Friday, January 13, 2012

துறந்தார் வஞ்சித்து வாழ்வார்

- மா.பால்ராசேந்திரம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
- என்பார் திருவள்ளுவர்.

அனைத்துயிர்களும் ஒன்றென்றெண் ணிப் பேணிக் காத்து வாழ்ந்தவர் தமிழர். சிற்றுயிர்களுக்கும் அருளொடு கூடிய அன்பினைத் தந்து வாழ்ந்தவர் தமிழர் என்பதனை திருவள்ளுவர் புலால் மறுத்தல் வழிக் கூறுகிறார். சுரா பானமும், சோம பானமும் வேண்டா, அவியுணவும், வேள்வித் தீயில் வெந்தழிந்த விலங்குகளின் ஊனையும் வேண்டாவென விலக்கி வாழ்ந்தவர் தமிழர். கள்ளுண்ணல், நஞ்சுண்டு மதி மயங்கிடும் நிலையுடையோராவரெனக் கருதி வெறுத்து வாழ்ந்தவர்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

ஆனால், தமிழர்களுக்கு அந்நியராய், இந்நாட்டிற்குள் புகுந்த ஆரியப் பார்ப்பனர்கள், தமிழர்கள் கொண்டு ஒழுகிய ஒழுக்கத்தின் நீங்கியவராய் நடைபோட்டனர். அவ்வாறே நாளும் வாழ்க்கையை நடத்தி வந்தனர் என்றால் அதில் எள்ளளவும் அய்யமில்லை.

கொலைகாரர்கள்: ஆரிய பார்ப் பனர்கள் அசைவ உணவு விரும்பி களாய் இருந்தனர். இந்நாட்டு மன்னர் களையும் மண்டூகங்களாக்கி மண்டி யிடச் செய்தனர்.
அரசர்களின் மாளிகைகளில் பார்ப்பனர்க்கு
விருந்து படைக்க 2000 சமையற்காரர்கள்
இருந்தனர். நாளொன்றுக்கு 2000 பசுக்கள் வீதம்
கொல்லப்பட்டன. மாமிசம் குறைவானதால் சூப்பைச்
சாப்பிடத் தந்தனர்- - மகாபாரதம்
இன்று கோமாதா எங்கள் குலமாதா எனக் கோமாளிக் கூத்தாட்டம் போட்டுக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கொள்கை வழி, மக்களை உயர்த்திடப் பாடுபட்ட தமிழர்களின் இரட்சகர் காமராசரைக் கொல்ல எத்தனித் தவர்கள் தாம் அன்று கோமாதாக் களைக் கொன்று தின்றவர்கள்.
முன்னங்காலில் பிரம்மனும், பின்னங்காலில் ருத்திரனும் சாணி போடும் பின் பாகத்தில் விஷ்ணுவும் இருக்கிறார்கள். வலது கொம்பில் கங்கை ஆறும், இடது கொம்பில் யமுனை ஆறும், குளம்புகளில் வேதங்களும் இருக்கின்றன. பால்தரும் மடியில் கடலும், மூத்திரம் வரும் வால்புறத்தில் இலட்சுமியும் இருக் கிறாள் (தினமலர் 2008) சிவன் மலவாய்வழிக் கலவி செய்து கோரக் நாத் என்ற குட்டிக் கடவுளைப் பிறப்பித்தான் எனக் கதைகட்டிக் கோமாதாவுக்குச் சிறப்புப் பாயிரம் பாடுகிறவர்கள் தாம் பசுவைக் கொன்று தின்றார்கள். இல்லை.....இல்லை... கோமாதாவைக் கொன்று தின்றார்கள். அதுவும் கூடத் தவறு. கடவுள்கள் வாசம் செய்து வாழும் இடங்களைச் சுட்டுப் பொசுக்கி வறுவலாக்கித் தின்றார்கள்.

வாஜபேயம் என்ற பெயரில் யாகம் நடத்திப் பெண்ணோடு பொது இடத் தில் கலவி செய்து, பசு உட்பட பல விலங்குகளைப் பலியிட்டதோடு மனிதரையும் பலியிட்டு மிருக வாழ்வு வாழ்ந்த பார்ப்பனர்கள் நல்லவராய் நம்முன் நடிக்கின்றனர். அரவானைப் பலியிட்ட நரகர்கள்.

நல்லோரைக் கெடுக்க வேண்டும், அறிவிற்செறிந்தோரைத் தலைகுனிந் திடச் செய்ய வேண்டும், நீதி வழுவா, நந்நெறிக்குச் சொந்தக்காரர்களின் குலப்பெண்களை அவமானத்திற்குள் ளாக்கிட வேண்டுமெனத் திட்டம் வகுத்துச் செயல்படுத்தித் திரிந்த தெரு விலங்குகள் பார்ப்பனர்கள்.

