Saturday, June 9, 2012

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டோருக்கு நீதி செய்யவில்லையா? - (2)


- கவிஞர் கலி. பூங்குன்றன்
ஜாயின்ட் பார்லிமென்டரிக் குழுவிடம் நீதிக்கட்சித் தலைவர்கள் சாட்சியம் அளித்தபோது திராவிடர் சங்கம் சார்பில் சர். ஏ.இராமசாமி முதலி யார் குழு முன் சாட்சியம் அளித்தார். தாம், சாட்சியம் அளித்தபோது சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்று அவர் கோரினார்.  தனித் தொகுதியை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்ததற்கு முன்பாகவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொகுதிகள் அளிக்கப்படவேண்டும் என்றும் அப்போதுதான் தக்க சார்பாளர்களை அவர்கள் சட்ட மன்றத்திற்கு அனுப்ப முடியும் என்றும் அவர் வாதிட்டார். இந்தக் கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும் நியமனம் மூலம் தாழ்த்தப்பட்டவர்கட்குப் பிரதிநித்துவம் அளிக்கப்படவேண்டும் எனச் சட்டத்தில் வகை செய்யப்பட்டது. அந்தக்கால அளவில் தாழ்த்தப் பட்டவர்களுக்காகப் போராடத் தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் பலராக இல்லை. தாழ்த்தப்பட்டவருள் அரசியல் அறிவு வாய்க்கப் பெற்றி ருந்த ஓரிருவர் நீதிக் கட்சியில் சேர்ந் திருந்தனர்.
தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் நீதிக்கட்சியின் கொடியின்கீழ் அணிவகுத்து நின்றனர். நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடிற்று. இதைச் செய்தமைக்காக நீதிக்கட்சியினர் பார்ப்பனர்களால் இழித்துரைக்கப்பட்டார்கள். நீதிக் கட்சி உயர்சாதி இந்துக்களின் பெண்களைப் பறையர்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புவதாக அந்த இயக்கத்தை இடைவிடாது எதிர்த்துப் பார்ப்பனர்  பிரச்சாரம் செய்தனர். நீதிக் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த உயர்சாதி இந்துக்களிடையே இந்தப் பொறாமைப் பிரசாரம் ஒரு பயன் தராத நிலையை உருவாக்க முயன்றது. எனினும் இப் புரோகிதக் கூட்டத் தாரின் முகச்சுளிப்பைப் பொருட்படுத் தாது நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தது.
நீதிக்கட்சியின் தொண்டு காரண மாகப் பல தாழ்த்தப்பட்ட சமுதாயங்கள் - நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன் இருந்த நிலைமைக்கு மாறாக அரசியல் விழிப்புணர்ச்சியையும், சமுதாயத்தில் தன்மான உணர்ச்சியையும், பொரு ளியல் உயர் நிலையையும் பெறத் தொடங்கின.
பார்ப்பனரல்லாதார் அரசியலிலும் சமூக இயலிலும் விழிப்புணர்ச்சியைப் பெற்றுவிட்டால் பிரிட்டிஷ் ஆட்சியை எந்த நேரமும் அகற்ற முடியும் என்று நீதிக்கட்சி எண்ணியது. ஆனால் நாட்டில் பார்ப்பன ஆட்சி என்ற பூதம் கால் ஊன்றிவிட்டால் அதை அசைக்க முடியாது என்றும் அது கருதியது. பார்ப்பன ஆட்சி பிரிட்டிஷாரின் ஆட்சியைக் காட்டிலும் நூறு மடங்கு கேடு விளைவிப்பது ஆகும் என்று நீதிக்கட்சி உறுதியாக நம்பியது.
