Monday, September 3, 2012

சென்னை அய்.அய்.டி.யில் என்ன நடக்கிறது?


மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாக் கனிகளாக இருந்துவருவது அனைவருக்கும் தெரிந்த உண்மையே!
இடஒதுக்கீடு என்பது மருந்துக்கும் அங்கு கிடையாது. மாணவர்களில் ஆரம்பித்து பேராசிரியர்கள், பணியாளர்கள் என்று பேச ஆரம்பித்தால் அத்தனையும் அக்கிரகாரத்தின் வயிற்றில் அறுத்துக் கட்டப்பட்டவையாக இருக்கும்.
தப்பித் தவறி அதிக மதிப்பெண்கள் அடிப் படையில் இடம் பிடித்து விடும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகள் முழுமை யாகக் கல்வியை முடித்துப் பட்டம் பெற்று வெளியில் வருவது என்பதும் முயற்கொம்பே!
பேராசிரியர்கள் எல்லாம் பார்ப்பன மயமாக இருக்கும் ஒரு நிறுவனத்தில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவ மாணவிகள் மனமகிழ்ச்சியோடு படித்து மீள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அப்படியொரு இறுக்கமான சூழ்நிலை!
சென்னை அய்.அய்.டி.யில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நான்கு மாணவ - மாணவி கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கான காரணங்கள் என்ன என்பது கண்டிப்பாக ஆராயப்பட வேண்டும்; இல்லை எனில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது தொடர் கதையாகத்தான் ஆகும். படித்து முடித்து திட்ட அறிக்கை (Project) தயாரித்துப் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் அளிப்பதிலும் பார்ப் பனப் பேராசிரியர்கள் பல்வேறு வகைகளிலும் தொல்லைகளைக் கொடுப்பது என்பதை ஒரு யுக்தியாகக் கைக் கொள்கிறார்கள்.
நன்கு படித்தவனாக வளாக தேர்வில் தேர்வு செய்யப்பட்ட பார்ப்பனர் அல்லாத ஒரு மாணவன் பணியில் சேரத் துடித்துக் கொண் டிருந்த நேரத்தில், பார்ப்பனப் பேராசிரியர் உனது திட்ட அறிக்கை சரியில்லை; அதனை முடித்துக் கொடுத்து விட்டு செல் என்று கூறியதால் அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டான் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன் வந்தது.
அய்.அய்.டி. என்கிற சாம்ராஜ்ஜியத்துக்குள் பார்ப்பனர்கள் வைத்ததுதான் சட்டம். செய்தி யாளர்கள் உள்ளே நுழைந்து அவ்வளவு எளிதாக செய்திகளைத் திரட்டிவிட முடியாது. அப்படி சென்றால் அடி உதைதான்.  அந்த வகையில் பெண் செய்தியாளர் கூடத் தாக்கப் பட்டதுண்டு.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெருகு மானசா (வயது 23) அய்.அய்.டி. வளாகத்துக் குள் தற்கொலை செய்து கொண்டார். இதைக் கேள்விப்பட்டு செய்தி சேகரிக்கவும், படம் எடுக்கவும் அங்கு சென்ற பத்திரிகையாளர் ஒருவர், அய்.அய்.டி. பேராசிரியர் ஒருவராலும், காவலர்களாலும் தாக்கப்பட்டுள்ளார்.
அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக பத்திரிகையாளர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அடிபட்ட பத்திரிகையாளர்மீதே வழக்குத் தொடர திட்டமிட்ட வகையில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. அய்.அய்.டி. மாணவிகள் அய்ந்து பேர்  பெயரால் அந்தப் புகார் கொடுக்கப்பட் டுள்ளது. அக்கிரகாரத்தின் ஆதிக்க புரியாக இருக்கக் கூடிய சென்னை அய்.அய்.டி. நிரு வாகம் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியது தான்!
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இருந்து கொண்டு வேதகால தர்பாரைச் செய்து கொண்டு இருக்கிறது. முறையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு (மாண வர்கள் சேர்க்கை, பேராசிரியர்கள் சேர்க்கை உட்பட) சமூகநீதிக் கொடி அந்த வளாகத்தில் பறந்தாலொழிய இதற்குத் தீர்வு காண முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால் தடையைப் பெற்று விடுவது போன்ற சித்து விளையாட்டுகளிலும் கைதேர்ந்தவர் கள் இவர்கள்.
வீதிக்குப் பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...