Saturday, October 13, 2012

பலே சரியான தீர்ப்பு!

டில்லி கோகுல்புரி - சூரஜ் - மாயா இணையருக்கு ஆஷா என்ற மகள் (வயது 19). யோகேஷுக்கும் அவ்வூரைச் சேர்ந்த ஆஷாவுக்கும் காதல் ஏற்பட்டது. தாழ்த்தப்பட்டவர் மணமகன் என்பதால் மணமகளின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால் அந்தக் காதலர்களோ வீட்டை விட்டு வெளியேறி திரு மணம் செய்து கொண்டுவிட்டனர். விடுமா ஜாதிவெறி? ஆஷாவின் பெற்றோர்களும் உறவினர்களும் (மொத்தம் 5 பேர்) அந்தக் காதல் இணைகளைக் கண்டுபிடித்து மின் சாரத்தைப் பாய்ச்சி சாகடித்துள்ளனர். இது நடந்தது 2010 ஜூன் மாதம்.

வழக்கு விசாரணையில் டில்லி கூடுதல் அமர்வு நீதிபதி ரமேஷ் குமார் - குற்றவாளிகள் அய்வருக் கும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

பலே, பலே! தூக்கு தண்டனை என்பது இருக்கும் வரைக்கும் இது போன்ற ஜாதி வெறி பிடித்தவர்கள் மீது இத்தகைய தண்டனை பாயவேண்டியதுதான்.

ஆஷாவின் பெற்றோர்களையோ, ஒத்துழைத்த உறவினர்களையோ அவர்கள் நம்பும் ஜாதி, குலம், கோத்திரம் காப்பாற்ற ஓடி வந் திருக்கின்றனவா?

மதமும், ஜாதியும் மனிதத் தன்மைக்கும் நம் உறவுகளுக்கும் எவ்வளவு பெரிய கேடாக இருக் கின்றன என்பதை இது போன்ற தண்டனைகளுக்குப் பிறகாவது உணர்வார்களா?

காதல் என்பது ஜாதி பார்த்து வரக் கூடியதா? காதல் என்பது உயிர் இயற்கை. அது கட்டில் அகப்படும் தன்மையதோ என்றாரே புரட்சிக் கவிஞர் - அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

மனிதர்களுக்குத் தூக்குத் தண் டனை கொடுப்பதன் மூலம் ஜாதியை சமூகத்திலிருந்தும் விலக்கத் தூக்குத் தண்டனை தேவையே.

இருட்டறையில் உள்ளதடா உலகம்

ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே

என்றாரே புரட்சிக் கவிஞர் - அதனை நினைவு கூர்வோம்.

கொலைவாளினை எடடா,

சில கொடியோர் செயல் அறவே என்ற வரிகள் டில்லி நீதிபதியின் தீர்ப்பை நினைவூட்டுகின்றன.

1 comment:

Anonymous said...

அடுத்த தடவை பாமக கட்சி தலைவர் ராமதாசுக்கு வோட் போட்டு அவரை முதல்வராக்கினால் இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும். மரங்கள் செழித்து வரும் (நாங்க ஆட்சிக்கு வந்தா யாரு மரத்தை வெட்டுவது)
எந்த கூட்டணியில் இருப்பார் என்று இப்போது என்னால் கூறமுடியாது - நிச்சயமாக ஏதாவது கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பார்.

தெரிவிப்பது - ராமதாஸ் அவர்களின் கால் செருப்பான தொண்டன் அருள் (ARUL GREEN )

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...