Thursday, November 1, 2012

ஆச்சரியம் - ஆனால் உண்மை தினமலரிலும் - இப்படி!


ஜாதிகள் உள்ளதடி பாப்பா!

மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 2012லும், பிராமணாள், சூத்திராள் என்ற பேதம் தேவை தானா?' கேட்டிருப்பது, திராவிட கழக தலைவர் கி.வீரமணி. ஸ்ரீரங்கத்திலுள்ள, கிருஷ்ணய்யர் உணவு விடுதி'யின் பெயர் பலகையில் சேர்க்கப்பட்டிருக்கும், பிராமணாள்' என்ற முன்னொட்டு மூலம், வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு, அந்த உணவு விடுதி உரிமையாளர், ஸ்ரீகிருஷ்ணன், அவல் சப்ளை செய்து உள்ளார்.

பார்ப்பானை, அய்யர் என்ற காலமும் போச்சே' என்று, பாரதி, சென்ற நூற்றாண்டில், சொல்லியிருப்பினும், இன்றும், அய்யர்' என்ற சொல், பிராமணர்களைத்தானே குறிக்கிறது. பின், எதற்காக, அய்யர் என்பதோடு, பிராமணாள் என்ற சொல்லையும், ஏன் பயன்படுத்த வேண்டும்?

அதற்கான அவசியம் தான் என்ன? அய்யர் என்ற சொல், நாயர், தேவர், செட்டியார், முதலியார் என்பது போல, ஒரு ஜாதியின் குறியீடு.பிராமணாள் என்பது, வர்ணத்தின் குறியீடு. ஏற்கனவே, தமிழகம், கறுப்பு, மஞ்சள், பச்சை என, பல வர்ணங்களிலும், மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு என, பல பிரச்னைகளிலும், சிக்கி, சீர்குலைந்து நிற்கையில், இந்தப் புதுப் பிரச்னை தேவை தானா?சட்டப்படி, ஒரு பெயரை, தன் அமைப்புக்கு வைக்கும் உரிமை, தனிமனிதனுக்கு உண்டென்றாலும், சமூக நலன் கருதி, எதிர் வரும் சங்கடங்களைக் கருதி, இதுபோன்றவற்றை தவிர்க்கலாமே.ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது.

எத்தனை ஈ.வெ.ரா.,க்கள் வந்தாலும், மூடநம்பிக்கை ஒழியப் போவதுமில்லை; எத்தனை பாரதி வந்தாலும், ஜாதிகள் தொலையப் போவதுமில்லை. முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று, அன்று, சங்கங்கள், மொழி வளர்ச்சிக்கு வித்திட்டன. இன்றோ, ஜாதிச் சண்டையை, ஊதி ஊதி பெரிதாக்குகின்றன சங்கங்கள். ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

இது உங்கள் இடம் பகுதியில் (தினமலர் 1.11.2012 - பக்கம் 8)

1 comment:

Iniyarasan said...

பரவேல்லையே! இனமலருக்கும் இப்படி எல்லாம் எழுதத் தெரியுமா?
வாழ்த்துக்கள்! நன்றி!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...