Saturday, February 4, 2012

மநுநீதிக்கு வக்காலத்தா? புதிய வக்கீல் பதில்


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மநுநீதியை இன்று அலசி, ஆய்ந்து பார்ப்பது தேவை யற்ற வேலையல்லவா? இன்று நம்மை கட்டுப்படுத்துவது இந்திய அரசியல் சாசனமும், சட்டங்களும்தானே, மனுவைப் பற்றி நமக்கேன் கவலை? என்று நினைக்கும் வாசகர்கள் நினைவில் வைக்க வேண்டியது:
னமநுநீதி போன்ற தர்மசாஸ் திரங்களை முழுமையாக நம்பியவர் கள்தான் இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தையும், பின்னால் சுதந்திர இந்தியாவின் இந்து சிவில் சட்டம் இயற்றப்பட்டதையும் முழு மூச்சாக எதிர்த்தவர்கள்.
னஇவர்களின் வாழையடி வாழையாக வந்துள்ள சங்பரிவார் கூட்டத்தினரின் இந்து ராஜ்யத்தில் மநுநீதி மீண்டும் தலை தூக்கும் வாய்ப்பு நிஜமானது. இவர்கள் பார்வையில், மநுநீதி காலாவதியாகிப் போன, பெண்ணுரிமைக்கும், சமூக நீதிக்கும் எதிரான, நாம் குழி தோண்டி புதைக்க வேண்டிய மூத்த பொய்மை அல்ல. இந்து மதத்தின் போற்றப்பட வேண்டிய பொக்கிஷம்.
இப்படிச் சொல்வதை சிலர் நம்பாமல் போகலாம். ஆனால் இந்து ராஜ்ய வாதிகளையே பேச வைப் போம். இவர்களின் பழம்பெரும் குருவான கோலவால்கர் சொற்பாடி மனித குலத்தின் முதன்மையான, மிகச் சிறந்த, மாமேதையான சட்ட நிபுணர் மநுதான். குருஜி பழங் காலத்து மனிதர். ஏதோ சொல்லி யிருக்கலாம் என்று விட்டுவிட் டாலும்.
இவ்வியக்கத்தை சார்ந்த நவீன காலவாதிகளும் இதையே தான் சொல்கிறார்கள்! விஸ்வ இந்து பரிஷத் நடத்திய இந்து வழக்குரை ஞர்களின் இரண்டாவது மாநாட்டில் (ஏப்தல் 18-19, 1992) உரையாற்றிய உத்தரப் பிரதேசத்தின் அட்வகேட் ஜெனரல், மநு ஸ்மிருதி அனை வருக்கும் நியாயம் வழங்கியது. இது எக்காலத்திற்கும், மனிதகுல முழு மைக்கும் ஏற்றது என்று சர்டிபிகேட் வழங்கினார்.
பெண்கள்,சூத்திரர்கள், வைசியர்கள்,சத்திரியர்கள் ஆகியோரைக் கொலை செய்வது மைனர் குற்றமாகும்... பெண் வேத மந்திரங்களை ஓத முடியாது. அவள் பொய்க்குச் சமம் என்ற சாதீய, பெண் அடிமைத்தன நியதிகளைக் கொண்டதுதான் மநுதர்மம் என்பது அட்வகேட் ஜெனரலுக்கு தெரியாமல் இருக்க முடியாது. தெரிந்தும் அவர் மநு தர்மம் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று கூறியிருப்பது, இவர்களுடைய இந்து ராஜ்யத்திலும் மநு (அ) தர்மம் கொடி கட்டிப் பறக்கும் என்பதற் கான எச்சரிக்கைதான்.
மநுதர்மம் தான் இந்து தர்மமா?
இவ்விடத்தில் இது சம்பந்தப் பட்ட மற்றோர் அம்சத்தையும் குறிப்பிட வேண்டும். இவர்கள் போற்றும் மநுதர்மம் எல்லா இந்துக்களுக்கும் பொதுவானது என்ற பார்வை தவறானது.
புராதன இந்தியாவில் அனைவரையும் கட்டுப்படுத்திய பொதுவான இந்து மதம் சார்ந்த சட்டங்கள் ஏதுமில்லை. உண்மை யில் அக்காலத்து மக்கள் தங்களை இந்துக்களாக உணரவில்லை. பல்வேறு உபசாதிகளை, சைவம், வைணவம் போன்ற பிரிவுகளை சார்ந்தவர்களாகவே உணர்ந்தனர். ஜாதி அடிப்படையில் பழக்க வழக்கங்கள், சம்பிரதாய சடங்குகள் வேறுபட்டன. உயர் ஜாதிகளில் பெண்கள் ஒடுக்கப்பட்ட அளவிற்கு பிற்படுத்தப்பட் ஜாதிகளில் கட்டுப் பாடுகள் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சி யின் நிருவாக வசதியை முன்னிட்டு, இந்துக்களை கட்டுப்படுத்துவதற் கான கோட்பாடுகளை வரைய றுக்கும் பணி சில பண்டிதர்களிடம் விடப்பட்டது. பார்ப்பன ஜாதியை சார்ந்த இப்பண்டிதர்கள், மிசச் சிறுபான்மையினராக உயர்ஜாதி களைக் கட்டுப்படுத்திய மநுஸ்மிருதி, தர்ம சாஸ்திரம் போன்ற நூல்களின் அடிப்படையில் சமூக நியதிகளையும் ஒழுங்கு முறைகளையும் தொகுத் தளித்தனர். ஆகவே, பார்ப்பனீய மரபுகளும் மாண்புகளும், இந்து என்ற லேபில்- பெற்று பெரும் பான்மை சமூகத்தினரின் மரபுகளாக மாற்றப்பட்டன. இதன் விளைவாக பெரும்பான்மை மக்கள் குறிப்பாக பெண்கள் அனுபவித்து வந்த ஓரளவு சுதந்திரத்தையும் இழந்தனர்.
-மைதிலி சிவராமன்
- நன்றி : (தீக்கதிர் 29.1.2012)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...