Wednesday, September 5, 2012

நாம் முன்னேற, இந்தக் கூடுதல் திறனும் தேவை!


நம் ஒவ்வொருவருக்கும் பேச்சுத் திறன், எழுத்துத் திறன், செயல்திறன், சிந்தனைத் திறன், கேட்புத் திறன் - முதலிய பல்வகை ஆற்றல்களுடன் இணையாகச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய கூடுதல் திறன் ஒன்றும் உண்டு.
அதுதான் மறுப்புத் திறன்  (Refusal Skill)  என்பதாகும்.
இத்திறன் வேறு ஒன்றுமில்லை. முடியாத பொறுப்புக்களை, பணிச் சுமைகளை ஏற்றுக் கொள்ளத் தயங்குவோம் நம்மில் பலர். என்றாலும் நம்முடைய மேலோர் கள் - அப்படிச் சொன்னால் நம்மைப் பற்றி வேறு விதமாக நினைத்துவிடுவார்களோ என்று நாம் எண்ணி, நம் சக்திக்கு அப்பாற்பட்டதை எல்லாம் கூட நம் நெஞ்சம் முணுமுணுக்கும் நிலை யில் கூட - செய்கிறோம் என்று ஏற்றுக் கொள்வதும், பிறகு கெட்ட பெயர் வாங்குவதும் என்ற அவல நிலை அறவே தவிர்க்கப்படுதல் நல்லது - ஏன் அவசியமுங் கூட!
எடுத்துக்காட்டாக, 150 கிலோ உள்ள எடைச் சுமையை என்னை விட்டுத் தூக்கச் சொன்னால் முடியுமா? எனக்கு என்னதான் ஆசை, முயற்சி இருந்தாலும் கூட.
உடனே நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்ற வழமையான வாக்கியங்களை இங்கே பயன்படுத்துவது பொருத்த முடையதல்லவே!
சிலருக்கு செய்யும் ஆற்றல் இருந் தாலும்கூட, நேரம் இருக்கவேண் டுமே! ஒரே நேரத்தில சில நண்பர்கள் பல பேரிடம் தலையாட்டி, முடியாது No - மாட்டிக் கொண்டு  சூடி -  என்று சொல்லத் தெரியாமல் - தாட்சண்யத் திற்காக தலையாட்டும் தம்பிரான் களாகி விடுகின்றனர்!  விளைவு...?
அவர் புதிதாக சம்பாதிக்கும் கெட்ட பெயர்தான்!
வாழ்க்கையில் காலத்தை நாம் அளந்து திட்டமிட்டு, எண்ணி எண்ணி செலவிடப் பழகவேண்டும்.
எதையும் கால அட்டவணை போட்டு செய்யப் பழகிக் கொண்டால் நம் உடலும் மனமும்கூட ஒத்துழைப்பு நல்கும் என்பது உறுதி!
மிருதுவான முறையில் பேசி, இயலாமைக்கு வருந்தி நாம் நமது மறுப்புத் திறனை மெல்லிய வெளிச்சம் போல் காட்ட வேண்டும்.
நாம் பார்க்கும் நிலையில் எத் தனையோ குடும்பங்களில் கணவன் சொன்னவுடன் - அல்லது சொல்வ தற்கு வாயெடுக்கும் முன்பே, நோ, முடியாது,  அதெப்படிங்க நடக்கும்? போன்ற சொற்கள் வந்து விழுந்து, ஒரு பெரும் குழப்பம், கோபம், ஆத்திரத்தை இருவர் மனங்களிலும் விதைத்துவிடும் அபாயம் உண்டு. இதைத் தவிர்க்க வேண்டும்.
அதே நேரத்தில், அதே மறுப்புத் திறனை, உரத்த குரலைத் தவிர்த்து, அதில் உள்ள சிக்கல்களைப் புரிய வைத்து, தனக்குள்ள இக்கட்டான சந்தர்ப்பங்களை விளக்கினால், அதனால் யாரும் கோபப்படாமல், பக்கு வத்துடன் - பான்மையுடன் எடுத்துக் கூறி, தமது இயலாத  சூழ்நிலையை விளக்கிவிட்டால் விளங்கிக் கொள் ளாதவர் பெரும்பாலோர் இல்லையே!
கனியிருக்கக் காய் கவராமல் இதமான குரலில், இனிய வகை யில், நம் இயலாமைக்கு நாமே வருந்துகிறோம் என்று நமக்குக் கட்டளை பிறப்பிக்கும் மேலவர், உட்பட எல்லோரும் நம்மை - நமது மறுப்புத் திறனை ஏற்று பாராட்டவே செய்வர். எந்தப் பொறுப்பை ஏற்றா லும், இந்தத் தேதிக்குள் முடித்துத் தருவேன் என்று சொல்லுமுன், சிந்தித்துச் சொல்ல வேண்டும்.
சில நண்பர்களிடம் சொல்வ துண்டு. அய்யா, நீங்கள் இரண்டு நாள் தவக்கமாகக் கூடச் சொல் லுங்கள். ஆனால் சொன்ன நாளில் தாருங்கள் என்று.
அதில் உறுதியாக இருந்தால் நம் வளர்ச்சிக்கு அது வழி வகுக்கும்; நம்மை முன்னேற்றச் செய்யும். அந்த மறுப்புத் திறன்  -நோ, இயலாது “Sorry” என்பது சோம் பலினாலோ, பயத்தினாலோ, அகங்காரத்தினாலோ, சொல்லு வதாக அமையாமல் உங்களைக் காத்து உயர்த்த இந்த மறுப்புத் திறனை (Refusal Skill) வளர்த்து முன்னேறுங்கள்.
- கி.வீரமணி 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...