Sunday, April 22, 2012

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில்..


அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1891) இந்நாளில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும், கூட்டங்கள் நடத்தப்படும் - இவை நடந்தப்பட வேண்டியவைதான் - மக்கள் தலைவர் இந்த மாமேதை என்ற எண்ணம் இளைஞர்களும் பரவலாகத் தெரிந்து கொள்ள இவை ஒரு வகையில் தேவைப்படுபவையே!
அதே நேரத்தில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகிய இருபெரும் தலைவர்கள் இந்தக் காலகட்டத்தில் எப்படியெல்லாம் தேவைப்படுகிறார்கள்? ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் சவால்களைச் சந்திக்க இவர்களின் வழிகாட்டுதல்கள் எப்படி எல்லாம் தேவைப்படுகின்றன என்பதைப் பற்றிச் சிந்திக்கவும். இவற்றின் அடிப்படையில் செயல்படவுமான உணர்வுகள் தேவைப்படும் தருணம் இது.
மண்ணுக்குச் சுதந்திரம் கிடைத்தால் போதுமா? மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்க வேண்டாமா என்று கேட்டவர் தந்தை பெரியார். பிறவியின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஜாதியை பாதுகாக்கும் ஓர் அரசமைப்புச் சட்டத்தை வைத்துக் கொண்டு, சுதந்திரம் பேசுவது சிறுபிள்ளைத்தனம் அல்லவா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் - சமத்துவம் இருக்குமா? சமத்துவம், சுதந்திரம் நிலவ வேண்டுமானால் ஜாதி இருக்கலாமா? ஜாதியை ஒழிக்காத அரசியல் சட்டம் நமக்கு எதற்கு? ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தி பல்லாயிரக்கணக் கான தொண் டர்கள் சிறை போகும் ஒரு நிலையை உருவாக்கியவர் தந்தை பெரியார். அரசமைப்புச் சட்டத்தை நான் தான் உருவாக்கினேன் என்றாலும் அதனைக் கொளுத்துவதில் நானே முதல் ஆளாக இருப்பவன் என்று நாடாளு மன்றத்திலேயே பகிரங்கரமாக அறிவித்தவர் அண்ணல் அம்பேத்கர்.
பெரியாரியல்வாதிகளும், அம்பேத்கரியல்வாதிகளும் இந்தத் திசையிலே இணைந்து போராட கடமைப் பட்டுள்ளனர்.
ஒரு பக்கத்தில் அரசியல் முகமூடி அணிந்து கொண்டு இந்துத்துவா ஆட்சியைக் கொண்டுவர உயர்ஜாதி பார்ப்பனர் கூட்டம் திட்டமிட்டு வேலை செய்கிறது.
பி.ஜே.பி.யையோ அதன் பரிவாரங்களையோ எதிர்ப்பது முறியடிப்பது என்பது அரசியல் நோக்கத்தால் அல்ல.
அவர்கள் கட்டிக் காக்க விரும்பும் இந்துமதம் என்பது சமத்துவத்துக்கு எதிரானது; பிறவியின் அடிப்படையி லான பேதங்களை நிலை நிறுத்துவது;  பார்ப்பன ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது என்பதுதான்.
புத்த நெறியை, அம்பேத்கர் தழுவினாலும் அதனை இந்துமதப் பட்டியலின் கீழ்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் வைத்துள்ளது.
தந்தை பெரியார் நாத்திகம் பேசினாலும் அவரையும் இந்து மதத்தின் பட்டியலில்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் வைத்துள்ளது என்றால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கண்ணி வெடிகளைத் தெரிந்து கொள்ளலாம்.
ராமன் பாலம் என்று சொல்லி புராதனச் சின்னத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற போர்வையில் ராமன் வருணாசிரமத் தன்மையை அமைப்பை இன்னொரு வகையில் நிலை நிறுத்தப் பார்க்கிறது ஒரு கூட்டம். இதில் சரியான பார்வை நம் மக்களுக்குத் தேவை.
சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களில் உள்ஒதுக்கீடு தேவை என்றால் அதனை எதிர்க்கிறது ஒரு கூட்டம்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் சமூக நிலையும், பிரச்சினையும் உயர்தட்டுப் பெண்களின் வாழ்க்கை நிலையும், பிரச்சினையும் ஒன்றுதானா?
தனித் தொகுதி முறை வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னதற்கான காரணம் இந்தப் பிரச்சினையிலும் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகத்துக்கு இருந்து வரும்பார்வையும், பொறுப்பும்; ஒடுக்கப்பட்ட சமூக அமைப்பைச் சார்ந்தவர்களுக்கேகூட இல்லாதது வருந்தத்தக்கது.
இடஒதுக்கீடு என்பதுசட்ட ரீதியாக உண்டு என்றா லும் அதில்கூட நம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்று கிறார்கள்?
இந்தியாவில் 8120 கல்லூரிகளும் 1239 பல்கலைக் கழகங்களும் உள்ளன. மூன்று லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றும் இந்நிறுவனங்களில் சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் கிடைத்திருக்க வேண்டிய இடங்கள் (22.5ரூ) 67,500; ஆனால் கிடைத் திருப்பதோ வெறும் 17 ஆயிரம் இடங்கள். மீதி 50 ஆயிரம் இடங்கள் யார் வயிற்றில் அறுத்து  வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் விழிப்புணர்வு ஓகோ என்று உயர்ந்து நிற்கிறது என்று பேசிக் கொள்கிறோம்.
ஆனால், நமக்குள்ள உரிமைகளை நாம் பெற்றுக் கொள்ளக்கூட முடியாத நிலையில்தான் இருக்கிறோம் என்பதை வெட்கத்துடன் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்று சேரும்போதுதான் நமது உரிமையை மீட்கும் பலம் நமக்குக் கிடைக்க முடியும். இதுதான் பெரியார் அம்பேத்கர் நமக்கு காட்டிச் சென்ற வழிகூட!
அண்ணல் பிறந்த நாளில் சிந்திப்போமாக, செயல் படுவோமாக!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments 