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவால வாயருள்
பெண்ணகத் தெழில் சாக்கியப் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!
உள்ளத்தில் வஞ்சனை கொண்டு உலகப் பொதுமறை தந்த உயர்ந்த தமிழர் முன் எவ்வாறு இத்தனையாண்டுகள் பாதுகாப்பாய் வாழ்ந்து வருகின்றனர்? அதுமட்டுமின்றி,
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணி.....
எனவும் தமிழிலக்கணத்தில் அரண் செய்து கொண்டு அணியமாய் வாழ்ந்து வருவதற்குத் தமிழ்நிலம் வகை வகுத்துத் தந்துள்ளதே!
வியப்புத்தான்.
ஒழுக்கக் கேடர்கள்:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
 
தமிழர்தம் ஒழுக்க வாழ்வியல் நெறிகளுக்கு அன்னியமாய் வாழ்ந்தவர் ஆரியப் பார்ப்பனர். குடும்ப வாழ்வின் கட்டுகளை மீறி வாழ்ந்தவர். புத்திரர் நிமித்தம் ஆணானவன் தன் தாயோடு, தமக்கையோடு, மகளோடு உடலுறவு கொள்வது தப்பிலையெனக் கூறி முனைந்து செயல்பட்டவர்கள்.
மாதர முபைத்ய கஸாரமுனபதி புத்ரார்தீத
சகாமார்த்தி நாபத்ரலோகா நாஸ்தீத
ஸர்வம்பரவோ விந்துஹஃ தஸ்மாத் புத்ரார்த்தம்.
தமிழினம் குறுகிப் போய்விட வேண்டுமென்ற கெட்ட நினைப்பில் மந்திரம் செய்து தமிழர்களை மயங்கிடச் செய்தவர்கள் பார்ப்பனர்கள்.
மனிதநேயமற்றோர்: சூத்திரர், கிறித்தவர், முஸ்லிம், நாட்டுப்பற்றாளர் அல்லர். இந்த குழுவைச் சேர்ந்தவர் களால் சமைக்கப்பட்ட உணவை உண்ணுகின்ற மற்றவர்கள், சமைத்தவர் யாரென்று கவலையில்லாமல் தின்று விடுகின்ற நாய், பூனை போன்ற விலங்கிற்கு ஒப்பாவர் என்கிறார் பூரி சங்கராச்சாரிப் பார்ப்பனர். இத்தனை வஞ்சகம் உள்ளத்தில் உறைந்திருந்த போதிலும் வெளியுலகிற்கு நல்லவராய் வேடம் புனைந்து நர்த்தனமாடு கின்றனர். ஆரியத்திற்கு ஆபத்து என்றால், ஜைனன், முஸ்லிம், கிறித்தவன், பார்சி அல்லது யூதன் என இருந்தாலும் அனைவரும் இந்துதான் என்று அடைகொடுக்க அனைத்து மக்களையும் அரவனைப்போர் போலக் காட்டிட, ஏமாற்றிட இந்துராஷ்டிரம் (பக்கம் 24) புத்தகத்தில் எழுதிக் காட்டியுள்ளனர்.
அதேவேளையில் பெரும்பான்மை உழைப்பாளி மக்களைச் சூத்திரர்கள் என இழித்துக் கூறியோர் சூத்திர மக்களின் உழைப்பினால் சிந்திய குருதி யால் உருவான கோயிலுக்குள் அம்மக் களை நுழையவிடாது ஆகமங்கள் செய்து தடுத்த மனிதநேயமற்றவர்கள். கறையான் புற்றெடுக்கக் கருநாகம் புகுந்தாற்போல் தமக்குக் கடுகளவும் உரிமையில்லாக் கோயிலுக்குள் நுழைந்துகொண்டதோடு உரிமை யுடைய மக்களைக் கோபுரத்தை எட்டி நின்று கண்டு, வணங்கிச் செல்லுமாறு பணித்த அயோக்கிய சீவன்கள் ஆரிய பார்ப்பனர்கள்.

கல்வித்ர மறுத்தோர்: ஸ்நானம் அஸ்வம் கஜமத்தம்
ரிஷபம் காம மோஹிதம் சூத்மஷர சம்யுக்தம்
தூரதப் பரிவர்ஜ்ஜயேல்
படித்த சூத்திரனை (தமிழனை)ப் பக்கத்தில் சேர்க்காதீர் என அக்கிர காரத்திற்கு ஆணையிட்டு ஆண்ட பரம்பரையைக் கல்வியின்றிக் கவிழ்த்த வர்கள். எழுத்தோடு மட்டுமின்றி,

