Friday, May 4, 2012

வெள்ளுடைவேந்தர்


சர் தியாகராயர் தோன்றி திராவிடப் பெருங்குடி மக்களுக்குத் தலைமை பூண்டு, அவர்களின் தன்னு ணர்வுக்கு வழிகோலி, அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை அகற்றப்பாடுபட்டு, சமுதாயத் துறை, பொருளாதாரத்துறை, அரசியல் துறை ஆகியவற்றில் நல்லிடம் பெற்றிட உழைத்தார். நமது பண்டைப் பெருமைகளையும் அவரால் உணர முடிந்தது. அன்று தியாகராயர் திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற வேண்டுமென்று பாடுபட்டதன் பலனை இன்று காண்கிறோம்.
தியாகராயர் பெரும் செல்வந்தர், பணம் படைத்தவர். தியாகராயர் விரும்பினால் வியாபாரத் தின் மூலம் பல லட்சம் ஈட்டி இருக்கலாம்.
அவர் விரும்பியிருந்தால் சென்னையிலே பெரும் பாலான இடங்களைச் சொந்தமாக வாங்கியிருக்க இயலும்.
அவர் இவைகளையெல்லாம் பெரிதாக மதிக்க வில்லை. தம்முடைய சமூகத் தொண்டைத்தான் ஒரு பொருட்டாக மதித்தார். திராவிட சமூகத்தில் ஒரு பெரிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். அரசிய லிலே நம்மவர்கள் முதலிடம் பெற வேண்டுமென்று அவர் விரும்பினார். தியாகராயர் போக பாக்கியத்தை விட்டுத் தாமாகவே கல்லும் முள்ளும் காட்டாறும், கருங்குழியும் நிரம்பிய பாதை வழியே செல்லத் தொடங்கினார்.
அவர் களத்திலே தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கிறது. அவர் பறக்க விட்ட சமுதாயப் புரட்சிக் கொடியின் கீழ் நின்றுதான் இன்று பணியாற்றி வருகிறோம் என்றார் அறிஞர் அண்ணா. அந்தப் பெருமகனார் வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் 161ஆவது ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1852).
காங்கிரஸ்காரர் ஆக இருந்த ஆன்மீகவாதி, மாநகர தந்தை - சட்டப் பேரவை  உறுப்பினர், பல்வேறு பொது நிறுவனங்களின் தலைவர் என்ற பன்முகப் பெருமை கொண்ட சீலர் இவர்.
இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதார் சமூக நிலை, கல்வி வேலை வாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் என்று பல தளங்களிலும் செம்மாந்து நிற்கின்றனர். தமிழ்நாட்டைப் பாரீர்! என்று பல மாநிலத்தவர்களும் பெருமையுடன் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் திராவிடர் இயக்கம் தன்மான இயக்கமே!
அதற்கு ஒருவர் கடைக்கால் போட்டார் என்றால் அது என்ன சாதாரணமா! இன்றளவுக்கும்கூட பார்ப்பனர்கள் திராவிடர் இயக்கத் தலைவர்களை நினைக்கும் தொறும், நினைக்கும் தொறும்  நரநர வென்று பற்களைக் கடிக்கின்றனர் - ஆத்திரத்தின் உச்சியில் குடியேறி அனல் கக்குகின்றனர் என்றால் அதற்குக் காரணம் என்ன? பார்ப்பனர்களின் ஏக போகத்தில் இருந்த ஆதிக்கம் அனைத்தையும் பறிமுதல் செய்து, சகல மக்களுக்கும் விநியோகம் செய்த சமதர்ம நோக் குடைய சீலர் இவர்!
அனுபவித்தவர்கள் அல்லவா? ஆத்திரப்படத்தான் செய்வார்கள். அதே நேரத்தில் அவர்களின் உழைப்பால் நலன் பல பெற்று வளமுடன் வாழ்வை நடத்தும் நம் மக்களின் நிலை என்ன? மனப்பான்மை என்ன?
அந்த மாபெரும் தலைவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோமா? எந்தக் கொள்கை நம்மை மேலே உயர்த்தியதோ, அந்தக் கொள்கையை நினைத்துப் பார்க்கிறோமா? அந்தக் கொள்கைகளைப் பெரும் பாலான தமிழர்கள் கடைப்பிடிக்கின்றனரா? தங்கள் வாரிசுகளுக்குச் சொல்லிக் கொடுக்கின்றனரா?
அதே நேரத்தில் நம் இன எதிரிகளின் சிந்தனைகள் எப்படி இருக்கின்றன? அவர்கள் எதை நோக்கிக் கவண் வீசுகிறார்கள் என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?
நண்பன் யார்? பகைவன் யார்? என்பதைக்கூட அடையாளம் கண்டு, விழிப்போடு இல்லாவிட்டால் மீண்டும் ஆதிக்கவாதிகள் குதிரை சவாரி செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்!
இன்னும் ஜாதி ஒழிந்துவிடவில்லை; இன்னும் நமக்குள் விகிதாசார உரிமைகள் வந்து சேரவில்லை. இன்னும் மொழி இனப் பண்பாட்டு அடையாளங்கள் மீது எதிர் பண்பாடு சவாரி செய்து கொண்டு தானிருக்கிறது.
இவற்றை எல்லாம் நம்மை வாழ வைத்த தலைவர்களின் பிறந்த நாளில் - நினைவு நாளில் ஒருமுறை அசைப் போட்டுப் பார்க்க வேண்டாமா? சூளுரைகளை மேற்கொள்ள வேண்டாமா?
பார்ப்பனர்களைப் பார்த்தாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா?
வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் பிறந்த நாளில் இனவுணர்வைக் கூர் தீட்டிக் கொள்வோம். பெற வேண்டிய உரிமைகளை மீட்டெடுக்க உறுதி கொள்வோம். வாழ்க தியாகராயர்!
வாழ்க தந்தை பெரியார்!!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...