Tuesday, November 27, 2012

இந்துத்துவா என்பது உயர் ஜாதியினரின் ஆதிக்கம்


வரலாற்றாளர் இராமச்சந்திர குஹா படப்பிடிப்பு
பிரபல வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திர குஹா அவர்களால் எழுதப்பட்ட புதிய நூலில் இந்துத்துவாவின் ஜாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறார்.
(தன்னுடைய புதிய புத்தகத்தில் திரு. இராமச்சந்திர குஹா பரந்த பகுதிகளைத் தொட்டிருந்தாலும், ஒரு வரலாற்றாளனைவிட, ஒரு  விசாரணையாளனாகவே தன்னை ஆட்படுத்திக் கொள்ளுகிறார் - சரோஜ்கவுர்)
தனது அண்மை வெளி யீடான தேச பக்தர்களும், பிரிவினைவாதிகளும் (Patriots and Partisans) என்ற புத்தகத்தின் முன்னுரை யில், சுற்றுச்சூழல் இயலார், மட்டைப் பந்து இயலார், மற்று வரலாற்றாளர் ஆகி யோர்பற்றி குஹா எழுது கிறார்:
நான் ஒரு மிதமான போக்குடையவன் சமயங் களில் அவற்றை வேகமான முறையில் வெளிப்படுத்து பவன். இது என்னை ஒரு முரண்பட்டவனாகவும், பொருந்தாதவனாகவும் காட்டுகிறது! வாதங்களில் இடதுசாரியாகவும், வலது சாரியாகவும் காட்டப்படு கிறேன். பல்வேறு வகைப் பட்ட இந்தக் கட்டுரைத் தொகுப்பில், இடதுசாரி, வலதுசாரி சித்தாந்தங் களுக்கு நடுநிலையை தனது வேகமானதாகவும், ஆத்திரமூட்டக் கூடியது மான கருத்துக்கள் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுகிறார்.
முக்கியமான ஆபத்துகள்
இந்தப் புத்தகம், அவருடைய பார்வையில் இந்தியக் குடியரசிற்கு விளைய இருக்கும் முக்கிய ஆபத்துகளைப் பற்றி முன்னோட்டத்துடன் தொடங்குகிறது. மற்ற கட்டுரைகள் இந்துத்துவம், இடதுசாரி கம்யூனிஸ் டுகள், பரம்பரை ஆட்சி எண்ணம் பீடித்த காங் கிரஸ் கட்சிபற்றிய விமர் சனக் கண்ணோட்டத்து டன் எழுதப்பட்டவை. பிறகு குஹா, காந்தியின் பன்முக மதங்கள் எவ்வாறு இன் றைய சூழலுக்குப் பொருந் தும் என்பதையும் ஆய் கிறார். ஜவகர்லால் நேரு வின் மரணத்திற்குப் பிறகு, அவரது பேரும், புகழும் சரிந்ததையும் அவர் ஆய்வு செய்கிறார்.
இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் எழுத்தாளர்களைப் பற்றி யும், படிப்பாளிகள் பற்றியும் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் இரு மொழி வல்லுநர் களான அறிவாளிகள் ஏன் தற்பொழுது வலுவிழந்த நிலையில் உள்ளனர் என் பது பற்றியும் விளக்கு கிறார்.
துணிச்சலான விவாதங்கள்
அவர், இதழ் ஆசிரிய ராக, புத்தகக் கடை உரிமை யாளராக, ஒரு பெரிய புத்தக வெளியீட்டகமாக, மற்றும் புகழ்பெற்ற வர லாற்று ஆவணக் காப்பக மாகவும் வெளிப்படுத்திக் கொள்கிறார். அரசியலைப் பற்றியோ, பண்பாட்டைப் பற்றியோ, தனி மனிதர் களைப்பற்றிய சித்திரத் திலோ, சமூக நிகழ்வு களைப் புகுத்திப் பார்ப்ப திலோ குஹா துணிச்ச லாக விவாதத்துக்குள்ளா கும் முறையில் எழுதி யுள்ளார்.
அவர் எல்லாத் துறை களையும்பற்றி எழுதியி ருந்தாலும், மேலெழுந்த வாரியாக அவரது எழுத் துக்களைப் படித்தால், அரசியல் பன்முகத்தில், அவர் யாரைக் குறி வைக் கிறார் என்பது வெளிப் படையாகும். நாம் அவரை ஒரு தெளிவு பெற்ற இந்து மத  நம்பிக்கையாளராக, இந்துத்துவாவின் கோபம் ஊட்டுபவராக, அல்லது நாட்டுப்பற்றுடையவராக அடையாளம் கண்டு கொள் வது நமது கண்ணோட் டத்தைப் பொறுத்தது.
