Friday, November 2, 2012

சுவீடனிடம் தோல்வி


சுவீடனிடம் தோல்வி: ருமேனிய வீரர் ஹாஜி வேதனை 

எங்கள் பிரார்த்தனைகள் பலிக்கவில்லை


எங்கள் பிரார்த்தனைகள் பலிக்கவில்லை என்று சுவீடனிடம் தோற்ற ருமேனிய வீரர் ஹாஜி வேதனையுடன் கூறினார்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் சுவீடன் - ருமேனியா அணிகள் மோதின. இந்த போட்டியின் முடிவு விறுவிறுப்பாக அமைந்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சம நிலையில் இருந்தது. கூடுதல் நேரம் கொடுக்கப்பட்ட போது அதிலம் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமமாக இருந்தது. எனவே பெனால்டி முறை கொண்டு வரப்பட்டது. இதிலும் இரு அணிகளும் 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலையை கடைப்பிடித்தது.

எனவே வெற்றி தோல்வியை முடிவு செய்ய சடன் டெத் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ருமேனியாவை வீழ்த்தி சுவீடன் ஜெயித்தது.

இந்த போட்டியில் ருமேனியா ஜெயிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும் அதை பயன்படுத்த அவர்கள் தவறி விட்டனர் தோல்வி குறித்து ருமேனிய கேப்டனும், கார்பதியின் சின்மரடோனா என அழைக்கப்படும் ஜியார்ஜி ஹாஜி கூறியதாவது:

சுவீடனுக்கு எதிரான போட்டியில் நாங்கள் ஜெயித்து இருக்கவேண்டும். ஆனால் முடிவு வேறுவிதமாகி விட்டது.

வெற்றிக்காக நாங்கள் செய்த பிரார்த்தனை பலிக்கவில்லை. கடவுள் சுவீடன் அணி பக்கம் இருந்து விட்டார். - இவ்வாறு அவர் கூறினார்.

கால் இறுதிப் போட்டியில் தோற்ற போதிலும் ருமேனிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 லட்சம் கிடைக்கும். இது தவிர 12 வீரர்களுக்கு மெர்சி டஸ் காரும் பரிசாக வழங்கப்படும்.

ருமேனிய வீரர்கள் நேற்று விமானம் மூலம் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்கள்.

(மாலை முரசு, 12.7.1994)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...