 
#6 Ajaathasathru 2012-04-20 09:02
தமிழ் வாணர் ஓரளவு மனசாட்சி உள்ளவர்! பித்தனைப்போல் சாதிபித்து தலைக்கு ஏறவில்லை! ஆனால் அவர் எங்கே வசிக்கிறார் ? இன்னும் தமிழ்நாட்டு கிராமங்களில் பார்பனர்களுக்கு ம் , பண்ணைகளுக்கும் சமமாக தலித்துக்கள் உட்கார முடியாது! ரெட்டை குவளை இன்னும் உள்ளது! ஏன் சென்னையில் கூட, என்னுடைய பார்ப்பன நண்பர், தன மகனை வடநாட்டு ஆர் எஸ் எஸ் சாமியார் பள்ளியில் சேர்க்கிறார் , அருகிலிருக்கும் தரமான தனியார் பொது பள்ளியை விட்டு ! எவ்வளவு காலம்தான் இப்படி தனிமைப்பட்டிருப ்பீர்கள்? சிந்தனை செய்யுங்கள் நண்பரே! நான் தலித் அல்ல ; ஆனால் மனிதாபிமானத்துட ன் நியாயமாக இருக்க நினைப்பவன்!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#5 Ajaathasathru 2012-04-20 08:52
பார்ப்பன பகாசுர கொள்ளையன் டாடா வினால் ,ராஜா பழிவாங்கபடுகிறா ர்! ஒரு நிமிடத்திற்கு பதினாறு ரூபாய் வரை கொள்ளையடித்துக் கொன்டிருந்த டா ,அம்பானி கூடங்கள் , நிமிடத்திற்கு முப்பது காசுகளாக குறைத்ததற்கு தான் இந்த பழி! பார்பன நரிகூட்டங்கள் ராஜாவை சூழ்ந்து கொண்டு குதறுகிறார்கள் ! டி டி கே முதல் நரசிம்மராவ், சுக்ராம், முன்னுற்று ஐம்பது கோடி சொத்து சேர்த்த மருத்துவத்துறை செயலர் கேடன் சர்மா வரை , ஊழலில் சிக்காத பார்பனர் உண்டா?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#4 வடலூர் பித்தன் 2012-04-19 21:50
பழைய நெனப்புடா பேராண்டி!தலித் திலக்ன்கலான ராசா மாயாவதி கெ ஜி பாலக்ரிட்டிணன் ஆகியோர் ஊழலில் மிஞ்சி நிற்கின்றனர் அம்பி!இதுக்கென சொல்ற அம்பி?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#3 tamilvanan 2012-04-18 17:11
எந்த ஊர் கூட்டத்திலும் இவ்வாறு நடப்பதாக கேள்விப்பட்டல்த ில்லை. பட்டி. நில உரிமை ஆளர்கள் இவ்வாறு பொது கூட்டனகளில் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் பார்பனர்கள் அல்ல.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#2 Ajaathasathru 2012-04-18 09:21
ராஜராஜ சோழனை , வடநாட்டு சந்திரகுப்டனை விஞ்சிய பேரரசனாக , சரித்திரம் போற்றலாம்! ஆனால், பார்ப்பன, சமஸ்கிருத பண்டிதர்களை அரச குருவாக ஏற்றுக்கொண்டு, அவர்களின் ஆரிய புத்தியினாலேயே, ஏனைய தமிழ் மன்னர்களையும் , ராஷ்டிரா கூடம், கங்கம், இலங்கை , சாவகம் முதலிய அந்நிய நாகரிகத்தாரையும ் வென்று, ஆரிய கோட்பாடின்படியே , உழைப்பாளிகளை சுரண்டி , பார்பன கலாச்சாரத்தை தமிழ் நாட்டில் வேரூன்ற செய்தான்! அதன் பின் விளைவு தான் , உழைப்பவர்கள் ஓட்டண்டியாயினர் , வீரர்கள் சரியான சம்பளம் தரப்படாததால் விவசாயத்திற்கு திரும்பினர்! சுற்றியிருந்த மக்கள் எல்லாம் தமிழர்க்கு விரோதமாய் மாற , தமிழனமோ இன்னும் பார்ப்பன மாயையில் சிக்கி மீள வழியில்லாமல் தவிக்கிறது! போரில் காட்டிய வீரத்தை, மக்களை பராமரிக்கும் பணியிலும் காட்டியிருந்தால ், இப்படி பக்தி போதையில் விழுந்து, வீரத்தை தொலைத்திருக்க மாட்டார்கள்! ஊர் கெட நூலை விடு என்ற பழமொழியும் தோன்றியிருக்காத ு!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#1 கடலூர் சித்தன்.ஆர் 2012-04-17 18:29
ஊர் பொது காரியங்கள்/ பிரச்சினைகள் பற்றி பேசிட மக்கள் அனைவரும் பொது
இடத்தில் கூடுகின்றனர்.