சூத்திரன் எவ்வளவுதான் படித்து அறிவாளியாக இருந்தபோதிலும் அவனை நான் பிராமணனுக்குச் சமமாகக் கருத மாட்டேன் எனப் பூரி சங்கராச்சாரிப் பார்ப்பான் வாய்வழிக் கொழுப்பேறிக் கொக் கரித்துத் திரிகின்ற இழிந்த பிறவிகள். இவர்கள் தாம் தங்களை உயர்ந்த பிறவி களாய்ப் பறைசாற்றிக் கொள்கின்ற தற்பெருமைக்காரர்கள், ஈனப் பிறவிகள்.
ப்ராஹ மனோஸ்ய முகமாளித்
பாஹிரா ஜன்ய க்ருத
ஊருத தஸ்ய யத்வைஸ்ய
பத்வியாகம் ஸீத்ரோ அஜாயத்

இந்த (அ) யோக்கியர்கள் தாம் தங்களைத் தாங்களே பிர்மாவின் முகத்திலிருந்து பிறந்தோம், எனவே நாங்கள் உயர்ந்தோராவோம் எனச் சொல்லிக் கொண்டனர். எத்தனை கொலைகள்? அயோக்கியத்தனங்கள் பல புரிந்தாலும், நெறிகெட்டுத் திரிந்தாலும், வஞ்சனையால் மண்ணுக்குரியோரைச் சிதைத்தழித்தாலும் இலக்கண முறை தப்பித் தம்மை உயர்ந்தோராய் கேவல மாய் ஆக்கிக் கொண்டவர்கள் பார்ப் பனர்கள்.

தெய்வாதீனஞ் ஜகத் சர்வம்
மந்த்ரா தீனந் துதைவதம்
தன்மந்த்ரம் ப்ராஹ்மனோ
தீனம், ப்ராஹ்மணா மமதைவதம்
எனத் தங்களை வழிபாட்டுக்குரி யோராய் மக்கள் முன் கொண்டு சென்றவர்கள். மறுத்தோரைத் தன் வயப் படுத்திடக்  கடவுளையே நாங்கள்தான் படைக்கும் தகுதி படைத்தோர் என மிரட்டிப் பணிய வைத்தவர்கள். மனிதனை மனிதன் அடிபணிந்து சென் றிட வழி வகுத்தவர்கள். தங்களையே சாமியாக ஆக்கிக் கொண்ட நயவஞ்சக ஓநாய்க் கூட்டத்தினர்.

தமிழர்களிடம் நல்லவராய் இன்றும் நடித்திடும் ஆரியப் பார்ப்பனர்கள் திருவள்ளுவர் கூறியதைப் போல் நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்

உள்ளத்தில் தமிழர் மீது வெறுப்புக் கொண்டு வஞ்சனை செய்து வாழ்பவராவர். போலியாக, ஆசை களைத் துறந்து அனைத்துயிர்களுக்கும் அருளைத் தந்திடும் துறவோராக நடிப்பவர்கள். இவர்களை எச்சரித்துத் தான் அய்யா பெரியார் 1949_இல் சொன்னார்கள். பார்ப்பனர்களுக்கு ஒன்று கூறுகின்றேன். நீங்கள் கடவுள், சாஸ்திரம், மதம்மீது பழிபோட்டு நாட்டுக்குரிய, நாட்டை ஆண்ட எங்கள் இனத்தவர்களை ஏமாற்றிப் பிழைத்ததை மூட்டை கட்டி வைத்து விட்டுப் பகுத்தறிவுக்கு இடம் கொடுங் கள், மனிதத் தன்மையை வளருங்கள் என்று.

திருந்தாத ஜென்மங்களைத் திருத் திடுவது சுயமரியாதைக் காரர்களின் பணியாக இருக்க வேண்டும். அதற்கு நம் தலைவர் இருக்கிறார் ஆணையிட தமக்கு என்று மிகவும் ஏற்புடைய இலக்கை எட்டுவதற்குத் தொடர்ந்து தடுமாற்றம் இன்றிப்போராடுகிறவர் வீரமணி என்று சி.பி.எஸ்.ஈ. கல்வித் தேர்வில் மதிப்பெண் முறைகேட்டு வழக்கில் நீதிபதி பிரபா சங்கர் மிஸ்ராவால் பாராட்டப்பெற்ற தலைவர் நம் தலைவர்.

கருஞ்சட்டைத் தோழர்களே! சரியான தலைமையின் கீழ்ப் பணி புரிகிறோம். அந்த தலைமை காட்டும் இலக்கு நோக்கிப் பயணித்திடுவோம். வஞ்சகர்களின் வாலினை இன்னும் ஒட்ட நறுக்கிடத் தலைவர் பின் தொடர்ந்திடுவோம். அழிந்திடும் பார்ப்பனக் கூட்டத்தின் செய்திகளை அகில இந்திய வானொலி, வானொளிகள் தெரிவிக்கும் முன் நம் இயக்கத்தின் கேடயமாம் விடுதலையே தெரிவித்திட வீடு தோறும் கொண்டு செல்லத் தயாராவோம்! தயாராவோம்!!

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...