Monday, July 30, 2012

தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்காவிட்டால் இலங்கையில் மீண்டும் இன மோதல் வெடிக்கும்!


நார்வே முன்னாள் அமைதித் தூதர் எரிக் சோல்ஹீம்

கொழும்பு, ஜூலை 29- இலங்கைத் தமிழர் களுக்கு சம உரிமை களை வழங்காவிட்டால் அங்கு மீண்டும் இன மோதல் வெடிக்கும் என்று நார்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சோல்ஹீம் எச்சரித்துள்ளார். அவர், நார்வே நாட்டின் "ஆஃப்டன்போஸ்டன்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதா வது: இலங்கையில் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்சினையே காரணமாக இருந்தது. விடுதலைப்புலிகளை ராணுவம் தோற்கடித்த பிறகும் அப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இந்த விவகாரங்கள் தீர்க்கப் படாவிட்டால், இலங் கையில் எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் வெடிக்கும். நான் கடந்த 2000-ஆவது ஆண்டு இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, சிங்கள பயங் கரவாதிகள் என்னைக் கொல்ல முயற்சித்தனர். அந்நாட்டில் நிலவிய அச்சுறுத்தல் மற்றும் அங்குள்ள நிலவரம் குறித்து எங்களுக்கு அவ்வப்போது நம்பக மான தகவல்கள் கிடைத்து வந்தன. கொலை முயற்சி தொடர்பாக நார்வே பாதுகாப்புச் சேவை அமைப்பில் இருந்து எங்களுக்கு எச்சரிக்கை வந்தது. எங்களுக்கு அந்த அமைப்பு பாது காப்பு வழங்கியது. எனினும் உயர் பாது காப்பு வழங்கப்பட்டா லும் அது உயிரைக் காக்க உத்தரவாதம் தராது என்பதை நான் உணர்ந்திருந்தேன்.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக 2000-ஆவது ஆண்டில் நடைபெற்ற போர், ராணுவத்துக்கு மிக மோசமாக அமைந் தது. அப்போது யாழ்ப் பாணம் பகுதியில் சிக்கிக் கொண்ட ராணுவ வீரர் களை பத்திரமாக வெளி யேற்றுவது தொடர்பாக இந்தியாவிடம், நார்வே பேச்சு நடத்தியது. இவை அனைத்துக் கும் நார்வேதான் கார ணம் என்று அப்போது பெரும்பான்மை சிங்க ளர்கள் கருதினர். அந்த, ஆண்டு மே 24-ஆம் தேதி, நான் கொழும்பை விட்டு நார்வே புறப்பட் டேன். அப்போது அங் குள்ள நார்வே தூதரகத் தின் மீது அடையாளம் தெரியாத சிலர் வெடி குண்டை வீசினர். அது குறி தவறி பக்கத்தில் இருந்த, யாரும் குடி யிருக்காத வீட்டின் தோட்டத்தில் விழுந்து வெடித்தது. அந்த குண்டு என்னைக் குறிவைத்து வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை என்று எரிக் சோல்ஹீம் தெரி வித்தார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...