நீதிக்கட்சிப் பத்திரிகைகளின் போர்க்கோலம்
1919 ஆம் ஆண்டைய சட்டத்தில் வகுப்புரிமை இடம் பெறவேண்டும் என்று நீதிக்கட்சிப் பத்திரிகைகளான ‘Non-Brahmin’, ‘Justice’, திராவிடன், ஆந்திரப்பிரகாசிகா ஆகியவை போர்க்குரல் கொடுத்தன.  லெஜிஸ்லேடிவ் கவுன்சில்களில் நிற வேற்றுமைகள் இடம் பெற்றால் உடனே பார்ப்பனரின் பெரிய ஓலம் கேட்கிறது. ஆனால் சாதி வேற்றுமைகள் பற்றிப் பேசப்பட்டால் அவர்கள் அது பற்றி அறியாதவர்கள் போல் இருந்து விடுகிறார்கள். இந்தியர்களின் பிறப்புரிமை பற்றி இப்பொழுது நிறையப் பேசப்படுகிறது. ஆனால் பஞ்சமர்க்கு ஒரு நாயின் பிறப்புரிமை கூட மறுக்கப்படுகிறது. ஒரு பஞ்சமர் மட்டும் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் உறுப்பினராக இருப்பாரே யானால் அவர் தமது சமுதாய மக்கள் அடைந்துவரும் இன்னல்களை அழுத்தமாக எடுத்துரைக்க மாட்டாரா? பார்ப்பனர்களைப் போலவே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நன்மை களைப் பஞ்சமர்களும் அனுபவிக்க வேண்டும் என அரசாளும் பிரிட்டி ஷாருக்கு அவர்கள் உணர்த்தி இருக்க மாட்டார்களா? இதனாலேயே அர சாங்கத்தின் ஒவ்வொரு கவுன்சிலிலும், அரசாங்கத்தின் எல்லாப் பொது நிலைகளிலும், ஒவ்வொரு சமுதாயத் திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று நாம் வற்புறுத்து கிறோம் என்று 3.-10.-1917 திராவிடன் ஏடு எழுதிற்று. வகுப்புவாரி உரிமை இந்தியாவிற்கு அளிக்கப்பட்டாலொழிய, நாட்டிலுள்ள எல்லா மக்களும் சமஉரிமை பெற இயலாது என்று அது திட்ட வட்டமாக 5-.8-.1918இல் எழுதியது. சட்டமன்றத்தில் ஆதி திராவிடர்களின் பிரதிநிதிகள் ஆதிதிராவிடர்களாகவே இருக்க வேண்டும் என 15.-12.-1920 நாளிட்ட திராவிடன் எழுதிற்று.
இதுகாறும் கூறப்பெற்றவையிலிருந்து பார்ப்பனரல்லாதார் அனைவரும் கல்வி, சமூக இயல், அரசியல், பொருளியல் போன்றவற்றில் முன்னேற வேண்டு மென்றும் வகுப்புரிமை நிலை நாட்டப்பட வேண்டும் ஒவ்வொரு சாதியினருக்கும் சமஉரிமை ஆட்சிப் பொறுப்பிலும், அலுவலகப் பொறுப் பிலும் தரப் படவேண்டுமென்றும், தாழ்த்தப்பட்டவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் போராடுவதற்காக நீதிக்கட்சி உருவாயிற்று என்பதைக் காண்கிறோம்.
பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியினர், தாழ்ந்த சாதியினர் எனப் பாராது அனைவர்க்கும் இடம் தரும் திராவிடன் ஹோம் பார்ப்பனரல் லாதாரில் உயர்ந்த சாதியாராகிய சி.நடேச முதலியாரால் உருவாக் கப்பட்டது.
உரிமைகள் தமக்கும் உண்டு என்பது கூட அறியாராய்த் தமது உரிமைகள் எவை என்பதை அறி யாராய் வாழ்ந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காக இலண்டன் மாநகரத்தில் திராவிடச் சங்கம் சார்பில் சான்றுரை பகர்ந்தவர் பார்ப்பன ரல்லாதரில் உயர்சாதி யினராகிய சர்.ஏ.இராமசாமி முதலியார் என்பதையும் அறிகிறோம்.
அக்காலக் காங்கிரஸ் இயக்கம் பார்ப்பனருக்கு மட்டுமே தனி உரிமையுடைய ஓர் இயக்கமாக இருந்தது. இந்தக் காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் பார்ப்பனரால் நடத்தப்பட்ட பத்திரிகைகள் நீதிக் கட்சி தோன்றியமையையும், வகுப்புரிமை யையும் சாடின. வகுப்புரிமை இந்திய சமுதாயத்தில் வாழும் மக்களிடையே வேற்றுமை உணர்வை வளர்க்கவே உதவும் என்று இந்து 20.-12.-1916 அன்று எழுதியது. நாட்டின் நலனுக்கு இந்த இயக்கம் நன்மை பயக்காது என்று ஹிந்துநேசன் என்ற பத்திரிகை எழுதியது.