அம்பி நீயெல்லாம் நாற்காலியில் உட்காரப்படாது.

ஏன் சாமி? நிறைய பிராமனாள் சாமியெல்லாம் நாற்காலிகளில் உட்கார்ந்து இருக்கிறார்களே? நாங்கள் ஏன் உட்காரக் கூடாது?

அவாள் எல்லாம் ஆண்டவனை நேரிடையாக தொடர்பு கொள்ளும் வரம் பெற்றவர்கள். அந்தத் தகுதியை இந்து மதம் உங்களுக்கு கொடுக்க வில்லைஎன்று நோக்குதெரியாதோ?

படவா ராஸ்கல்ஸ் – ஐயர் சாமி கிட்டே வாக்குவாதம் பண்ணிகொண்டா இருக்கிறாய். நாம கீழே தான் இருக்கணும். அல்லது சாமி குத்தம் ஆயிடும்.சின்ன பசங்க பேசறதை எடுத்துக்காதீங் க சாமி.

நீங்க பஜனையை/பிரசங்கத்தை ஆரம்பிங்க சாமி.

ஹி..ஹி..ஹி.. வேலிக்கு ஓனான் அல்லவா சாட்சியாக உள்ளது.???

தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட் ட மக்களும் ஒன்று சேரும்போதுதான் நமது உரிமையை மீட்கும் பலம் நமக்குக் கிடைக்க முடியும்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...