Sunday, October 28, 2012

குத்து மதிப்பு


குத்து மதிப்பாகச் சொல்லுவது எனும் சொலவடை உண்டு. ஏடுகளும், இதழ்களும் இந்தக் கணக்கில்தான் பெரும்பாலும் வருகின் றன.
குமுதம் (10.10.2012) இதழில் ஒரு கேள்வி பதில்:
கேள்வி: நம் மாண வர்கள் ஹிந்தி படிக்க முடியாதபடி பார்த்துக் கொண்டன திராவிடக் கட்சிகள். அது நமக்குச் செய்த துரோகம்தானே?
பதில்: அவர்கள் வீட் டுப் பிள்ளைகள் மட்டும் ஹிந்தி படிக்கும்படி பார்த் துக் கொண்டார்களே, அதுதான் துரோகம்.
என்று குமுதம் அரசு பதில் சொல்லியுள்ளார்.
இதற்குப் பெயர்தான் குத்து மதிப்பு - பொத்தாம் பொது - என்பது. அடிப் படையைப் புரிந்து கொள் ளாமல் அரை வேக்காட் டுத்தனம் என்பதும் இது தான்.
இந்தியை யாருமே படிக்கக்கூடாது என்று திராவிட  இயக்கம் சொன் னதா? எங்கே சொன் னது? எப்பொழுது சொன் னது? நாணயமான முறை யில் விடையளிக்க முன் வருவாரா திருவாளர் அரசு?
விரும்பிப் படிப்பது என்பது வேறு. கட்டாய மாகப் படித்தே தீர வேண்டும் என்பது வேறு. இரண்டுக்கும் இடையே உள்ள பொருள் புரியாத வர்கள் எல்லாம் பதில் சொல்ல முயற்சிப்பது தான் பரிதாபம்.
இந்தியை யாருமே படிக்கக்கூடாது என்பது தான் திராவிட இயக்கத் தின் கருத்து என்றால், சென்னை தியாகராய நகரில் இந்திப் பிரச்சார சபை இருக்க முடியுமா? (கோபாக்கினி அந்தப் பக்கம் திரும்பி இருக் காதா?)
இந்தி மட்டுமல்ல, இன்னும் எத்தனை மொழி களை வேண்டுமானாலும் தன் விருப்பத்தில் படித் துப் பன்மொழிப் புலவர் களாக தமிழர்கள் ஆனால் மகிழ்ச்சிதான்.
1937 இல் இந்தி யினைத் திணித்த ஆச் சாரியார் (ராஜாஜி) சமஸ் கிருதத்தைப் படிப்படி யாகப் புகுத்தவே இந்தியை இப்பொது கொண்டு வரு கிறேன் என்று சென்னை லயோலா கல்லூரியில் பேசிய சூட்சுமமெல்லாம் அரசுகளுக்குத் தெரி யுமா?
திராவிட இயக்கத் தைக் கொச்சைப்படுத்து வது என்பது ஒரு நாகரி கமாகப் போய்விட்டது. எந்தெந்த திராவிட இயக்கத் தலைவர்களின் பிள்ளைகள் இந்தி படிக் கின்றனர் என்று கூறத் தம் கைவசம் பட்டியல் இல்லை என்றால் எல் லோர்மீதும் சந்தேகப் புழுதியை வாரி வீசுவது நாலாந்தரமான மனப் போக்காகும்.
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...