Thursday, May 10, 2012

பார்ப்பனருக்குப் புரோகிதம் இல்லை


தொல்காப்பியம் காலத்தில் பார்ப் பனருக்குப் பாங்கன் தொழில் இருந்த தேயன்றி புரோகிதத் தொழில் இல்லை.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், இன்ப ஒழுக்கத்தையும், இல்லறத்தையும் சிறப்பாய்க்கூறும் அகத்திணையில், களவியல், கற்பியல்களிலேனும் பொதுப் படக்கூறும் பிற இயல்களிலேனும், பார்ப்பனர்க்கு அறுத்தொழிலும் பாங்கத் தொழிலும் ஆவொடு நிமித்தங்கூறலும் வாயில் தொழிலுமேயன்றிப் பிற தொழில்கள் கூறப்படவேயில்லை.
பார்ப்பனர் தொழில்களைக் கூறும் தொல்காப்பிய நூல் பாக்கள்:
கற்பியல்
காமநிலை யுரைத்தலும் தேரிநிலை உரைத்தலும்
கிழவோள் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடுபட்ட நிமித்தங் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்குளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய
தோழி, தாயே, பார்ப்பான், பாங்கன்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப
செய்யுளியல்:
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
களவிற் கிளவிக் குரியவர் என்ப
பேணுதரு சிறப்பிற் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகையித்
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்
பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...