Sunday, September 2, 2012

பா.ஜ.க.


பாரதீய ஜனதா கட்சி என்ற ஒன்றை அனுமதிப் பதே கூட கூடாத ஒன்றுதான். இக்கட்சியும் சரி, இதன் தாய் வீடான சங்பரிவார்க் குப்பைகளும் சரி மூடநம்பிக்கைகளை அடை காத்துக் குஞ்சு பொரிக்கும் வேலையில் தான்  ஈடுபட்டுக் கொண் டுள்ளன.
விஞ்ஞான மனப்பான் மையை மக்கள் மத்தியில் தூண்ட வேண்டும் இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என் கிறது இந்திய அரச மைப்புச் சாசனம் 51A(h).
இந்தச் சாசனத்திற்கு உண்மையாக இருப்ப தாகத் தான் பா,ஜ.க. சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் சத்தியம் செய்து பதவியை ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் நடத்தை யில்? 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமன் எனும் எங் கள் கடவுள் அணில் களையும், குரங்குகளை யும் கொண்டு கடலில் பாலம் கட்டினான் என்று அரட்டை அடிக்கிறார் கள்.
இதன் மூலம் மக்கள் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரத் திட் டத்தை முடக்கிவிட்டனர். ஒன்றில் மக்கள் உறுதி யாக இருக்க வேண்டும். பா.ஜ.க. என்ற கட்சி நாட்டு மக்களின் வளர்ச் சிக்கு விரோதமான ஒன்று என்பதில் திட காத்திரமான தெளி வுடன் இருக்க வேண் டும்.
இன்னொரு சேதியு முண்டு. ராஜஸ்தான் மாநிலம் முன்பு பா.ஜ.க. வசம் இருந்தது வசுந்தரா எனும் ராஜ குலத்துப் பெண்மணி முதல் அமைச்சராக இருந்தார்.
இப்பொழுதோ அம் மாநிலம் காங்கிரஸ் வசம், முதல் அமைச்சர் அசோக் கெலாட்.
சென்றாண்டு கடும் கோடை அம்மாநிலத்தை வறுத்து எடுத்தது; மழை இல்லை. முதல் அமைச்சர் கெலாட் அமெரிக்கப் பயணமான மறுநாள் அம்மாநிலத்தில் மழை வெளுத்துக் கட்டியது.
ஆகா, அருமையான சந்தர்ப்பம்! காங்கிரஸ் காரரான கெலாட் இருந்தால் மழை பொழி யாது; வெளிநாடு சென்று விட்டதால் மழை கொட் டுகிறது என்று பிரச்சாரம் செய்தனர். பதாகைகளை அமைத்தனர்.
இந்தஆண்டு கெலாட் உள்ளூரில் இருக்கும்போதே மழை பெய்து விட்டதால் பா.ஜ.க.வினரின் முகம் சுருங்கி விட்டதாம் - இதையும் அவாளின் தினமலர்தான் வெளி யிடுகிறது. மழை பொழி வதற்கும் ஒருவர் ஊரில்  இல்லாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? மழை பெய்வது எதனால் என் பதை எல்.கே.ஜி. மாண வர்களிடம் தெரிந்து கொள்ளட்டும் பா.ஜ.க.
- மயிலாடன்


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...