Friday, July 27, 2012

நாவலர் பாரதியார்


இவர் கடவுள் மறுப் பாளர் அல்லர் - மத மறுப் பாளரும் அல்லர். உண் மையைச் சொல்லப்போ னால் சைவ மெய்யன்பர்.
கம்ப இராமாயணத்தை யும், பெரிய புராணத்தையும் தீயிடக்கூடாது என்று அறிஞர் அண்ணாவுடன் சேலத்தில் விவாதப் போர் புரிந்தவர்.
அந்த சேலம் சொற் போரில் அவர் என்னதான் பேசினார்?
என்னுடைய 14 வயதில் எனக்குக் கல் யாணம் நடந்தபோது நேரிட்டதைச் சொல் கிறேன். எட்டையபுர சமஸ்தானத்தில் ஒரு கிராமத்திலே நாகரிக உணர்ச்சி பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம். நான் வைதீக உணர்ச்சி உள்ளவன், நல்ல சைவன். இப்போது இருக்கும் சைவம் போன் றதல்ல. என்னுடைய சிவநெறி வேறு.
இன்று சைவப் பண்டிதர்கள் கூறும் சைவம் நான் கொள்வதல்ல. உண் மையே எனக்குச் சைவம்! எனக்குக் கல்யாணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாகக் கூறி னார்கள். அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் என்றேன். சைவ ஆகமங்களின்படி பார்ப்பனர்களைச் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்திற்கு அப்புறம் நுழையக் கூடாது.
வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப்பட்ட சண்டாளர்களைக் கொண்டு நான் கல் யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல் வேலிக்கும், மதுரைக்கும் போய் பண்டிதர்களைக் கேட்டார்கள். திருநெல் வேலி பண்டிதர்கள் கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையில் இருந்த பண்டிதர்கள் பையன் சொல்லுவது உண்மை தான். ஆகமம் அப்படித் தான் கூறுகிறது என்று சொன்னார்கள்.
-என்று நாவலர் சோம சுந்தர பாரதியார் பேசினார் சேலத்தில். (14-3-1948)
அந்த நாவலர் சோம சுந்தரபாரதியர் அவர்களின் பிறந்தநாள் இந்நாள் (1879).
1938 இந்தி எதிர்ப்புப் போரில் தந்தை பெரியார் சேனையில் தளகர்த்தராகத் திகழ்ந்தவர்.
ஒரு நாயக்கரும், புலவரும்தானே (நாவலர் பாரதியார்) இந்தியை எதிர்க்கிறார்கள் என்று பிரதமர் ராஜாஜி சட்டசபை யில் சொன்னபோது, சர் ஏ.டி.பன்னீர்செல்வம் சொன்னது என்ன தெரியுமா? ஆமாம், இந் தியை எதிர்ப்பவர்கள் இந்த இரண்டு பேர்கள்தான். ஆனால் ஆதரிப்போர் நீங்கள் ஒரே ஒருவர்தானே என்றாரே பார்க்கலாம்!
- மயிலாடன்



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...