எல்லா வகுப்பினர்களுக்கும் பிரதி நிதித்துவம் அளிக்க வேண்டுமானால் துப்புரவு செய்பவர்களுக்கும் கூடப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்ய இயலுமா? முடியு மென்றே வைத்துக் கொண்டாலும் இந்த எல்லா வகுப்பு, உள்வகுப்பு பிரதிநிதிகளும் தத்தமக்கு உரிய கடமைகளைச் செய்ய இயலுமா?  துப்புரவு செய்யும் (ஷிநீணீஸ்மீஸீரீமீக்ஷீ) சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தி யாவில் உள்ள நிர்வாக சபைக்கோ, லெஜிஸ்லேடிவ் கவுன்சிலுக்கோ தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்ந் தெடுக்கப்பட்ட காரணத்துக்காகத் தமக்குரிய கடமைகளைச் செய்வதற்குத் தகுதி பெற்றிருக்க வேண்டாமா? என்று சம்பத் அப்யூதயா எனும் தேசி யப் பார்ப்பன ஏடு 19.-10.-1917-_இல் எழுதியது.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டானதும் பின்னால் வரும் குழப்பங்களுக்குக் கணக்கே இராது. ஒரு பார்ப்பனர், பார்ப்பனரல்லா தார்க்குப் பிரதிநிதியாக இருக்க முடியாது என்ற நெறி, ஒரு சூத்திரன் ஒரு சூத்திரன் அல்லாதவனுக்குப் பிரதிநிதியாக இருக்க முடியாது என்ற நெறிக்கு இட்டுச் செல்வதாகும். தாழ்ந்த மக்கள் எழுப்பி விடப்படும்போது வகுப்பு வாரிப் பிரதி நிதித்துவத்தின் குறை வெளிப்படையாகத் தோன்றும் என்று கிஸ்டன் பத்ரிகா என்ற தேசியப் பார்ப்பன ஏடு 31.-01.-1920இல் எழுதியது.
தாழ்த்தப்பட்டோர் சிக்கல்
நீதிக்கட்சியின் இடையறாத உழைப்பால் பஞ்சமர் என்று அந்நாளில் அழைக்கப்பட்ட ஆதிதிராவிடர்கள் பிள்ளைகளைச் சென்னை மாநகராட்சி தன் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க முன்வந்தது. இதைக் கண்டித்தும் தாழ்த்தப்பட்டவர் குழந்தைகட்குத் தனிப் பள்ளிக் கூடங்கள் அமைக் கப்படவேண்டும் என்றும் 18-.01.-1918 நாளிட்ட இந்து நேசன் என்ற தேசியப் பார்ப்பனப் பத்திரிகை எழுதியது.
அன்னிபெசன்ட் ஹோம்ரூல் இயக்கத்தவர்; இந்தியாவிற்கு ஹோம் ரூல் அளிக்கப்படப் போராடியவர். காங்கிரஸ் அவையில் உறுப்பினர். இவர் ஆதிதிராவிடர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் முற்பிறவியில் தாம் செய்த தீவினை களை இப்பிறப்பில் அனுபவிக்கிறார்கள் எனத் தாக்கி எழுதியிருந்தார். அது மட்டுமின்றி, உயர் சாதிப் பிள்ளை களுடன் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் பொதுக் கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெறமுடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இக்கூற்றுகளைத் தாழ்த்தப்பட்டவர்களும், தாழ்த்தப் பட்டவரின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கமாக இருந்த நீதிக்கட்சியும் கடுமையாகத் தாக்கின. 1916_ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் அவர் களின் கருத்துக்களைக் கண்டிக்கப் பறையர் மகாஜனசபையின் கூட்டம் சென்னையில் நடந்தது.
1917_இல் ராவ்பகதூர் தியாகராயர் செட்டியார், டி.எம்.நாயர் ஆகியோர் தலைமையில் சென்னை ஸ்பர்டாங்கில் கூடிய  பஞ்சமர்களை (ஆதிதிராவிடர் களை)ப் பஞ்சைகள் என்றும் இழிசினர் என்றும் வீணர்கள் என்றும் இந்து ஏடு தீட்டியதைக் கண்டித்து 14.-10.-1917 முடிய உள்ள வாரத்திற்குரிய நான் பிராமின் ஏடு எழுதியது.
இவையெல்லாம் அந்நாளில் தேசியக் காங்கிரஸ் இயக்கம் தாழ்த்தப்பட்டவர் உரிமைகளுக்கும், முன்னேற்றத்திற்கும் எதிராகச் செயல்பட்டமையை விளக்குகின்றன. தாழ்த்தப்பட்டவர்களின் உயர்வுக்காக நீதிக்கட்சி மட்டுமே பார்ப்பனரின் எதிர்ப்புக்கு இடையே போராடிற்று என்பதையும் விளக்குகின்றன.
