Monday, October 22, 2012

இதுதான் அண்ணா தி.மு.க.வா?


 அய்யா, அண்ணா, அம்பேத்கர் படங்களைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்


சேலம், அக். 21- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் அம் பேத்கர் படங்கள் அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், அவர்களின் ஆணைப்படி ஆதிதிரா விடர் விடுதியிலிருந்து தூக்கி எறியப் பட்டன.
தனியாக ஜெ. படம் மட்டும்
அண்ணா பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத் துள்ள ஒரு கட்சிதான் இந்த வேலை யைச் செய்திருக்கின்றது.
படங்களை அகற்ற வரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்
அரசு திட்டங்கள் சரியாக நடக் கிறதா?' என  மதிப்பிட  சேலத்திற்கு அக். 18ஆம் தேதி  சட்டமன்ற மதிப் பீட்டு குழுவினர் வந்தனர். இக்குழுவை தி.மு.க, கம்யூனிஸ்ட்டுகள், தே.மு.தி.க உட்பட்ட கட்சிகள் புறக்கணிக்க பவானி எம்.எல்.ஏ பி.ஜி. நாராயணன் தலைமையில் தேனி தங்க தமிழ் செல்வன், காமராஜ், தன்சிங், நீலகண் டன் ஆகிய அ.தி.மு.க வினர் மட்டும் பங்கேற்ற ஆளும்கட்சி மதிப்பீட்டு குழுவாக ஒவ்வொரு இடங்களாக பார்வையிட்டனர்.
சேலம் சங்கர் நகரில் உள்ள ஆதி திராவிடர் மகளிர் விடுதியில் ஆய்வு செய்த போது ஒவ்வொரு அறையாக உள்ளே நுழைய உள் அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த படங் களை கண்டதும் எரிச்சலடைந்தனர்....
அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் படங்களை அகற்றும் காட்சி...
யார் இவங்கல்லாம் எங்கம்மா பக்கத்துல இவங்கல்லாம் இருக்க கூடாது' என்றார் தங்க தமிழ்செல்வன். அவர் இருக்க கூடாது என சொன்ன படங்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா. 'எங்க புரட்சி தலைவி அம்மா தமிழ் இனத்திற்காக பாடுபட்டு கொண்டு இருக்குற பெரிய தலைவி அவங்க படத்தை சின்னதா வச்சுட்டு இவங்க படத்தை எல்லாம் பெருசா வச்சு அவமானபடுத்துறீங்களா?!
அதுவும் திமுக கட்சிக்காரங்க கொடுத்த படத்தை வச்சா நாங்க சும்மா விடுவோமா' என ஏகத்துக்கும் கொந் தளித்த குழுவினர் 'அதெல்லாம் தூக்கி கெடாசுங்க' என கூட வந்தவர்களை அதட்ட மளமளவென மேலே ஏறி அண்ணாவை பிடித்து இழுத்தனர். சுவரில் இருந்து வர மறுத்த அண்ணல் அம்பேத்கரை வெடுக்கென பிடுங்க ஆணியோடு வெளியே வந்தது அண்ணலின் படம்.
ஜெ. அருகே இருந்த தந்தை பெரி யாரின் படத்தையும் இதே போல பிடுங்கி தூக்கி எறிந்தனர். எங்க அம் மாவையே சிறுமைபடுதுறியா எப்படி பார்க்கணுமோ அப்படி பார்த்துக்குறோம்' என விடுதி பொறுப்பாளரை மிரட் டியபடியே கிளம்பியது அ.தி.மு.க குழு.
இத்தனையையும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது  மாவட்ட ஆட்சியர் மகரபூசணத்தால். 'முன் அறையிலேயே முதல்வர் அம்மா படம் வச்சுருக்கோம் அது இல்லாம உள் ளேயும் இங்க வச்சுருக்கோம் இது  ஆதி திராவிடர் விடுதி அதனால் விடுதி மாணவியருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஒடுக்கப் பட்ட மக்கள்  விடுதலைக்காக அய ராது உழைத்த தலைவர்கள் படத்தை வைத்தோம் அது தி.மு.கவை சேர்ந்த வர்கள் போன ஆட்சியிலேயே கொடுத்த படம்...
தி.மு.க வினர் பெயர் அந்த படத் தின் கீழே அச்சிடப்பட்டு இருந்தது. அது பிடிக்கவில்லை என்றால் அங்கு ஏதாவது பேப்பர் ஒட்டி மறைத்து இருக்கலாம் அதைவிட்டு குண்டர்கள் போல செயல்பட்டு தேசிய தலைவர் களையே அப்புறப்படுத்தி அவமானப் படுத்தலாமா?'என்றனர் அங்கிருந்த சில மாணவிகள்.
அண்ணல், தந்தை, அறிஞர் கொள் கைகளோடு எங்கள் அம்மாவிற்கு எந்த தொடர்பும் இல்லை என சொல் வதாக தான் அமைந்தது இந்தச் செயல்...

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...