர் தாம்பரம் ரத்தினசாமி, செயலாளர் வெ.ஞானசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் நீலாங்கரை ஆர்.டி.வீரபத் திரன், சைதை எம்பி பாலு, மயிலை சேது ராமன், மாநில இலக்கிய அணி செயலாளர் மஞ்சை வசந்தன், மற்றும் பொதுமக்கள் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...