Sunday, March 25, 2012

பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்!


பார்ப்பனர்கள் பார்வையில் ஈழத் தமிழர் பிரச்சினை எப்படி இருக்கிறது? இதனைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் துக்ளக்கில் திருவாளர் சோ கக்கும் நஞ்சினைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
இந்த வார துக்ளக்கில் தலையங்கப் பகுதியில் டெக்கான் கிரால்டு நாளேட்டுக்கு சோ அளித்த பேட்டி வெளியிடப்பட்டுள்ளது.
என்ன சொல்ல வருகிறார் இவர்?
கேள்வி: போர்க்குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப் பதற்கு நீங்கள் கூறும் வழிமுறை என்ன?
சோ: போரே நடக்கவில்லையே! யுத்தம் நடக்க வில்லை. இலங்கையில் நடந்தது தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கை. அவ்வளவுதான்! அது ஒரு யுத்தமல்ல. இப்பொழுது இந்தியாவில் நக்சலைட்டுகளுக்கும், இந்திய அரசுக்குமிடையே யுத்தம் நடந்துகொண்டிருக்கிறதா? சில மத அடிப்படை தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுக்கிற நடவடிக் கைகள் எல்லாம் யுத்தங்களா? அவையெல்லாம் யுத்த மல்ல. தீவிரவாதம் நடக்கிறது; பயங்கரவாதம் நடக் கிறது; அல்லது உள்நாட்டுக் கலகம் நடக்கிறது. அதை எதிர்த்து உறுதியான நடவடிக்கை எடுக்கிறது. இதற்கு இராணுவம் தேவைப்பட்டால் அதையும் பயன்படுத்துகிறது.
இதை யுத்தம் என்று சொல்லிவிட முடியுமா? ராணுவம் வந்தாலே யுத்தம்தான் என்று அர்த்தமா என்ன?
அப்படிப் பார்த்தால் பஞ்சாபில் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் பயன்படுத்தப் பட்டது. அப்போது பிந்தரன்வாலே கோஷ்டிக்கும், இந்தியாவுக்குமிடையே யுத்தம் நடந்ததா? அதே போலத்தான் இலங்கையிலும் யுத்தம் நடக்கவில்லை. தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கு ராணுவம் பயன்படுத்தப்பட்டது.
(துக்ளக், 28.3.2012)
திருவாளர் சோ ராமசாமியின் பதில் விவாதமாக இல்லை; மாறாக வாதமாக உள்ளது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
இலங்கையில் ஈழப் போராளிகள் ஆயுதம் எடுத் தனர் என்பது உண்மைதான். எப்பொழுது அந்த ஆயுதங்களை எடுத்தார்கள்?
தமிழர்கள் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து, தமிழர் களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையிலிருந்து தமிழர்களின் தாய்மொழிக்கு உரிய உரிமைகள் வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து, தமிழ்ப்பெண் கள் சிங்களக் காடையர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட போதிலிருந்து ஆயுதங்களைத் தூக்கினார்கள். முதலில் காந்தியாரைவிட அகிம்சை வாதியாகத்தானே செல்வநாயகம் அறப்போராட்டம் நடத்தினார்.
அவர் தலைமையில் உண்ணாவிரதம் நடத்தப்பட்ட போது அவர்களை அடித்து ஆற்றில் தூக்கி எறிந்தவர்கள் யார்? சிங்களவர்கள்தானே! அடிபட்ட ரத்தக் காயத்தோடு பிரதமர் பண்டார நாயகாவைச் சந்தித்தபோது அவர் என்ன சொன்னார்? சிங்கள வர்கள் கொஞ்சம் முரடர்கள், பேசாமல் கலைந்து செல்லுங்கள் என்றுதானே சொன்னார்!
திருவாளர் சோவின் கண்களுக்குச் சிங்களவர் களின் இந்த வன்முறைகள் எல்லாம் தெரியாது.
பெரும்பான்மையான சிங்கள வெறியர்கள் அரசு துணையோடு ஈழத் தமிழர்களைத் தாக்கினால், பெண்களை வேட்டையாடினால் அவையெல்லாம் வன்முறையாகாது - பயங்கரவாதமும் ஆகாது. இந்தக் கொடுமையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தங்கள் பெண்களின் மான உணர்வைக் காப்பாற்றிக் கொள்ள தமிழர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டால் சோவின் பார்வையில் வன்முறை - பயங்கரவாதம்!
இந்த உண்மைகளைத் தலைகீழாக மாற்றி தற் காப்புக்காக ஆயுதம் ஏந்துபவர்கள் பயங்கரவாதிகள் - அவர்களை ஒடுக்கும் வேலையில்தான் இலங்கை இராணுவம் செயல்பட்டது என்று கூறுகிறார் என்றால், இந்த மனிதாபிமானமற்ற பார்ப்பனர்கள், சிந்தனையில் சிங்களவர்களாகவே இருக்கின்றனர் என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
சிங்களவர்கள்மீது இனத் துவேஷத்தோடா போராளிகள் ஆயுதம் தூக்கினார்கள்? இனவெறி யோடு தமிழர்களை அழிக்கும் சக்திகளோடுதானே போராளிகள் போராடும் நிலை ஏற்பட்டது!
சோ கண்ணோட்டத்தில் அடிபட்டவன் அடித்த வனை எதிர்கொண்டு தாக்கினால் பயங்கரவாதம் - ஒரு குலத்துக்கொரு நீதி கூறும் மனுதர்மவாதிகள் அல்லவா!
சோவிவின் பதிலில் தமிழர்கள்மீதான துவேஷம் தானே தலைதூக்கி நிற்கிறது - உண்மையைத் தலைகீழாகத் திரித்துப் பேசும் நரித்தனம்தானே மேலோங்கி நிற்கிறது.
தமிழர்களே பார்ப்பனர்களைப் புரிந்துகொள்ளுங் கள் என்பதுதான் நமது வேண்டுகோள்.


.
 

Comments 

 
#1 Ajaathasathru 2012-03-24 19:58
திருவாளர் சோ வின் மண்டையில் முடித்தான் இல்லை! மூளையுமா இல்லை! கேட்கிறவன் கேனையன் என்றால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்று பூச்சுற்றலாம் ! அம்மாவின் நிலையம் இதுதான்! போர் என்றால் இரண்டு பக்கமும் கொலை விழத்தான் செய்யும் என்ற கூட்டம்தானே!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...