Tuesday, December 4, 2012

ஈழத்தில் இன்னும் இராணுவ ஆட்சியா?


இலங்கையில் இன்னமும் இராணுவ ஆட்சிதான் நடைபெறுகிறது. மாறுபட்ட கருத்துக்கும் மதிப்பளிப்பது தான் ஜனநாயகத்தின் தத்துவம்; ஆனால் பாசிசமே ஆட்சி செய்கிறது. முள்ளி வாய்க்கால் படுகொலை களுக்குப் பின்பும், இலங்கையின் நவீன ஹிட்லர் ராஜபக்சேகளுக்கு இரத்தப் பசி தீரவில்லை.
அதன் கோரமுகம் பற்பல ரூபங்களில் இன்னமும் வெளிச்சம் போட்டுக் காட்ட வெட்கப்படுவதே இல்லை. தமிழர்கள் பெரிதும் வாழும் யாழ்ப்பாணம் பகுதியே சிங்கள இராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட பகுதியாகவே காட்சியளிக்கின்றது!
அது மட்டுமா? தமிழர்கள் இல்லத்து நிகழ்வுகள், அவர்களது நகர்வுகள் உட்பட எல்லாமே சிங்கள இராணுவத்தின் அனுமதி பெற்ற பிறகே நடந்தாக வேண்டும் என்ற இரும்புச் சட்டம் - அன்றாடம்!
கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று யாழ்ப் பாணத்தில் நடந்த மாவீரர்கள் நாளையொட்டிய நிகழ்வுக்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை மிருகத்தனமாக சிங்கள இராணுவம் தாக்கியுள்ளது.
நமது இளைய தமிழ் ரத்தங்கள், தேவையற்று தங்கள் இன இரத்தத்தை மீண்டும் யாழ் மண்ணில் தெளித்திருக்கிறது.
இது வன்மையான கண்டனத்திற்குரியது! இதற்குப் பெயர்தான் அரசியல் தீர்வா? இந்திய அரசும் உலக நாடுகளும் இத்தகைய அவலங்களைக் கண்டித்து, தடுத்து ஈழத் தமிழர் வாழ்வுரிமையைக் காக்க முன் வர வேண்டும்.
கி.வீர‌மணி  
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.12.2012


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...