Tuesday, March 6, 2012

விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கி.வீரமணி


 இந்து நாளிதழ் படப்பிடிப்பு
விசாகப்பட்டினம், மார்ச் 6- பெரியார் ராமசாமி அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது. ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பெரியாரின் கனவை நனவாக்க விரைந்த  தீர்வுகள் எதுவும் இல்லை என்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
கடற்கரை சாலையில் ஒய்.எம்.சி.ஏ.க்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் ராமசாமி அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைக்கும் முன்னர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த சிலை திறப்பு விழாவில் பழங்குடியினர் நல அமைச்சர் பி.பாலராஜு, மருத்துவக் கல்வி அமைச்சர் கோண்ட்ரூ முரளி, தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.குமரேசன், ஈ.வெ. ராமசாமி ஆசாய சாதனா சங்கத் தலைவர் ஜெயகோபால் மற்றும் உறுப்பினர்கள் காந்தா பாபா ராவ் மற்றும் பி. பென்டா ராவ்  மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் ராமசாமி ஒரு மாபெரும் மனிதநேயர் என்றும், தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தனது செல்வம் அனைத்தையும் பொது நலனுக்காக விட்டுச் சென்றவர் என்றும், சமூக முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார்.  பலதுறைகளிலும் மக்களிடையே வேறுபாடு பாராட்டல் ஆகியவற்றுக்கு எதிராகவும், விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவாகவும் இறுதி வரை போராடியவர் என்றும் வீரமணி கூறினார்.
கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், 5000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஜாதி அமைப்பு முறையை ஒரே இரவில் அழித்துவிடுவது என்பது இயலாதது என்றும், அது ஒரு நீண்ட கால போராட்டம் என்றும், மக்களின் மனநிலையை மெல்ல மெல்ல மாற்றும் தங்கள் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் என்று கூறினார்.
பெண்கள் தங்களுக்குரிய அதிகாரங்களையும், உரிமைகளையும் பெறவேண்டும் என்று போராடிய ஒரு மாபரும் பகுத்தறிவாளர் பெரியார் என்று கூறிய வேந்தர் கி.வீரமணி, பெரியார் எந்த அரசுப் பதவி களுக்கும் ஆசைப்பட்டதே இல்லை என்றும் கூறினார்.
நீதிக்கட்சியின் மூலம் சமூக நீதி இயக்கத்தை வழி நடத்திச் சென்றவர் பெரியார் என்று கூறிய வீரமணி அவர்கள், பெரியாரின் தொண்டர்கள் இது பற்றிய விழிப்புணர்வை தங்களின் செயல்பாடுகள் மூலம்  ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார்.
சமூக மாற்றத்திற்கான கருவியாக கல்வி இருக்க வேண்டும் என்று பெரியார் ராமசாமி அவர்கள் நம்பினார் என்று திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்து அதை வழி நடத்திச் செல்லும் வீரமணி அவர்கள் கூறினார்.
எனவே, தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களும், ஆதரவாளர்களும், பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களும், இந்திய நாத்திக சங்கத்தினரும் பல்வேறுபட்ட நிலைகளில் காட்டப்படும் வேறுபாடு களுக்கு எதிராக சோர்வின்றி போராடி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
- இவ்வாறு இந்து நாளிதழ் விஜயவாடா பதிப்பில் செய்தி நேற்று வெளியாகியுள்ளது.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...