Wednesday, April 4, 2012

மோடியின் முகமூடி கிழிந்தது!


குஜராத் முதல் அமைச்சர் தாமோதரதாஸ் நரேந்திர மோடி மகா மகா உத்தமப்புத்திரர் - அசல் பசு நெய்யில் உருக்கி வார்க்கப்பட்ட அக்மார்க் சரக்கு என்று இங்குள்ள சோ ராமசாமிகள் தூக்கிப் பிடிப்பார்கள்.
உண்மையான புலியைவிட புலி வேடம் போட்ட மனிதன்தான் அதிகமாகக் குதிப்பான் அதுபோல பார்ப்பனர்களைவிட மோடி போன்ற பார்ப்பனர் அல்லாதவர்கள் வேடம் போட்ட இந்துத்துவா புலி என்பதால் கொஞ்சம் - அதிகமாகவே துள்ளுவார்கள். இப்படிப்பட்ட பேர்வழிகள் பார்ப்பனர் அல்லாதாரில் கிடைத்தால் அல்வாதுண்டு கிடைத்த மாதிரி பார்ப்பனர்களுக்கு! ஆகா ஊகா என்று உச்சியில் மகுடம் சூட்டி, காதில் பூ சுற்றிக் களேபரம் செய்து விடுவார்கள்.
தூய்மையான நிர்வாகம் அப்பழுக்கற்ற செயல்பாடு மோடியின் ஆட்சியில் என்று சொல்லுகிறவர்களின் முகத்திரையைக் கிழித்துள்ளது தலைமைத் தணிக்கையாளரின் அறிக்கை (CAG).
விதிமுறைகள், வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 22 நிறுவ னங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு நிறுவனங் களின் கணக்குகள் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.
அரசின் நிதி நிலையறிக்கையில் (பட்ஜெட்டில்) 19 இனங்களில் ரூ.1444 கோடி சேமிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரூ.2045 கோடி செலவிடப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.601 கோடி கூடுதலாகத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது அரசின் நிதி நிலை அறிக்கை தொடர்பான செயல் சரியில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
முறையான விளையாட்டுக் கொள்கை வகுக் கப்படவில்லை, பயிற்சியாளர்கள் அனைவரும் நிருவாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பான்மையான விளையாட்டு விடுதிகள் செயல்படவேயில்லை. குடிநீர் கொள்கையும் சரியாக செயல்பாட்டில் இல்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம் எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. ஆற்றுநீர் தூய்மைப் படுத்தும் திட்டத்தை முறையாகக் கண்காணிக்க வில்லை.
நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்கள் தேவைப்படும் பயனாளிகளுக்கு முறையாகப் பகிர்ந்து அளிக்கப்படவில்லை.
நிருவாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங் கள் தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட 71.8 கோடியை வருவாய்த் துறை பயன்படுத்தவேயில்லை என்கிறது தணிக்கை அறிக்கை இதற்குமேல் மோடி ஆட்சி மக்கள் நல ஆட்சியல்ல என்பதற்கு என்ன சாட்சியமும் - ஆவணங்களும் வேண்டும்?
பெரிய பெரிய தொழிற்சாலைகள் குஜராத்திற்கு வந்து குவிகின்றன என்பதில் என்ன பெருமை வாழ்கிறது? திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத தன்மைக்குப் பெயர் கையாலாகாத அரசு என்பது தான்.
கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையைப் பார்க்கும் பொழுது குஜராத் மாநிலத்தில் நிருவாகம் என்ற ஒன்று இருப்பதாகவோ, அரசு பணியாளர்கள் அங்கு தம் கடமையைச் செய்வதாகவோ தெரிய வில்லையே.
2009ஆம் ஆண்டு முதல் பெட்ரோலியம் நிறுவனம் தவறான முறையில் செயல்பட்டதால் 5000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் தலைமைத் தணிக்கை அறிக்கை கூறுகிறது.
தலைமைத் தணிக்கை அறிக்கை என்றால் 2ஜி அலைவரிசை மட்டும்தான் நினைவுக்கு வருமா? அதாவது நட்டம் என்று சொல்லப்படும் யூகத் தொகை மக்கள் நலனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. ஆனால் மோடி நிருவாகம் வேறு வகையில் அல்லவா நட்டப் பட்டுள்ளது?
இந்த யோக்யதையில் உள்ள இந்த நிருவாகிதான் பிரதமர் நாற்காலியில் அமர வேண்டுமாம்.
குஜராத்தைப் போல இந்தியா முழுமையும் சிறு பான்மையினர் நசுக்கப்பட வேண்டும் என்ற நச்சு எண்ணம்தான் இதன் பின்னணியில் குடி கொண் டுள்ளது.


.
 1

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...