1916-_ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட நீதிக்கட்சி நான்கே ஆண்டு களில் - 1920_இல் அமைச்சரவை அமைத்துவிட்டது. இந்த அமைச்சர வையின் ஆக்கச் செயல்கள் யாவை? இந்த நான்கு ஆண்டுகளாக இக் கட்சியினர் இந்தியாவிலும், இலண் டனிலும், தம் குறிக்கோள்களையும், கோரிக்கைகளையும் விளக்கினதே. அவை குறித்து எழுதினரே. அவற்றிற்காகப் போராடினரே. அந்த விளக்கங்களும் எழுத்துக்களும்,. போராட்டங்களும் அமைச்சரவை வழியே சாதித்தவை யாவை?
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் கல்விச் சலுகையும், ஒப்படை (தர்காஸ்) நிலங்களையும் வீட்டு மனைகளையும், உழவுத் தொழிலுக்குக் கடன்களையும் அரசு அலுவல்களில் நியமனங் களையும் அளித்தன இவ்வரசின் ஆணைகள்.
இவ்வமைச்சரவை ஜனவரி 1920 முதல் மூன்றாண்டுகளில் பிறப்பித்த ஆணைகளை ஒரு தொகுப்பாக 15.-01.-1924 நாளிட்ட அரசு ஆணை எண். 116 சட்டத்தில் (பொது)  காண்கிறோம்.  இந்த ஆணைத் தொகுப்பின் முன்னுரையில் அடியிற்கண்ட செய்திகளை அறிகிறோம்.
அரசு தாழ்த்தப்பட்டோர் உதவிக் காக எத்தனையோ ஆணைகளைப் பிறப்பித்திருந்தாலும் அவை குறித்த விவரங்கள் தொடர்புடைய மக்களுக் குச் சரியாகப் போய்ச் சேரவில்லை என்று அந்நாளில் கருதப்பட்டது. இதன் விளைவாகச் சட்டமன்றத்தில் பல வினாக்கள் கேட்கப்பட்டன. அரசின் கருத்தை அலுவலர்கள் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. எனவே இந்த ஆணைகளைத் தாய் மொழிகளின் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்) வழியே மக்கள் அறியுமாறு செய்ய வேண்டும் என்று அரசு கருதியது. அது மட்டுமின்றித் தாழ்த்தப்பட்ட வர்கள் பற்றியன மட்டும் அல்லாமல் பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த ஆணைகளும் விளம்பரப்படுத்தப் படலாம் என்று அரசு கருதிற்று.
எனவே நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற திலிருந்து  மூன்றாண்டு களில் அது நிகழ்த்திய சாதனைகள் குறித்து ஆணைகள் தொகுக்கப்பட்டு (116 ஆம் எண்) ஆணையாக வெளியிடப்பட்டது.
பொதுத்துறை
பொதுத் துறையைப் பொறுத்தவரை அரசாங்க அலுவல்களுக்கு     நிய மனங்கள் குறித்த ஆணை    15-.8.-1922 நாளிட்ட 658 ஆம் எண். உள்ளதாகும். இந்த ஆணை தாழ்த் தப்பட்டோர் உள்ளிட்ட எல்லா மக் களுக்கும் உரிய இடங்கள் அளிக்கப் பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
தாழ்த்தப்பட்டோர் நியமனம்
கூட்டுறவுத் துறையில் தலைமை ஆய்வாளராக ரூபாய் தொண்ணூறு ஊதியம் பெற்றுக் கொண்டிருந்த திரு. கிரியப்பா ரூ.250 மாத ஊதியமுள்ள துணைப் பதிவாளராக நியமிக்கப்பட் டார். தாழ்த்தப்பட்ட வகுப்பான பில்லவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் மட்டுமே இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிறித்துவர் ஒருவரும் துணைப் பதிவாளராக ரூ.250 சம்பளத்தில் அமர்த்தப்பட்டார். திரு எம்.சி. ராஜா, கவுரவத் துணைப் பதிவாளர் ஆனார். துப்புரவு வகுப்பினர்,  தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர் களுக்காக 30.-06.-1922 க்கு முன் கூட் டுறவுத் துறை அமைத்த சங்கங்கள் (ஷிஷீநீவீமீவீமீ) வருமாறு:
1.    துப்புறவுத் தொழிலாளர் கூட்டுபவர்    61
துப்புரவுத் தொழிலாளர் அனுமதிக்கப்பட்ட
நகராட்சி அலுவலர்க்கு
2.    மீனவர்    75
3. ஆதிதிராவிடர்    374
4.    தோடர்கள்    2
5. படகர்கள்    60
6.    கோடர்    4 ஏஜென்சிப் பகுதியில் 2877 உறுப்பினர்களைக் கொண்ட 7 விவசாயச் சங்கங்கள் இருந்தன. இவருள் 1268 பேர் மலைவாழ் இனத்தவர்; 592 உறுப்பினர்களைக் கொண்ட விவசாயமல்லாத சங்கங்கள் இரண்டு இருந்தன என்ற விவரங் களைக் காண்கிறோம்.
