Tuesday, September 11, 2012

பிள்ளையார் அரசியல்!


உலகத்தில் எத்தனை எத்தனையோ மதங்கள் உண்டு; அவற்றுக்குக் கடவுள்களும் உண்டு. ஆனால் இந்து மதக் கடவுள்கள் போல ஆபாசமான பிறப்பும், கேவலமான நடத்தையும் உடைய கடவுள்களைக் கேள்விப்பட்டு இருக்கவே முடியாது.
அதிலும் குறிப்பாக பிள்ளையார் எனப்படும் கடவுள் சிரிப்பாய் சிரிப்பது போல எந்தக் கடவுளையும் கணக்கிட முடியாது.
பார்வதியின் அழுக்கிலிருந்து ஜனித்தவர் இந்தப் பிள்ளையார் என்ற ஒரு கதை போதாதா? நாகரிகம் உள்ள எந்த ஒரு மனிதனும் இந்த அருவருப்பை எப்படி சீரணித்துக் கொள்வான்?
அதனால்தானோ என்னவோ இந்தப் பிள்ளை யாரை பக்தியுள்ள மக்கள்கூட படு கேவலமாக நடத்து கிறார்கள். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற பழமொழியும் நிலைத்து விட்டது.
தென் மாவட்டங்களில் கரிசல்நிலப் பகுதி களில் தொடர்ச்சியாக மழை பெய்யாவிடில், வெட்ட வெளியில் இருக்கும் விநாயகர் உருவத்தின் மீது மிளகாய் வற்றலை அரைத்துப் பூசி விடுவது வழக்கம். சில இடங்களில் சாணியைக் கொழகொழவென்று கரைத்து சிலையின் மீது ஊற்றிவிடுவர். மிளகாய் வற்றல் பூச்சையோ, சாணிக்கரைசலையோ போக்குவ தற்காகப் பிள்ளையார் மழையை வரவழைப் பார் என்ற நம்பிக்கையில் இத்தகைய செயல் களை கிராம மக்கள் மேற்கொள்கின்றனர்.
மழை பெய்யும் வரை இப்பூச்சுகள் சிலையின்மீது அப்படியே படிந்திருக்கும். மழை வேண்டி கொல்லிமலை ஆதிவாசிகள் குப்பையில் குழி எடுத்து பிள்ளையாரை சாணத் தில் புதைத்து வைப்பார்கள். மழை வந்த பிறகே சாணத்தில் புதைத்து வைத்த பிள்ளை யாரை வெளியில் எடுப்பார்கள். சில கிராமங்களில் பிள்ளையார் சிலையை கிணற்றுக்குள் போட்டு விடுவதுண்டு. மழை வந்தவுடன் மீண்டும் அதனை வெளியே எடுத்து உரிய இடத்தில் வைப்பர்.
(நூல் : பிள்ளையார் அரசியல் மத அடிப்படை வாதம் பக்கம் 51 - ஆ. சிவசுப்பிரமணியன்)
மழை வேண்டி பொது அறிவு அற்ற மக்கள் மூடநம்பிக்கையின் அடிப்படையில் ஒரு கடவுளை இந்தப் பாடுபடுத்துகிறார்கள் என்பதைக் கவனிக் கத் தவறக் கூடாது.
ஒரு கற்பனைப் பொம்மையைச் சீரழிப்பதன் மூலம் மழை பெய்யும் என்று நம்புவது கடைந்தெடுத்த முட்டாள்தனமே!
இந்தப் பிள்ளையார் இப்போது அரசியலுக்கும் பயன்படுத்தப்படும் கருவியாக ஆகிவிட்டார். வைணவர்களுக்கு ராமன் என்றால் ஸ்மார்த்தர் களுக்கு விநாயகர் என்று உத்தி பிரித்துவிட்டார்கள்.
இந்தப் பிள்ளையார் அரசியல் கருவியாகத் திணிக்கப்பட்டது 1893 ஆம் ஆண்டு - மகாராட்டிர மாநிலத்தில் முசுலிம்களுக்கு எதிராக இதனைப் பயன்படுத்தியவர் பாலகங்காதர திலகர் என்ற பார்ப்பனரே!
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்று கூறி பிள்ளையார் பொம்மைகளை ஊர்வலத்தில் எடுத்துச் செல்வதும், அதற்காகத் தயாரிக்கப்பட்ட பஜனைப் பாடல்களில் இசுலாமியர்களைச் சீண்டுவதுமான ஒரு வன்முறை ஏற்பாட்டைக் கொண்டு வந்தவர் இந்தத் திலகர்.
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் இது இறக்குமதி செய்யப்பட்டது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் திருவல்லிக்கேணி பகுதிகளில் கலவரத்தை உண்டாக்கும் வேலையில் பலமுறை இந்துத்துவா வெறியர்கள் ஈடுபட்டதுண்டு.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றால், அதனை மக்கள் மத்தியில் சாமர்த்தியமாகப் பரப்பி இந்துத்துவா எனும் பார்ப்பனீயப் பண்பாட்டுப் படையெடுப்பைத் திணிப்பது அயோக்கியத்தனமே!
இந்தக் காரணங்களால்தான் தந்தை பெரியார் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்தை நடத்தினார், இராமன் படத்தையும் எரித்தார் என்ற பின்னணியை பக்தர்களாக இருக்கும் தமிழர்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்து மதக் கடவுள்கள் பூணூல் தரித்து இருப்பதையும் கவனமாகத் தெரிந்து கொண்டால் இங்கு மதம், கடவுள் பக்தி, கோயில் விழா என்பதெல்லாம் பார்ப்பன ஆதிபத்தியத்தை நிலை நாட்டும் சூழ்ச்சியே என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...