Tuesday, January 31, 2012

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை


உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. அரசியல் கட்சிகள் தத்தம் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன.
குறிப்பாக பாரதீய ஜனதா கட்சி தன் தேர்தல் அறிக்கையில் இரண்டு அறிவிப்புகளை இடம் பெறச் செய்துள்ளது.
1) ஆட்சிக்கு வந்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமன் கோவிலைக் கட்டுவோம் என்பதாகும்.
1992 டிசம்பர் 6இல் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்வு செய்து 450 ஆண்டு கால வரலாறுபடைத்த சிறுபான்மையினரின் வழி பாட்டுத் தலமான பாபர் மசூதியை இதே பி.ஜே.பி. கும்பல், தன் வானரப்படையான ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் (பஜ்ரங் என்றால் குரங்கு) விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சிவசேனா போன்ற ஹிந் துத்துவா சக்திகளின் துணையோடு வெறித் தனமாக இடித்துத் தரைமட்டமாக்கி விட்டன.
20 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும், இதற்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை. தண்டிக்கப்பட்டு இருந்தால் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் தேர்தலில் நிற்கவே முடியாது.
வீராதி வீரம் பேசும் இவர்கள், சட்டத்தின் சந்து பொந்துகளில் வளைந்து நெளிந்து ஓடி வழக்கு விசாரணையை நேரில் சந்திக்கும் திராணியின்றி, கோழைத்தனமாக புறமுதுகு காட்டி ஓடி ஒளிந்து கொண்டு திரிகின்றனர்.
தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி என்று வார்த்தை வடிவில் அழகாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை அது வெறும் காகித அம்பு - ஏட்டுச் சுரைக்காய்தான்!
சட்டம் நம்மைத் தீண்ட முடியாது என்கிற அசட்டுத் துணிவில் அதிகார பூர்வமான தேர்தல் அறிக்கையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமன் கோவிலைக் கட்டுவோம் என்று வீராவேசமாக இடம் பெறச் செய்துள்ளனர்.
ராமன் என்று சொன்னால் பக்திப் போதை ஏறி, தங்கள் பக்கம் நின்று வாக்களிப்பார்கள் என்ற நினைப்பு அவர்களுக்கு. இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்கத் தவறக் கூடாது. பாபர் மசூதியை இடித்தவர்கள் - அந்த இடத்தில் ராமன் கோவிலைக் கட்டுவோம் என்று அதிகார பூர்வமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மையை (Secular State) எப்படிக் காப்பாற் றுவார்கள் என்ற கேள்வி அடிப்படையானது. இந்த முக்கியமான பிரச்சினையைத் தேர்தல் ஆணையம் எப்படி அணுகுகிறது? அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி எப்படிப் பார்க்கிறது?
பி.ஜே.பி.யின் இந்தத் தேர்தல் உறுதிமொழியை மய்யப்படுத்தி நீதிமன்றம் சென்றால்  தீர்ப்பு பி.ஜே.பி.க்கு எதிராக வரவே வாய்ப்புகள் அதிகம். இதைப்பற்றி பி.ஜே.பி. அல்லாத அரசியல் கட்சிகள் ஏன் சிந்திக்கக் கூடாது?
2) இரண்டாவதாக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மை மக்களான முசுலிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மாட்டோம் என்று வெளிப் படையாகவே அறிவித்துவிட்டனர்.
மதவாதம்தான் பி.ஜே.பி.யின் பிரதான கொள்கையும், கோட்பாடும், அணுகுமுறையும் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு சிறுபான்மை மக்கள் மத்தியில் மட்டுமல்ல; சமூக நீதியில் நம்பிக்கையுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பி.ஜே.பி.யின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் உ.பி. தேர்தலில் இவற்றை முதன்மைப்படுத்திப் பிரச்சாரம் செய்ய வேண்டும்; அந்த எதிரொலி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்க வேண்டும்.
இந்தத் தேர்தலோடு இந்த மதவாதச் சக்திகள் கடை விரித்தேன் - கொள்வாரில்லை என்று கடையைக் கட்டிக் கொள்ள வேண்டும் - செயல்பட வேண்டும் - எங்கே பார்ப்போம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...