Monday, March 26, 2012

பட்டபின்....


உலக நாடுகள் இலங்கை அதிபர் 21-ஆம் நூற்றாண்டின் இட்லர் ராஜபக்சேவை நறுக் கென்று மூளைதெறிக்க குட்டிய பிறகும்கூட, பக்சே வின், ராஜத் திமிர் அடங்கவில்லை போலும்!
ஜெனிவாவில் தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், நடுநிலை வகித்த நாடுகளுக்கெல்லாம் நன்றி தெரிவித்த இந்த நாட் டாண்மைக்காரர் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளை மிரட்டியும் உள்ளார். அப்படி வாக்களித்த நாடுகள் பயங்கரவாத விளைவுகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டி வரும் என்று எச்சரிக்கை யும் செய்துள்ளார்.
அரச பயங்கரவாதம் என்று சொல்லுவார்களே அதற்கு முற்றிலும் பொருந் துகிற ஆட்சியின் தலைவர் பயங்கரவாதத்தைப்பற்றி திருவாய் மலர்வது 21ஆம் நூற்றாண்டின் பொறுக்கி எடுத்த நகைச்சுவை!
வெள்ளைக்கொடி ஏந்தி சமாதானப் பேச்சுக்கு வந்த வர்களையும் வேட்டை யாடிய கும்பல்; 12 வயது சிறுவனைக்கூட கொடூர மாகக் கொன்ற குரூரர் - பச்சிளம் சிறுவர்கள் வசித்து வந்த விடுதியைக் கூட விட்டு வைக்காமல், மருத்துவமனைகள்  என்பதைக்கூட பாராமல் குண்டு வீசி கொலையாட் டம் போட்ட ராஜபக்சேவா பயங்கரவாதம் பற்றி வாய் திறப்பது?
பிரிட்டனின் 4 ஆவது அலைவரிசைக் காட்சியைக் கண்டு கல்லும்கூட கதறுமே! ஆனால் புத்தர் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர் போதனை களின் கழுத்தை நெரித்து ரத்தக் குளியல் நடந்தும் நரிகளா இதோபதேசம் செய்வது?
இந்தியாவுக்கு இந்த நேரத்தில் ஒன்று! எவ் வளவுதான் இலங்கைக்கு வெண் சாமரம் வீசினாலும், ஒத்தடம் கொடுத்துப் பார்த்தாலும், திருத்தத் தீர்மானம் கொண்டு வந்து முட்டுக் கொடுத்துப் பார்த் தாலும்,  கடைசியில் இந்தி யாவுக்கு மிஞ்சியது  இலங் கையின் கறுப்புப் பட்டியல்தான்!
வங்கதேசப் போரில் கூட இந்தியாவின் வான் வெளியில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் பறக்கக் கூடாது என்று இந்தியா எச்சரித்த நிலையில், தமது விமான தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பச்சைக் கொடி காட்டியது இந்தச் சுண்டைக்காய் இலங்கை என்பதைக்கூட மறந்து விட்டு, தமிழினப் பிணங்கள்மீது நர்த்தனம் ஆடும் கழுகுக்குக் கைலாகு கொடுக்க எப் படித்தான் இந்தியாவுக்கு மனசு வருகிறதோ தெரிய வில்லை!
பட்டபின் புத்தி கொள் முதல் பெறுவது தான் பகுத்தறிவுக்கு அழகு!
தேறா நட்புதீரா இடும்பை தரும்
- மயிலாடன்


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...