Wednesday, September 5, 2012

வ.உ.சி.


இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றில் இவருக்கு இணையான தியாகி யார்? என்று கேள்வி கேட்கலாம்! அந்த அள வுக்கு உயர்ந்த பெருமகன் வ.உ.சிதம்பரனார். அவரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் இப்பொன்னாள் (1872).
என்ன செய்வது! அவர் பாழாய்ப் போன இந்தத் தமிழ்க் குலத்திலே பிறந்து விட்டாரே.
இந்திய வரலாற்றில் நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற முதல் மனிதர் இவர்!
சிறையிலே சொகுசு வாழ்வா? செக்கிழுத்த செம்மல் என்ற சொல் லாடல் அவர் பட்ட துன்பத் திற்கான பட்டா!
மாவட்ட துணை ஆட்சி யர் ஆஷ் துரைக்கு மிகவும் நெருக்கமான ரங்கசாமி அய்யங்கார் என்பவர், தமக்கு முகச்சவரம் செய்து கொண்டிருந்த தோழரிடம் வ.உ.சி.யைப்பற்றி கேவல மாகப் பேசியபோது, அந்தத் தோழருக்கு வெடித்த சினத் தால், முழுச் சவரம் செய் யாமல், அரைகுறையாக விட்டுவிட்டுச் சென்றுவிட் டாராம். நாட்டுப் பற்று மிக்க அந்தத் தன்மான தோழர் - இது ஒரு கட்டம்!
சிறையிலிருந்து வ.உ.சி. விடுதலை பெற்றபோது அவரை வரவேற்க வந்த வர்கள் வெறும் அய்ந்தே பேர்கள்தானாம்!
வாட்டும் வறுமையில் தன் வாழ்வைக் கடத்தும் நிலைதான் அவருக்கு.
வெள்ளையனே வெளி யேறு இயக்கம் நடந்த போது கட்சியை விட்டு வெளியேறிய ராஜாஜிதான் இந்தியாவின் முதல் கவர் னர் ஜெனரல். தாம் செய்த தியாகத்துக்காக(?) கிண்டி கவர்னர் மாளிகை தோட் டத்தையே தியாகி மானிய மாக கேட்டவர்தான் ஸ்ரீமான் ராஜாஜி.
ஆனால், வ.உ.சி.யின் நிலை என்ன? தன் மகனுக் காக ஒரு அரசு வேலைக்குச் சிபாரிசு செய்யும்படி வ.உ.சி. தந்தை பெரியார் அவர் களுக்குக் கடிதம் எழுதி னார் என்றால், அதன் தன் மையை என்னவென்று சொல்ல!
அவருடைய எஞ்சிய காலம் தந்தை பெரியாரு டனும், சுயமரியாதை இயக் கத்துடனும் கலந்தது என் பது ஒரு சிறப்பான தகவ லாகும்.
வ.உ.சி.யின் இன் னொரு பக்கம் உண்டு. அது மிகப்பெரிய தமிழ் ஆய்வாளர் - சிந்தனை யாளர் - எண்ணற்ற ஆய்வு நூல்களை எழுதிக்குவித்த பெருமகன் - இனமானம் - மொழிமானம் மிக்க அந்த ஏந்தலை இந்நாளில் நினைவு கூர்வோம்.
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...