நீதிக்கட்சியின் இத்தகைய சாதனைகளை இருட்டடிக்க சிலர் விரும்புவது,  துடிப்பது - அசல் பார்ப் பனத்தனம்தானே!
குறிப்பு: நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட வர்களுக்கு என்னென்னவெல்லாம் செய்தது? முனைவர் பு. இராசதுரை அவர்களின் நீதிக்கட்சி பாடுபட்டது யாருக்காக? எனும் நூலைப் படியுங்கள்.
(இன்னும் உண்டு)

நீதிக்கட்சி ஆட்சியில்தான் தாழ்த்தப்பட்டோருக்கு   பொது சாலைகளில் நடக்க உரிமை ஆணை

சென்னை அரசாங்கம் உள்ளூர் அரசாங்க இலாகா
(உள்ளூர் மற்றும் மாநகராட்சி)
அரசாங்க உத்தரவு நெ. 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி, 25 செப்டம்பர், 1924.
ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவை - சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - மாநிலத்திலுள்ள உள்துறை நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாகாக்களுக்கு அனுப்பப் பட்டது.
1924 ஆம் ஆண்டு செப்டம்பர் 24-_ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொதுச்சாலைகள், கிணறுகள் பற்றியது.
திரு. ஆர். சீனிவாசன்: (இரட்டைமலை)
1 (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.
(அ)  எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,
(ஆ) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்ற வைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளி லெல்லாம் ஜாதி இந்துக் களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின் றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்,
சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது.
(இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு) பி.எல். மூர்,    அரசாங்க செயலாளர்
ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு, நகராட்சிகள்,
கார்ப்பரேஷன், சென்னை,
பஞ்சாயத்து, நகராட்சி அதிகாரிகள்
தொழில் கமிஷனர்,
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள எல்லா இலாகாக்கள்,
அரசாங்க செய்தி ஸ்தாபனம்,
இவைகளுக்கெல்லாம் மேற்கண்ட உத்தரவுகள் அனுப்பப்பட்டது. சட்டக்குழு அலுவலகம் 25-.6-.1924
தீர்மானம்
திரு. ஆர். சீனிவாசன்,
(இரட்டை மலை சீனிவாசன்)
உள்துறை அரசாங்க அலுவலகம்)
9. சென்னை மாகாணத்திலுள்ள ஒவ்வொரு அக்கிரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும், தாழ்த்தப்பட்டவர் கள் குடியிருக்கும் சேரிகளிலும், வஞ்சிக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் கிராம தலையாரி மூலமாக மேற்கண்ட இந்த தீர்மானத்தின் விவரங்களை தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் என்றும், மாகாண அரசின் செய்தித் தாள்களிலும், மாவட்ட செய்தித் தாள்களிலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் இந்தத் தீர்மானத்தின் விவரங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்றும் சட்டமன்றக் குழு அரசாங்கத் திற்கு சிபாரிசு செய்கிறது.
(அ) தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அக்ரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் குடி இருக்கும் தெருக்களிலும் நடந்து போய் வருவதில் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது என்பதையும்,
(ஆ) கிணறு, குளம், பொது அலுவலகங்கள், வர்த்தகம் செய்யும் இடங்கள் போன்றவைகளிலும் மற்றும் எல்லா பொது இடங்களிலும், ஜாதி இந்துக் களுக்கு உள்ள உரிமைகள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உண்டு.
தாழ்த்தப்பட்டவர்கள் பொதுக் குளத்தில் இறங்க மகத்தில் டாக்டர் அம்பேத்கர் போராட வேண்டி யிருந்தது. தமிழ்நாட்டிலோ நீதிக்கட்சி ஆணையே பிறப்பித்து விட்டதே.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...