இந்துத்துவா என்பது உயர்ஜாதியினரின் ஆதிக்கம்
இந்தியாவைப்பற்றிய  பாரதிய ஜனதா கட்சியி னரால் முரண்பட்ட முறையில் குறிப்பிடப்படும் இந்து ராஷ்டிரா அதை இன்னும் உறுதியாகச் சொல்லும் ராஷ்டீரிய சுயம் சேவக் சங்கம் ஆகிய வற்றின் கூற்றுக்கள் பற்றி அவர் வன்மையாக எதிர்க் கிறார். அவருடைய கண் ணோட்டத்தின்படி, இந்துத் துவா அமைப்பானது வேறுபாடில்லாத ஆண் ஆதிக்கம் நிறைந்த உயர் சாதியினரைக் கொண்ட பெரும்பாலான நேரங்களில் இங்கே வசிக்காத இந்தியர் (Non-president Indians)  களைக் கொண்டதாகும்.
சங்பரிவார், ஆர். எஸ்.எஸ். இந்துத்துவா விழைவோர், மற்றும் பல்வேறு இந்துத்துவா வேண்டிகள் மீது, அவரது தாக்குதல்கள் வேக வீச் சுடன் கூடியவை. காரணம் பல்வேறு திசைகளிலிருந்து அவர் பெற்ற ஈமெயில்கள், அவரைக் காயப்படுத்திய துடன், இந்துத்துவா எதிர்ப்பாளராக அவரைக் குற்றம் சாட்டியதும்தான்.
தலைசிறந்த ஒரு இந்திய வரலாற்றாளன் இம்மாதிரி சிறு பிள்ளைத் தனமான விளையாட் டுகளில் ஈடுபடலாமா? அவர் சிறந்த முதிர்ந்த பங்களிப்பைச் செய்து இருக்க வேண்டும் என்று சிலர், கருத்து தெரிவித்து உள்ளனர். சிலருக்கு வர லாற்றை ஆவணப்படுத் துவதில் சிறந்த பணி செய்தவருக்கு இந்தக் கட்டுரை தொகுப்பானது ஒரு காமாலைப் பார் வையை எடுத்துக் காட்டு கிறது என்ற கருத்து நிலவு கிறது. அவரது இந்தி யாவைப் பற்றிய எந்தவித கோணமும் அவரது கருத் துக்கு விருப்பமற்றதாகத் தெரிவதால் அவை அவரது கட்டுப்பாடற்ற கருத்துக் களாக இல்லாமல் வெறுப் பின் விளிம்பில் நிற்கின்றன.
1920-லிருந்து சங்பரிவர்கள்பற்றி
குஹாவின் குறியான இந்துத்துவா 1920 சாவர்க் கார் காலத்திலிருந்தே எழுதப்பட்டு வந்தன. சாவர்க்கார், இந்து என்பதற்கு, வருங்கால சுதந்திர இந்தியாவின் இனம், மதம், சாதி மற்றும் வகுப்பு வேறுபாடில்லாத இந்தியக் குடிமகன் என்று விளக்கம், சொல்லியுள் ளார். சமபந்தி விருந்து முறையை முதலில் ஆரம் பித்து வைத்த சாதி இந்துக் களில் அவரும் ஒருவர். அது 1925இல் H.B. ஹெட்கிவார் (H.B. Hedgewar) என்பவ ரால் ஆர்.எஸ்.எஸ். தொடங்க காரணமாயிருந் தது. இந்திய விடுதலை உணர்வு, வடமொழியான சமஸ்கிருதத்தின் பாரம்பரியத்தை அறி யாததால்தான் என்ற நிலை ஆச்சரியத் திற்குள்ளானது இல்லை, அந்தக் குறைக்காக நாட்டின் இந்துக்கள் தங்கள் மேலே கோபம் கலந்த வெறுப்படைந்தனர்! அவரது சொந்த எல்லைக்குட்பட்ட  பார்வைகளின் படியே, குஹா நாட்டுப் பற்றா ளர்களுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே எதிர்ப்புணர்வை ஊதி விடுகிறார்.
விசாரணை போல
மைனாரிட்டிகளைப் பற்றி பேசும்போது, அவர் வன்முறை பற்றிய கேள்விகளை எழுப்புகிறார். தற்பொழுதும், சமீப காலங் களிலும் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளான இந்துக்கள் அல்லாதவர்களால் தாக்கப் பட்ட நிகழ்ச்சிகளை அவர் தவிர்த்து, இந்துக்களால் தாக்கப்பட்ட நிகழ்வுகளை மட்டும் பொறுக்கி எடுத்துக் குறிப்பிட்டுச் சொல்கிறார். குஹா, தன் கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, ஒரு வரலாற்று ஆசிரியனைப் போல் அல்லாமல் ஒரு விசாரணையாளரின் பங்கைப் பற்றியி ருப்பது நன்கு தெரிய வருகிறது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...