Wednesday, March 7, 2012

இலங்கை அரசுக்கு எதிராக அய்.நா. கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்


சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள்
சென்னை, மார்ச் 6- இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மா னத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் இதுதான் தலையாய கடமை என்று மத்திய அரசுக்கு வேண்டு கோள் விடுத்திருக் கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
இலங்கைக்கு எதி ரான ஜெனிவா தீர் மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி இன்று காலை சென்னையில் திராவிடர் கழக தலை வர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இலங்கைக்கு எதி ராக அமெரிக்கா கொண்டு வரும் ஜெனிவா தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி இன்று (6.3.2012) காலை 11 மணிக்கு சென்னை சைதை பன கல் மாளிகை முன்பு திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இவ்வார்ப் பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமை வகித்து ஆற்றிய உரை வருமாறு:
குறிப்பாக தமிழர் வாழ்வுரிமைக்காக போராடுகின்ற தமிழின உணர்வாளர்களுடைய உரிமைகளை சிங்கள ராஜபக்சே அடக்கிய தோடு மட்டுமல்லாமல், தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறார்.
ஒரு லட்சம் பேர் இறந்து போயினர்
1,40,000 தமிழர்கள் இலங்கையிலே காணா மல் போயிருக்கின்றார் கள். 25,000 பெண்கள் என்ன ஆனார்கள் என் பது தெரியாது.
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கையில் நடை பெற்ற போரில் கொல் லப்பட்டிருக்கின்றார்கள். இவைகளை எல்லாம் நாம் சொல்லுவதைவிட அய்.நா. குழுவினாலே அமைக்கப்பட்ட மனித உரிமை ஆணையம் தெளி வான அறிக்கையைக் கொடுத்திருக்கிறது.
அய்.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் அந்த அறிக் கையை எடுத்து வைத்து ஒரு போர்க் குற்ற வாளியாக இலங்கையை நிறுத்தியிருக்கிறார்.
இட்லரை மிஞ்சிய ராஜபக்சே
குறிப்பாக இட்லரை யும் தோற்கடிக்கக் கூடிய அளவிலே ராஜ பக்சேவினுடைய கொடுங்கோல் ஆட்சி ஈழத் தமிழர்களுடைய இனப்படுகொலைக்கு வழி வகுத்திருக்கிறது. அது மட்டுமல்ல, பெண் களிடத்திலே மிக மோச மாக முறைகேடாக நடந்து ஈழத் தமிழச்சி களினுடைய வாழ்வுரி மையைப் பறித்திருக் கிறார்கள். அவமானத் தால் வரலாற்றில் கறை படிந்திருக்கிறது. இந்த கொடுமைகளை எல்லாம் எடுத்து விளக் கிடத்தான் இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்து கின்றோம்.
உலகத்தின் பற்பல நாடுகள் ஜெனிவாவில் மனித உரிமைக் கழகத் தின் சார்பிலே கூடுகின்றன.
உலகத்தின் போர்க் குற்றவாளி இலங்கை உலகத்தின் போர்க் குற்றவாளியாக இலங் கையை நிறுத்த வேண் டும் என்று பல நாடுகள் முற்பட்டிருக்கின்றன.
அமெரிக்கா முன் மொழியக் கூடிய அந்தத் தீர்மானத்தை அய்ரோப் பிய யூனியன் நாடுகள் ஆதரிக்க இருக்கின்றன. இந்த சூழ்நிலையிலே பயங்கரவாதத்தை அடக் குகிறோம் என்ற போர் வையிலே இலங்கை அரசுக்கு மத்திய அரசு துணை போய் தவறி ழைத்திருக்கிறது. தெளிவாக நாங்கள் சொல்லுகிறோம்.
தமிழ்நாடு கண்டித்திருக்கிறது
ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக, ஈழத் தமிழர் களுடைய இனப்படு கொலையைப் பற்றி மத்திய அரசு கவலைப் படாமல் பயங்கரவா தத்தை அடக்குகிறோம் என்ற பெயராலே ஏராள மான ஆயதங்களையும் கொடுத்து, இராணுவ உதவிகளையும் செய் திருப்பதை அவ்வப் பொழுது கட்சி வேறு பாடு இல்லாமல் தமிழ் நாடு கண்டித்திருக்கிறது.
இந்த சூழ்நிலை யிலேயே ஏற்கெனவே நடந்தவைகளுக்கெல்லாம் கழுவாய் தேடக் கூடிய வகையிலே ஈழத் தமி ழர்கள் முதல் ஒட்டு மொத்தமாக உலகம் முழுவதும் வாழக் கூடிய தமிழர்களின் உணர் வுகளை ஒட்டு மொத்த மாக பிரதிபலிக்கக் கூடிய வகையிலும், மிகத் தெளிவாக இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த வாய்ப்பை இந் திய அரசு, மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசுக்கு எதி ராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத் திய அரசு ஆதரிக்க வேண் டும் என்பது தலையாய கடமையாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலே மத்திய அரசிலே இடம் பெற்றிருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் அதனுடைய தலை வர் கலைஞர் அவர்கள், அதே போல தமிழகத்தி னுடைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், அதுபோல இடதுசாரி கள், இப்படி பல கட்சிகள் எந்த விதமான வேறுபாடு இல்லாமல் கட்சிகளி னாலே வேறுபட்டிருந் தால் கூட, இந்தப் பிரச்சி னையிலே நாங்கள் ஒன்று பட்டிருக்கின்றோம்.
ஒரே மேடையிலே நாங் கள் இல்லாமல் இருக்க லாம். ஆனால் ஒரே குர லிலே தான் இந்திய அரசு அய்.நா. கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கி றார்கள்.
இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு மத்திய அரசு இலங்கையை குற்ற வாளிக் கூண்டிலே நிறுத் துவதற்கு மனித உரிமை பறிப்பைக் கண்டிப்பதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் மனித உரிமை அடிப்படையிலே முன் வந்திருக்கின்றன.
ஆனால் நம்மைப் பொறுத்தவரையிலே இந்திய அரசைப் பொறுத்த வரையிலே அதற்கு இன் னும் ஒரு கூடுதலான கட மையும் இருக்கிறது. தமி ழகம் ஓட்டளித்துத்தான் மத்திய அரசு உருவாகி யிருக்கிறது.
தமிழர்களைப் பொறுத்தவரையிலே ஈழத் தமிழர்களோடு நாங் கள் தொப்புள் கொடி உறவு உள்ளவர்கள் என்ற உணர்வைப் படைத்தி ருக்கின்றோம். எனவே மனிதநேயம் மட்டும் முக்கியமல்ல. அதை விட ஆழமானது தொப்புள் கொடி உறவு. இதை மன தில் கொண்டு மீண்டும் மத்திய அரசை வலியுறுத் து வதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.
இதை தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்சியி னரும் ஒரே உணர்வை பிரதிபலிக்கிறார்கள். எனவே இதிலே இந்திய அரசு தெளிவான நிலைப் பாட்டை எடுத்து அமெ ரிக்கா கொண்டு வரக் கூடிய தீர்மானத்திற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசின் பக்கம் மத்திய அரசு சாயக் கூடாது.
நாராயணசாமி கூறியது வரவேற்கத்தக்கது
மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியதை வரவேற்கிறோம். முதல் முறையாக பிரதமர் அலுவலகத்தில் இருக்கக் கூடிய ஒரு அமைச்சர் சொல்லியிருக்கிறார் என்றால் அதற்கு பொறுப் புண்டு. அதிலே அவர்கள் கவலை எடுத்திருக்கி றார்கள். தமிழகத்தினு டைய குரல் இதற்கு முன்னாலே எப்படியி ருந்தாலும் இப்பொழுது கேளாக் காதினராக இருக்கப் போவதில்லை என்பதற்கு நல்ல அறிகுறி இது.
இந்த உணர்வு வளரட் டும் தெளிவான முறைகள் ஏற்படும் அதை வலியு றுத்துவதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம். மத்திய அரசுக்கு இது ஒரு வேண்டுகோள் ஆர்ப் பாட்டம்.-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி பேசினார்.
கலந்து கொண்டோர்:
இந்த ஆர்ப்பாட்டத் தில் திராவிடர் கழக பொருளாளர் வழக்க றிஞர் கோ.சாமிதுரை, திராவிடர் கழக பொதுச் செயலாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, கழக தலைமை நிலைய செய லாளர் வீ.அன்புராஜ், கழக துணை பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரன் ஆகிய முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வடசென்னை, தென் சென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி, கழக மகளிர்கள் மற்றும் வெளியூரிலிருந்து தோழர்கள்கலந்து கொண்டனர்.
ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், டி.கே.நடராசன், கு.தங்க மணி, புதுச்சேரி வே. அன்பரசன், ராமேஸ்வரம், சிகாமணி, இரா.வில்வ நாதன், எம்.பி. பாலு, சைதைமதியழகன், மயிலை சேதுராமன், ஊமை செயராமன், சிதம் பரம் அருள்ராஜ், கண் ணன், செல்வரத்தினம், தாம்பரம் ப.முத்தையன், நெய்வேலி வெ.ஞான சேகரன், அ.கோ.கோபால் சாமி, வெற்றிச்செல்வி, இறைவி, துரை.மீனாட்சி, பசும்பொன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மஞ்சுநாதன், தி.வே.சு. திருவள்ளுவர், செம்பியம் கி.இராமலிங்கம், சுமதி கணேசன், பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், கனகா, மணியம்மை, பசும்பொன், செ.தமிழ் சாக்ரடீசு, கும்மிடிப்பூண்டி தோழர்கள்:  செ.உதய குமார், த.ஆனந்தன், பழனி பன்னீர்செல்வம், சக்கரவர்த்தி, கசேந்திரன், வெ.அருள், பாலு, ஆனந் தகுமார், புழல் கோபி.
ஆவடி தோழர்கள்: ம.ஆ.கந்தசாமி, முத்துகிருஷ்ணன், ஏழுமலை, உ.கார்த்தி, தமிழ்மணி, உடுமலை வடிவேல்,மேகலா, செல்வி,பெரியார் மாணாக்கன், இளங்கோ  பா.தென்னரசு, கோ.முருகன், அ.அருண்,வே.கார் வேந்தன்,ராமப்பா, மோகனபிரியா, ந.அன்பு, நெடுங்கிள்ளி, இரணியன், அனுசியா, அறிவுமணி, ராமண்ணா, மொழியன்பன், செல்வம், ரவிச்சந்திரன், அன்புமணி மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
பழ.வெங்கடாசலம் மண்டலச் செயலாளர் வேலூர், அண்ணா. சரவணன் மாநில ப.க. து.தலைவர், வி.ஜி. இளங்கோ மாவட்ட செயலாளர் திருப்பத் தூர்.
தி.தொ.கழகம் நாக ரத்தினம், ராமலிங்கம், வழக்கறிஞர் ஜெ.துரை, பெ.செல்லவராஜ் ஆலன் ஆகியோரும் மற்றும் திரளானோரும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கு எதிராக மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரைமணி நேரம் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களை விண் ணதிர முழங்கினர்.
நிறைவாக தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில் வநாதன் நன்றி கூறி னார்.















இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...